tag:blogger.com,1999:blog-17531639.post115683904873735816..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 31.செவ்வானமே செந்தாமரையேG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17531639.post-1158074006861944862006-09-12T11:13:00.000-04:002006-09-12T11:13:00.000-04:00//விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில்...//விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில் காணும் செந்நிறம் எத்தனை சுகமானது. பார்க்கப் பார்க்கத் திகட்டாடது. அத்தகைய செம்மையானவர் முருகன் என்பது அருணகிரி வாக்கு. இதை வேறுவிதாமகவும் பார்க்க வேண்டும். வானத்தின் செம்மை உதயத்திலும் அஸ்தமனத்திலும் விளங்கும். முருகனின் செம்மை இன்பத்தின் உதயத்திலும் துன்பத்தின் அஸ்தமனத்திலும் விளங்கும். ஆகையால்தான் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்" என்று புகழ்கிறார் //<BR/><BR/> அருமை.<BR/><BR/>வானம் செம்மையாகத் திகழும் சூரியன் தோன்றும் மற்றும் மறையும் நேரங்கள் சந்தியா காலம் எனப்படும். இறை வழிபாட்டுக்கும் மனமொன்றி தியானம் செய்வதற்கும் மிக உகந்த காலங்கள்.<BR/><BR/>சிவபெருமான் நெற்றிகண் நெருப்பிலிருந்து உருவானதால் செந்நிறம் உடையவர். வடமொழியில் "அக்னிபுவ' ஏன்றும் பெயர் உண்டு. தமிழிலும் முருகனுக்கு செய்யோன் (செம்மை நிறத்தவன்) என்ற பெயர் உண்டு.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1157170010322826432006-09-02T00:06:00.000-04:002006-09-02T00:06:00.000-04:00குமரன்வந்ததற்கும் பொருள் தந்ததற்கும் நன்றி.//பட்டு...குமரன்<BR/>வந்ததற்கும் பொருள் தந்ததற்கும் நன்றி.<BR/><BR/>//பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ.//<BR/>பெருமாளை "முக்கண்ணப்பா" என்று ஆழ்வார் அழைப்பார். ஆனால் "பரஞ்சோதி" என்று ஆழ்வார் அழைப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். <BR/><BR/>//ரவிசங்கர். இராகவனைக் கேட்டாலே சொல்லியிருப்பாரே!!//<BR/>சர்க்கரைப் பந்தலில் தேன் மாரியும் பொழிய வேண்டுமே; அதற்குத் தான் உங்களையும் உள்ளிழுத்தோம். :-)<BR/>மீண்டும் நன்றி.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1157061771400623942006-08-31T18:02:00.000-04:002006-08-31T18:02:00.000-04:00//ஆழி மாயனின் நீல வண்ணம் குறித்தும் பொருள் உரைத்தா...//ஆழி மாயனின் நீல வண்ணம் குறித்தும் பொருள் உரைத்தால், மனம் மகிழும். குமரனைக் கேட்டால், மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் :-)<BR/>//<BR/><BR/>ரவிசங்கர். இராகவனைக் கேட்டாலே சொல்லியிருப்பாரே!!<BR/><BR/>கடலுக்கும் வானுக்கும் நீல நிறம். கண்ணனுக்கும் நீல நிறம். உங்களுக்குத் தெரிந்தே தானே கேட்டீர்கள்?! ஆழி மாயன் என்று சொல்லும் போது திருவாழியான திகிரியைக் கையில் கொண்டவன் என்ற பொருளும் ஆழியாகிய கடல் வண்ணன் என்ற பொருளும் உண்டல்லவா? கடல்வண்ணன்; கார்வண்ணன் என்பதெல்லாம் அவன் பெயரல்லவா? எங்கும் நிறைந்த இறையை எந்நிறமும் இல்லாத கருநிறமாய்க் கண்டனர் முன்னோர். ஆனால் செம்மையிலும் விருப்பம். அதனால் அவன் அங்கங்களுக்கு செந்நிறம் இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1157061546127493552006-08-31T17:59:00.000-04:002006-08-31T17:59:00.000-04:00//அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்எவ்வாறு ஒருவர்க்க...//அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்<BR/>எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!<BR/>//<BR/><BR/>நானே வழியாக இருக்கிறேன் - இயேசு நாதர். <BR/><BR/>எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணடை. நான் உன்னை எல்லா விதமான பாபங்களில் இருந்து விடுவித்து விடுகிறேன். கவலை வேண்டாம் - கீதாசார்யன். <BR/><BR/>அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - வாதவூரார்<BR/><BR/>இந்தக் கருத்து திரும்பத் திரும்ப எல்லா திக்கிலும் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நாம் தான் உணர்வதில்லை போலும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1157061318067027422006-08-31T17:55:00.000-04:002006-08-31T17:55:00.000-04:00இன்னொரு பாசுரத்தில் நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை அ...இன்னொரு பாசுரத்தில் நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை அழகரசப் பெருமாளை (சுந்தரராஜப் பெருமாள்) இப்படிப்பாடுகிறார்.<BR/><BR/>கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா, <BR/>சுட்டுரைத்த நன் பொன்னுன் திருமேனி ஒளி ஒவ்வாது, <BR/>ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், <BR/>பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2. <BR/><BR/>விளக்கிச் சொல்லப் புகுந்தால் தாமரை உன் கண்கள், கால்கள், கைகளின் அழகுக்கும் செம்மைக்கும் ஒவ்வாது. சுட்டு உரைத்த நன்பொன்னின் ஒளியும் நிறமும் உன் திருமேனியில் ஒளிக்கு ஒவ்வாது. கூடி நின்று இவ்வுலகத்தாரெல்லாம் உன்னைப் புகழ்கிறார்களே அந்தப் புகழ்ச்சியெல்லாம் பயனில்லா உண்மைக்கு வெகுகீழே உள்ளதான புகழ்ச்சிகளாகக் காட்டுகின்றாயே பரஞ்சோதீ. <BR/><BR/>இப்படி எத்தனையோ எடுத்துக் காட்டலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1157025279722845152006-08-31T07:54:00.000-04:002006-08-31T07:54:00.000-04:00நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றும் நினைவிற்கு வருகிறது....நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றும் நினைவிற்கு வருகிறது. <BR/><BR/>ஒருவண் ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே<BR/>செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்<BR/>கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்<BR/>செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே<BR/><BR/>அழகில் சிறந்த கிளியே! ஒரே நோக்கத்தோடு சென்று எனக்காக ஒரு சொல் சொல்வாய நீ. ஒன்றை ஒன்று அழகில் மிஞ்சும் பூக்களை உடைய பொழில்களும் செந்நிறம் பொருந்திய கடற்கரையையும் உடைய திருவண்வண்டூர் செல்வாய். அங்கே இருக்கும் பல வண்ண மலர்களைக் கண்டு மயங்கிவிடாதே. எம்பெருமான் அடையாளங்களைச் சொல்கிறேன் - கருவண்ணம், சிவந்த வாய், சிவந்த கண், சிவந்த கை, சிவந்த கால், போரில் வில்லும் சக்கரம், சங்கு - இவ்வடையாளங்களைக் கண்டு அவனிடமே சென்று என்னைப் பற்றி ஒரு வார்த்தை சொல்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1157024493124323272006-08-31T07:41:00.000-04:002006-08-31T07:41:00.000-04:00செவ்வான் உருவில் திகழ் வேலவன் என்பதும் சிவந்தவன் ச...செவ்வான் உருவில் திகழ் வேலவன் என்பதும் சிவந்தவன் சிவன் என்பதும் தெரிந்தது. அபிராமி பட்டரும் அன்னையைப் பற்றிப் பாடத் தொடங்கியதும் பாடுவது முழுதும் சிவந்த அவள் திருவுருவத்தையே!<BR/><BR/>உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்<BR/>உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்<BR/>மாதுளம் போது<BR/>மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி<BR/>மென்கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி<BR/>அபிராமி என்றன் விழுத்துணையே.<BR/><BR/>பாடலின் விளக்கம்: <BR/>http://abiramibhattar.blogspot.com/2005/10/1.htmlகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1156981094065407032006-08-30T19:38:00.000-04:002006-08-30T19:38:00.000-04:00"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?"இதற்கு, என்னால் ..."எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?"<BR/><BR/>இதற்கு,<BR/> என்னால் எப்படி இன்னொருவர்க்கு எடுத்தியம்ப முடியும்? <BR/>என்பது இன்னும் சரியாக இருக்குமோ? <BR/><BR/>மேலும், இன்னொரு நிகழ்வையும் சொல்ல ஆசைப்படுகிறேன்!<BR/><BR/>அருணையார் இவ்வுலக வாழ்வை வெறுக்கிறார்!<BR/><BR/>கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவுறுகிறார்!<BR/><BR/>யாரும் பார்க்காத அந்தி நேரத்தைத் தெரிவு செய்கிறார்!<BR/><BR/>குதிக்கிறார்!<BR/><BR/>அப்போது முருகன் வந்து ஆட்கொள்ளுகிறார்!<BR/><BR/>அந்நேரம் செவ்வான நேரம்! அந்தி நேரம்!<BR/><BR/>அதோடு கலந்த உருவுடன் முருகன் வந்ததையே, <BR/>"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று உணர்வித்தான்" <BR/>என அந்தக் குறிப்பிட்ட நேரத்தைச் சொல்கிறார் அருணகிரிநாதர்!<BR/><BR/>முருகனருள் முன்னிற்கும்!<BR/><BR/><BR/><BR/>//அசால்ட்டுக்குத் தமிழ்ச் சொல் என்ன? //<BR/><BR/>மிக இயல்பாக???VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1156974906833230952006-08-30T17:55:00.000-04:002006-08-30T17:55:00.000-04:00பதிவை இருமுறை படித்துவிட்டேன் இராகவன். பலவிதமான எண...பதிவை இருமுறை படித்துவிட்டேன் இராகவன். பலவிதமான எண்ணங்கள் எழுகின்றன. ஒவ்வொன்றாக எடுத்து எழுதவேண்டும். மீண்டும் வருகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1156974558981662132006-08-30T17:49:00.000-04:002006-08-30T17:49:00.000-04:00//செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அன...//செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள். தாமரை மலரும் சிவப்பு. ஆக திருவடிகளும் சிவப்பு. மேனியும் சிவப்பு. //<BR/><BR/>இராகவன். கருமையே பெரும்பாலும் மேனி நிறமாகக் கொண்ட தமிழர்கள் சிவப்பு நிறத்தை தெய்வமாகக் கண்டார்கள் என்பது வியப்பூட்டும் உண்மை. தென்புலத்தார் என்று இறந்தவர்களைக் குறிப்பிடுவதற்கும் ஏதோ வரலாற்று அடிப்படையான காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன் (குமரிக்கண்டம்) அது போல இறைவனை செம்மைக்குணமுடையவனாகப் பார்த்ததில் ஏதோ காரணம் இருக்கவேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1156966109069856212006-08-30T15:28:00.000-04:002006-08-30T15:28:00.000-04:00அசால்ட்டுக்குத் தமிழ்ச் சொல் என்ன? ரொம்பவும் லேசாக...அசால்ட்டுக்குத் தமிழ்ச் சொல் என்ன? ரொம்பவும் லேசாக என்று சொல்லலாமா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1156966071814817912006-08-30T15:27:00.000-04:002006-08-30T15:27:00.000-04:00// kannabiran,Ravi Shankar (KRS) said... //பொதுவாக...// kannabiran,Ravi Shankar (KRS) said... <BR/>//பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள்//<BR/><BR/>ஜிரா...ஒவ்வொரு பதிவிலும் ஒரு ஆழ்ந்த கருத்தை அசால்டாக(மன்னிக்கவும் வேகத்தில் அசால்டுக்கு சரியான தமிழ்ச்சொல் கிடைக்கவில்லை) சொல்லி விடுகிறீர்கள்! <BR/>முருகனைச் "செங்கோடன்" என்று அழைப்பது இப்போது நன்கு விளங்குகிறது! ஜோதிட இயலிலும், செம்மை நிறைந்த செவ்வாய் கோளுக்கும், "செங்கோடன்" முருகன் தான் அதி தேவதை! "செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க" என்று தான் அருணகிரியாரும் வாழ்த்துகிறார். //<BR/><BR/>வாங்க KRS, இளங்கோவடிகளே செவ்வேள் எனக் கந்தனைக் கொண்டாடும் பொழுது.....நாமெல்லாம் கொண்டாடாமல் ஏது!<BR/><BR/>// ஆழி மாயனின் நீல வண்ணம் குறித்தும் பொருள் உரைத்தால், மனம் மகிழும். குமரனைக் கேட்டால், மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் :-) //<BR/><BR/>குமரன் எங்கே? குமரா வருக...விளக்கம் தருக...காத்திருக்கிறோம். கருணை காட்டுவீர்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1156902585164987922006-08-29T21:49:00.000-04:002006-08-29T21:49:00.000-04:00//பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண...//பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள்//<BR/><BR/>ஜிரா...ஒவ்வொரு பதிவிலும் ஒரு ஆழ்ந்த கருத்தை அசால்டாக(மன்னிக்கவும் வேகத்தில் அசால்டுக்கு சரியான தமிழ்ச்சொல் கிடைக்கவில்லை) சொல்லி விடுகிறீர்கள்! <BR/>முருகனைச் "செங்கோடன்" என்று அழைப்பது இப்போது நன்கு விளங்குகிறது! ஜோதிட இயலிலும், செம்மை நிறைந்த செவ்வாய் கோளுக்கும், "செங்கோடன்" முருகன் தான் அதி தேவதை! "செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க" என்று தான் அருணகிரியாரும் வாழ்த்துகிறார்.<BR/><BR/>ஆழி மாயனின் நீல வண்ணம் குறித்தும் பொருள் உரைத்தால், மனம் மகிழும். குமரனைக் கேட்டால், மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் :-)<BR/><BR/>//இறைவனின் திருவருளினாலன்றி பிழைக்க வழியேது? இறைவனை உணர்ந்து கொள்ளவும் இறைவனின் கருணை வேண்டும்//<BR/><BR/>உண்மை; உண்மை..."அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்றல்லவா ஆன்றோரும் அருளியுள்ளனர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com