tag:blogger.com,1999:blog-17531639.post7038994974757790640..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 01. இலக்கியத்தில் இறை - குறுந்தொகைG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17531639.post-23279251607178482382008-07-26T08:57:00.000-04:002008-07-26T08:57:00.000-04:00பாவை ஒன்பதாம் பாடலில் ‘ஏமப்பெருந்துயில்’ என்பதற்கு...பாவை ஒன்பதாம் பாடலில் ‘ஏமப்பெருந்துயில்’ என்பதற்கு ‘இன்பம் தரும் நீண்ட உறக்கம்’ என்று பொருளுரைத்தீர்கள்;<BR/>குறுந்தொகையில் ‘ஏமவைகல்’ ‘பாதுகாப்பான நிலை’ எனும் பொருளைத் தருவதாகிறது.<BR/>முந்தைய ஏமத்திற்கு ‘கவலையற்ற , பாதுகாப்பான உறக்கம்’ என்று பொருள் கொள்ளலாமா?R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-50181399225119892622008-07-26T06:11:00.000-04:002008-07-26T06:11:00.000-04:00‘ஹேமம்’ வட சொல்; ‘ஏமம்’ தமிழ்.பொன்னைக் குறிப்பது.‘...‘ஹேமம்’ வட சொல்; ‘ஏமம்’ தமிழ்.<BR/>பொன்னைக் குறிப்பது.<BR/>‘ஏம வைகல்’ - பொற்காலைப் பொழுது என்று கொள்வதே சரியென்று தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-69470474659170376372007-07-13T02:13:00.000-04:002007-07-13T02:13:00.000-04:00ராகவன் − இறையருள் நிச்சயம் உமக்கு உண்டுஎன்ன அருமைய...ராகவன் − இறையருள் நிச்சயம் உமக்கு உண்டு<BR/>என்ன அருமையான இலக்கிய நயத்துடன் கூடிய விளக்கங்கள்<BR/><BR/>என் பாட்டி கூறுவது போல் உணர்ந்தேன் <BR/><BR/>நன்றிகள். எம்பெருமான் முருகன் அருள் உமக்கு என்றும் உண்டுrajeshhttps://www.blogger.com/profile/17759505424863934963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-52948000442866952282007-07-04T17:11:00.000-04:002007-07-04T17:11:00.000-04:00// வெற்றி said... இராகவன்,ஆகா! படிக்கும் போது தித்...// வெற்றி said... <BR/>இராகவன்,<BR/>ஆகா! படிக்கும் போது தித்திக்குதே!<BR/><BR/>அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.<BR/>படிக்கச் சுவைத்திடும் பழச்சுவைத் தமிழைப் பருக ஏங்குபவர்களுக்கு நற்செய்தி. //<BR/><BR/>நன்றி வெற்றி. பழத்திலேயே சுவையிருப்பது போல தமிழிலேயே இனிமை இருக்கிறது. நான் பழத்தைப் பறித்துக் கொடுக்கிறவன். சுவை பழத்திற்கு உரியது. நானும் அதை ருசித்து ருசித்துப் புசித்துப் பார்த்து மகிழ்கின்றவன்.<BR/><BR/>// தொடரட்டும் உங்கள் பணி. //<BR/><BR/>நிச்சயமாக.<BR/><BR/><BR/>// நான் ஏற்கனவே உங்களிடம் வைத்த அன்புக் கோரிக்கை ஒன்றை இங்கே மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கடம்பு [கடம்பமரம்] பற்றி பழந் தமிழ் இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் உங்களின் அழகு தமிழில் பதிவாகத் தரவேணும். //<BR/><BR/>ஆமாம் வெற்றி. இந்தக் கோரிக்கை நினைவிருக்கிறது. ஆனால் அதற்குத் தமிழறிவும் நூலறிவும் நிறைய வேண்டும். எனக்குக் குறைமதி. குமரனும் கூட இது தொடர்பாகச் செய்ய வேண்டும் ஆவல் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் கிடைக்கலாம். கேட்கிறேன். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-39573899748183620772007-06-28T20:51:00.000-04:002007-06-28T20:51:00.000-04:00இராகவன்,ஆகா! படிக்கும் போது தித்திக்குதே!அருமையான ...இராகவன்,<BR/>ஆகா! படிக்கும் போது தித்திக்குதே!<BR/><BR/>அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.<BR/>படிக்கச் சுவைத்திடும் பழச்சுவைத் தமிழைப் பருக ஏங்குபவர்களுக்கு நற்செய்தி. <BR/><BR/>தொடரட்டும் உங்கள் பணி.<BR/><BR/>நான் ஏற்கனவே உங்களிடம் வைத்த அன்புக் கோரிக்கை ஒன்றை இங்கே மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கடம்பு [கடம்பமரம்] பற்றி பழந் தமிழ் இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் உங்களின் அழகு தமிழில் பதிவாகத் தரவேணும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-87789811580384118692007-06-05T19:19:00.000-04:002007-06-05T19:19:00.000-04:00விடியலை எய்த முடியாதுதான்!ஆனால், விடியல் எய்தலாமே!...விடியலை எய்த முடியாதுதான்!<BR/><BR/>ஆனால், விடியல் எய்தலாமே!<BR/><BR/>"ஏமவைகலை" என வரவில்லையே.<BR/><BR/>"ஏமவைகல்" எனத்தானே இருக்கிறது!<BR/><BR/>பாதுகாப்பு எனும் பொருள் தவறென்று நான் கூறவில்லை.<BR/><BR/>இதையும் கொள்ளலாமோ எனவே!<BR/><BR/>ஏனைய சிவப்பு வர்ணனைகளுடன் பொருந்துவதாலும்!VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-65019523072007155292007-06-04T00:07:00.000-04:002007-06-04T00:07:00.000-04:00// VSK said... மிகச் சீரிய பணியினைத் தொடங்கியிருக...// VSK said... <BR/>மிகச் சீரிய பணியினைத் தொடங்கியிருக்கிறீர்கள், ஜிரா.<BR/><BR/>வாழ்த்துகள். //<BR/><BR/>நன்றி வி.எஸ்.கே. உங்கள் ஊக்கம். இங்கு ஆக்கம். :)<BR/><BR/>// நல்ல விளக்கம்.<BR/>கூடவே ரவியும் வந்து சுவை கூட்டியிருக்கிறார்! //<BR/><BR/>அவர் வழக்கமா வந்து ஆதரிக்கிறவரு. :)<BR/><BR/>// ஒரு சிறு ஐயம், [அ] கருத்து!<BR/><BR/>ஏமம் என்றால் பொன் என ஒரு பொருள் சமீபத்திய திருப்புகழில் சொல்லியிருந்தேன்.<BR/><BR/>அதோ ஒட்டிப் பார்த்தால், ஏம வைகல் என்றால், பொற்கதிரை வீசிப் பரவும் அதிகாலைப் பொழுது எனக் கொள்ளலாமோ?<BR/><BR/>மற்றைய செவ்விலணக்கங்களோடு இதுவும் ஒற்றுகிறதே!<BR/><BR/>ஒவ்வொரு நாளும் அவன் காவலிலேயே இவ்வுலகம் விடிகிறது என ஒரு பொருளும் சொல்லலாமா? //<BR/><BR/>இல்லையென்றே நம்புகிறேன். ஏனென்றால் ஏமவைகல் என்ற சொல்லுக்கு அனைவருமே பாதுகாப்பானது என்றே பொருள் சொல்லியிருக்கின்றார்கள். ஏமவைகல் எய்தினால் என்றால் பாதுகாப்பு எய்துவது என்று பொருள். விடியலை எய்த முடியாதல்லவா.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-76019341127129052302007-06-03T20:43:00.000-04:002007-06-03T20:43:00.000-04:00மிகச் சீரிய பணியினைத் தொடங்கியிருக்கிறீர்கள், ஜிரா...மிகச் சீரிய பணியினைத் தொடங்கியிருக்கிறீர்கள், ஜிரா.<BR/><BR/>வாழ்த்துகள்.<BR/><BR/> நல்ல விளக்கம்.<BR/> கூடவே ரவியும் வந்து சுவை கூட்டியிருக்கிறார்!<BR/><BR/>ஒரு சிறு ஐயம், [அ] கருத்து!<BR/><BR/>ஏமம் என்றால் பொன் என ஒரு பொருள் சமீபத்திய திருப்புகழில் சொல்லியிருந்தேன்.<BR/><BR/>அதோ ஒட்டிப் பார்த்தால், ஏம வைகல் என்றால், பொற்கதிரை வீசிப் பரவும் அதிகாலைப் பொழுது எனக் கொள்ளலாமோ?<BR/><BR/>மற்றைய செவ்விலணக்கங்களோடு இதுவும் ஒற்றுகிறதே!<BR/><BR/>ஒவ்வொரு நாளும் அவன் காவலிலேயே இவ்வுலகம் விடிகிறது என ஒரு பொருளும் சொல்லலாமா?VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-38535156873220905812007-05-25T16:33:00.000-04:002007-05-25T16:33:00.000-04:00// குமரன் (Kumaran) said... நான் ஊருக்குக் கிளம்பு...// குமரன் (Kumaran) said... <BR/>நான் ஊருக்குக் கிளம்பும் நேரமாகப்பார்த்து இதனைத் தொடங்குகிறீர்கள். ஊருக்குப் போய் வந்த பின் தான் படிக்க வேண்டும். :-( //<BR/><BR/>ஆகா. அருமையாகப் போய் வாருங்கள். பிறகு படியுங்கள். இந்தப் பதிவு இங்கேயேதான் இருக்கும். :)<BR/><BR/>// பல நாட்களாக இந்த ஆவல் என் மனத்தில் உண்டு இராகவன். இந்த முறை வாங்க வேண்டிய புத்தகங்களுள் பழந்தமிழ் இலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள் தொடங்கி) உரையுடன் வாங்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். என்ன என்ன கிடைக்கிறதோ பார்க்கலாம். //<BR/><BR/>கண்டிப்பாக. சங்க இலக்கியங்களைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். ஆனால் உரையோடு என்றால்....சற்றுப் பார்த்து வாங்குங்கள். எல்லா உரையும் உரையல்ல சான்றோர் பொய்யா உரையே உரை. சுஜாதா உரையென்றால் கண்டிப்பாக வாங்க வேண்டாம்.<BR/><BR/>// நன்கு தொடங்கினீர்கள். விரைவில் கண்ணன், அவன் அண்ணன் பலராமன் இவர்களைப் பற்றியும் பாடல்கள் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களை எதிர்பார்க்கிறேன். போன வருடம் நாம் பேசியவையெல்லாம் நினைவிற்கு வருகின்றன. :-) //<BR/><BR/>இலக்கியங்களில் பாகுபாடெல்லாம் பார்க்கவில்லை குமரன். அனைவரும் வருவார்கள். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-36147471144804929602007-05-25T16:28:00.000-04:002007-05-25T16:28:00.000-04:00நான் ஊருக்குக் கிளம்பும் நேரமாகப்பார்த்து இதனைத் த...நான் ஊருக்குக் கிளம்பும் நேரமாகப்பார்த்து இதனைத் தொடங்குகிறீர்கள். ஊருக்குப் போய் வந்த பின் தான் படிக்க வேண்டும். :-(<BR/><BR/>பல நாட்களாக இந்த ஆவல் என் மனத்தில் உண்டு இராகவன். இந்த முறை வாங்க வேண்டிய புத்தகங்களுள் பழந்தமிழ் இலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள் தொடங்கி) உரையுடன் வாங்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். என்ன என்ன கிடைக்கிறதோ பார்க்கலாம். <BR/><BR/>நன்கு தொடங்கினீர்கள். விரைவில் கண்ணன், அவன் அண்ணன் பலராமன் இவர்களைப் பற்றியும் பாடல்கள் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களை எதிர்பார்க்கிறேன். போன வருடம் நாம் பேசியவையெல்லாம் நினைவிற்கு வருகின்றன. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-57988797872879008382007-05-25T15:33:00.000-04:002007-05-25T15:33:00.000-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... அழகான மு...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>அழகான முயற்சி ஜிரா.<BR/>அப்படியே இலக்கிய இறையில், ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாட்டாக இட்டு, அதனுடன் திணை பற்றிய ஏனைய தொடர்புள்ள செய்திகளையும் தாருங்கள்! //<BR/><BR/>ஆகா...இது நல்ல திட்டமாக இருக்கிறதே. ஆனால் இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு இலக்கியத்திலும் வெவ்வேறு தெய்வங்களைத் தமிழால் எப்படிப் போற்றியிருக்கிறார்கள் என்று சொல்லப் போகிறேன். இப்பொழுதைக்கு நீங்கள் சொல்வதைக் கணக்கில் வைத்துக் கொள்கிறேன். :)<BR/><BR/>////இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்//<BR/><BR/>இவர் காலத்தால் பிந்தியவரா இல்லை சங்கக் கவிஞருள் ஒருவரா ஜிரா?<BR/>குறுந்தொகைப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்ட பின்னர், அதற்குக் காப்புச் செய்யுள் எழுந்திருக்குமோ? //<BR/><BR/>இவர் சங்ககாலத்தவர்தான் ரவி. தொகுக்கப்பட்டதே சங்கத்தில்தான் என நினைக்கிறேன். தகவல் தெரிந்தவர்கள்தான் வந்து சொல்ல வேண்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-71327579463647422212007-05-25T13:29:00.000-04:002007-05-25T13:29:00.000-04:00//உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை...//உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை!//<BR/><BR/>அப்படிக் கேட்கவும் முடியாத படி கவிஞரே ஒரு அடைமொழியும் வைத்து விட்டார்...<BR/>குன்றி ஏய்க்கும் உடுக்கை = குன்றி மணி போல் சிவந்த உடுக்கை! சிவப்புக் கலர் டிரெஸ்.<BR/><BR/>பாருங்க மேனியும் பவழம் போல் சிவப்பு!<BR/>ஆடையும் குன்றிமணி போல் சிவப்பு!<BR/>தாமரைச் சேவடி = தாமரையும் சிவப்பு!<BR/>சேவலங் கொடி = சேவலும் சிவப்பு தான்!<BR/>இப்படி "செவ்" வேளாகப் படம் பிடிச்சுக் காட்டுகிறார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-6817168979734828142007-05-25T13:20:00.000-04:002007-05-25T13:20:00.000-04:00அழகான முயற்சி ஜிரா.அப்படியே இலக்கிய இறையில், ஒவ்வொ...அழகான முயற்சி ஜிரா.<BR/>அப்படியே இலக்கிய இறையில், ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாட்டாக இட்டு, அதனுடன் திணை பற்றிய ஏனைய தொடர்புள்ள செய்திகளையும் தாருங்கள்!<BR/><BR/>//இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்//<BR/><BR/>இவர் காலத்தால் பிந்தியவரா இல்லை சங்கக் கவிஞருள் ஒருவரா ஜிரா?<BR/>குறுந்தொகைப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்ட பின்னர், அதற்குக் காப்புச் செய்யுள் எழுந்திருக்குமோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com