மங்குவது எது? தங்கம் மங்கும். வெள்ளி மங்கும். பட்டை தீட்டாத வைரமும் மங்கும். புழங்காமல் ஓரத்திலே வைத்திருந்தால் வெங்கலப் பாத்திரமும் மங்கும். அவற்றைத் துலக்கினால் ஒளி வீசிப் பிரகாசிக்கும். ஒவ்வொன்றைத் துலக்கவும் ஒவ்வொரு பொருள். வெங்கலப் பாத்திரத்திற்குப் புளியும் சாம்பலும். வைரத்திற்கு இரும்பு அல்லது வைர அரம். வெள்ளிக்கு தூயவெண் திருநீறு. தங்கத்திற்கு பன்னீரில் நனைத்த பட்டு அல்லது பருத்தித் துணி. இவைகள் எல்லாம் உயிரற்ற பொருட்கள். உயிருள்ள மனிதர்களுக்கு எவையெல்லாம் மங்கும். எவையெல்லாம் மனிதனிடத்தில் தங்குமோ, அவையெல்லாம் மங்கும். அறிவு மங்கலாம். புகழ் மங்கலாம். செல்வம் மங்கலாம். நற்பண்புகள் மங்கலாம். குலப் பெருமை மங்கலாம்.
இவையெல்லாம் மங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அருணகிரிக்கு இருந்தது ஒரே காரணம்தான். அதைக் கந்தரலங்காரத்தில் இப்படிச் சொல்கிறார்.
"கண்டுண்ண சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும்!".
"கற்கண்டுச் சுவையொடு சொல்லி அழைக்கும் மெல்லிய பூவையரின் காமக் கலவிக் கள்ளினை மொண்டு உண்டு அயர்ந்தேன்," என்று நயமாக இயம்புகிறார். கலவிக் கள்ளைப் பருகினேன் என்று சொல்ல வில்லை. அள்ளியள்ளி மொண்டு உண்டாராம். அடேயப்பா! எப்படி அநுபவித்திருக்கிறார். அதன் பலன் என்ன? முதலில் அறிவு மங்கியது. கொண்டிருந்த புகழ் மங்கியது. பிறகு கையிலிருந்த செல்வமெல்லாம் மங்கியது. நற்பண்புகள் மங்கின. குலப் பெருமை மங்கியது.
அப்படி மங்கிய அனைத்தும் முன்னிலும் பிரகாசமாக சுடர் விட்டது எங்ஙனம்? முருகப் பெருமானின் திருவருளால். அந்த நன்றியை இங்கே மறக்காமல் சொல்கிறார் அருணகிரி. "முருகா, சிங்காரம் செய்து கொண்ட பெண்களோடு இன்பம் துய்க்கும் தீய வழக்கங்களால் புகழும் அருளும் மங்காமல் காத்தருள்வாய்!" ஏற்கனவே சொன்னதுதான். சிங்கார மடந்தையர் போக வேண்டும் என்று கேட்கவில்லை. சிங்கார மடந்தையர் தீநெறி போக வேண்டும் என்றுதான் அருணகிரி கேட்கிறார்.
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதி பால கிருபாகரணே
சங்க்ராம என்றால் போர்திறம் மிகுந்த என்று பொருள். "செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்!" என்று விளையாட்டாக சொல்லியிருக்கின்றார் காளமேகம். செரு என்றால் போர்க்களம். செருவில் புகும் வீரர்களை வெல்லும் வேலன் என்பது பொருள். சிகாவல என்றால் மயிலேறி வலம் வருகின்ற என்று பொருள். சங்க்ராம சிகாவல சண்முகனே! பொருள் புரிகின்றதல்லவா. கங்காநதி பால கிருபாகரனே என்பது இறுதியடி. கங்கை இங்கே ஏன் வந்தது? மங்கியதெல்லாம் துலக்க நீர் வேண்டுமல்லவா! கங்கை இந்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்படும் நதி. வற்றாத ஜீவநதி. அதனால்தான் கங்கா நதி பால கிருபாகரனே என்று செய்யுளை முடிக்கிறார்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, September 26, 2006
Tuesday, September 19, 2006
34. நீர் நிலைகளில் செய்யத் தகாதன
இந்த மண்ணுலகில் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஐந்து பூதங்களில் ஒன்று. உணவாகப் பயன்படுகிறது. உணவாக்கப் பயன்படுகிறது. தூய்மை செய்யப் பயன்படுகின்றது. மருந்தாக உதவுகிறது. மருந்தாக்க உதவுகிறது. இன்னும் பல பயன்கள். அதனால்தான் வள்ளுவரும் "நீரின்றி அமையாது உலகு" என்று புகழோங்கச் சொல்கிறார். நாமும் நீரின் முதன்மையையும் தேவையையும் உணர்ந்தவர்கள்தான். ஆகையால்தான் நமது பண்பாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. நீர்நிலைகளில் ஓராடையுடன் கூட குளியாமை. நீரில் உமிழாமை. நீரில் கழிவிடாமை. குளம் குட்டைகளை குழப்பாமை. இப்படி பல கட்டுப்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டில் இருந்தாலும் நாம் எவ்வளவு பின்பற்றுகிறோம்? இனிமேலாவது நாம் நீரினை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எதையும் தூய்மைப் படுத்தும் பண்பு நீருக்குண்டு. கிருத்துவர்கள் கூட நீரினை ஞானஸ்தானத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இஸ்லாமியர்களும் கூட தொழுகைக்கு முன் நீரால் தூய்மை செய்து கொள்கிறார்கள். ஆகையால்தான் தமிழர்கள் இறைவனை நீரோடு தொடர்புடையவனாக வைத்தார்கள். தென்னாடுடைய சிவனின் தலையில் கங்கையை வைத்தவர்கள், தமிழ்க்கடவுள் முருகனை கங்கையில் உதித்த காங்கேயன் என்றார்கள். மந்தாகினி என்பது கங்கையின் மறுபெயர். அருணகிரி "மந்தாகினி தந்த வரோதயனே" என்று புகழ்வதில் வியப்பேது. வேண்டிய வரங்களைத் தருகின்ற வள்ளல் பெருமானல்லவா அவர்.
சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே
கந்தன் என்ற பெயரையும் ஸ்கந்தன் என்ற பெயரையும் பலர் குழப்பிக் கொள்வார்கள். இரண்டும் ஒரே தெய்வத்தைக் குறிக்கும் பெயரானாலும் இரண்டுக்கும் பொருள் வேறு. பொருளில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல. "ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலி கல்மிஷ நாசினீம்". அதாவது கலியுகத்தின் துன்பங்களைத் தீர்க்க வல்லவன் என்று வடமொழி கூறுகிறது. தமிழ் என்ன சொல்கிறது? ஆனையைக் கட்டும் கட்டைக்குக் கந்து என்று பெயர். ஆனையை ஓரிடத்திலிருந்து கொண்டு செல்லும் பொழுது ஒரு பெரிய கட்டையைச் சங்கிலியோடு பிணைத்து அதன் காலில் கட்டி விடுவார்கள். நடுவில் எங்கேயேனும் தங்கினால் ஒரு குழி தோண்டி அதில் அந்தக் கட்டையைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவே. அந்தக் கட்டைக்குக் கந்து என்று பெயர். அதிலிருந்து பிறந்ததுதான் கந்தன் என்ற பெயர். ஆனையோடே இருந்து, அதன் நடவடிக்கைகளைத் தடுக்காது, அதே நேரத்தில் தேவையான பொழுது கட்டுப்படுத்துகின்ற கந்தினைப் போல கந்தனும் நம்முடனே இருந்து வாழ்வித்து, வேண்டிய பொழுது கட்டுப்படுத்தும் தன்மையுடைவன். பாருங்கள். தமிழில் பெயர் வைக்கும் பொழுது கூட எத்தனை நுட்பமாக நம் முன்னோர்கள் சிந்தித்திருக்கின்றார்கள்.
ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் துன்பம் தரக்கூடிய சிந்தை. அனைவருக்கும் இல்வாழ்க்கை சிறந்து விளங்குவதில்லை. அப்படி சிறப்பில்லாத இல்வாழ்க்கை உடையவர்கள், அதை எண்ணி எண்ணி துன்பத்திற்கு உள்ளாவார்கள். இதைத்தான் "சிந்தாகுல இல்" என்கிறார் அருணகிரி. செல்வம் பல இருந்தும் துயரம் சேரும் சிலருக்கு. அனைவருக்கும் செல்வம் இன்பத்தை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட செல்வமும், சிந்தாகுல இல்வாழ்க்கையும் இருந்தால், வாழ்க்கை நரகமாகும். எப்படிப் பட்ட நரகம் தெரியுமா? விந்திய மலைக் காடுகளைப் போல, செல்லும் வழி மறக்கச் செய்யும் நரகமாம். உண்மைதானே! சிந்தாகுல இல்லும் செல்வமும் இருந்தால் நமக்கு எல்லாம் மறந்து போகும். செய்ய வேண்டியதை மறந்து கண்டதைச் செய்து மென்மேலும் துன்பத்திற்கு ஆளாவோம். அப்படிப் பட்ட துன்பங்களுக்கு வாழ்வழித்து நமக்கு வாழ்வளிப்பார் முருகப் பெருமான்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
எதையும் தூய்மைப் படுத்தும் பண்பு நீருக்குண்டு. கிருத்துவர்கள் கூட நீரினை ஞானஸ்தானத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இஸ்லாமியர்களும் கூட தொழுகைக்கு முன் நீரால் தூய்மை செய்து கொள்கிறார்கள். ஆகையால்தான் தமிழர்கள் இறைவனை நீரோடு தொடர்புடையவனாக வைத்தார்கள். தென்னாடுடைய சிவனின் தலையில் கங்கையை வைத்தவர்கள், தமிழ்க்கடவுள் முருகனை கங்கையில் உதித்த காங்கேயன் என்றார்கள். மந்தாகினி என்பது கங்கையின் மறுபெயர். அருணகிரி "மந்தாகினி தந்த வரோதயனே" என்று புகழ்வதில் வியப்பேது. வேண்டிய வரங்களைத் தருகின்ற வள்ளல் பெருமானல்லவா அவர்.
சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே
கந்தன் என்ற பெயரையும் ஸ்கந்தன் என்ற பெயரையும் பலர் குழப்பிக் கொள்வார்கள். இரண்டும் ஒரே தெய்வத்தைக் குறிக்கும் பெயரானாலும் இரண்டுக்கும் பொருள் வேறு. பொருளில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல. "ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலி கல்மிஷ நாசினீம்". அதாவது கலியுகத்தின் துன்பங்களைத் தீர்க்க வல்லவன் என்று வடமொழி கூறுகிறது. தமிழ் என்ன சொல்கிறது? ஆனையைக் கட்டும் கட்டைக்குக் கந்து என்று பெயர். ஆனையை ஓரிடத்திலிருந்து கொண்டு செல்லும் பொழுது ஒரு பெரிய கட்டையைச் சங்கிலியோடு பிணைத்து அதன் காலில் கட்டி விடுவார்கள். நடுவில் எங்கேயேனும் தங்கினால் ஒரு குழி தோண்டி அதில் அந்தக் கட்டையைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவே. அந்தக் கட்டைக்குக் கந்து என்று பெயர். அதிலிருந்து பிறந்ததுதான் கந்தன் என்ற பெயர். ஆனையோடே இருந்து, அதன் நடவடிக்கைகளைத் தடுக்காது, அதே நேரத்தில் தேவையான பொழுது கட்டுப்படுத்துகின்ற கந்தினைப் போல கந்தனும் நம்முடனே இருந்து வாழ்வித்து, வேண்டிய பொழுது கட்டுப்படுத்தும் தன்மையுடைவன். பாருங்கள். தமிழில் பெயர் வைக்கும் பொழுது கூட எத்தனை நுட்பமாக நம் முன்னோர்கள் சிந்தித்திருக்கின்றார்கள்.
ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் துன்பம் தரக்கூடிய சிந்தை. அனைவருக்கும் இல்வாழ்க்கை சிறந்து விளங்குவதில்லை. அப்படி சிறப்பில்லாத இல்வாழ்க்கை உடையவர்கள், அதை எண்ணி எண்ணி துன்பத்திற்கு உள்ளாவார்கள். இதைத்தான் "சிந்தாகுல இல்" என்கிறார் அருணகிரி. செல்வம் பல இருந்தும் துயரம் சேரும் சிலருக்கு. அனைவருக்கும் செல்வம் இன்பத்தை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட செல்வமும், சிந்தாகுல இல்வாழ்க்கையும் இருந்தால், வாழ்க்கை நரகமாகும். எப்படிப் பட்ட நரகம் தெரியுமா? விந்திய மலைக் காடுகளைப் போல, செல்லும் வழி மறக்கச் செய்யும் நரகமாம். உண்மைதானே! சிந்தாகுல இல்லும் செல்வமும் இருந்தால் நமக்கு எல்லாம் மறந்து போகும். செய்ய வேண்டியதை மறந்து கண்டதைச் செய்து மென்மேலும் துன்பத்திற்கு ஆளாவோம். அப்படிப் பட்ட துன்பங்களுக்கு வாழ்வழித்து நமக்கு வாழ்வளிப்பார் முருகப் பெருமான்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, September 12, 2006
33. சமயச்சண்டை வேண்டேன்
மத நல்லிணக்கத்தைப் பற்றி இன்றைக்கு யார் யாரோ பேசுகின்றார்கள். ஆனால் அன்றைக்கே சொல்லிலும் செயலிலும் காட்டியிருக்கின்றார் அருணகிரி. அருணகிரியின் காலகட்டம் சைவ வைணவச் சண்டைகள் நிறைந்த காலம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவங்களை வைத்துக் கொண்டு அதே சிறந்தது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பற்றாக்குறைக்கு கன்னட தெலுங்கு நாடுகளிலிருந்து வேறு புதிய கருத்துகள் இறக்குமதி. அவர்களோடு சண்டை. அதற்கு முந்தய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், பெரியாழ்வாரும் அப்படி சண்டையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். பேசாமல் உழவாரப் பணி செய்து கொண்டிருந்த அப்பரைக் கூட இந்தச் சமயச் சண்டைகள் விட்டு வைக்க வில்லை. வந்த சண்டையை விடாமல் அவரும் இறைவன் அருளால் கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கடலில் மிதந்தார். சுண்ணாம்புக் காளவாயில் வைத்துப் பூட்டினாலும் பொய்கையில் குளித்த தாமரையாக வெளியே வந்தார். "மூசு வண்டறை பொய்கையும் போன்றதே! ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று தேவாரமும் பாடினார். இன்றைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் மதத்தில் குற்றம் காண்பதே பலருக்கு மதத்தொழிலாகப் போய் விட்டது. ஊரெங்கும் உலகெங்கும் இந்தக் கொடுமைதானே நடக்கிறது. இயற்கைச் சீற்றங்களுக்கும் மற்ற மதத் தெய்வங்களைக் குற்றஞ் சொல்கிறார்களே!
இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது. அவரவர் மதங்களையே முழுமையாக அறியாமையால் வந்தது. ஒருவருடைய கருத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணாத்துரை. ஆகையால் வீண்சண்டை கூடாது. இப்படி மதங்களை வைத்துக் கொண்டு ஆன்மீகத் தலைவர்கள் எல்லாம் சண்டையிடுவதை அருணகிரி வெறுத்தார். தானும் அந்த நிலைக்கு ஆளாகக் கூடாதேயென்று வருந்தினார். ஆகையால் இறைவனை வேண்டி, "அப்பனே முருகா! அரைகுறையாக உண்மைகளை அறிந்து அவற்றைக் கொண்டு நிலையில்லாத கடலலை போல முளை குழம்பி, நானும் கூச்சலிட்டு கேவலப்பட்டு நிலையில் தாழ்வேனோ! அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே வேலவா!" என்று வரம் கேட்கிறார்.
கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் உளதோ
கொலையே புரி வேடர் குலப்பிடி தோய்
மலையே மலை கூறிடு வாகையனே
அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். இப்பேர்ப்பட்ட வரத்தை இறைவனிடம் கேட்கும் பொழுது இறைவனைப் புகழ்ந்தே கேட்கிறார். எப்படிப் புகழ்கிறார்?
"கொலையே புரி வேடர்!" வேடுவர்கள் கொலைத்தொழில் புரிகின்றவர்கள். மக்களை அல்ல. மாக்களை. அதுவும் உண்பதற்கு. நாடு பிடிக்கும் ஆசையில் மக்களைக் கொல்கின்றவர்கள் அல்லர் வேடுவர். உணவிற்காக மட்டுமே விலங்குகளைக் கொல்லும் வழக்கமுடையவர். ஆகையால்தால் "கொலையே புரி" என்று அந்தக் கொலையைக் கூட உயர்வு நவிற்சியாகச் சொல்கிறார் அருணகிரி. அந்தக் குலத்தில் ஒரு பிடி இருந்ததாம். அந்தப் பிடியைக் கொண்டவனே என்று முருகனைப் புகழ்கிறார். பிடி என்றால்? பிடி என்றால் பெண் யானை. பெண் யானையின் நடையும் அழகுதான். அப்படி அழகாக நடக்கும் வள்ளியைக் கொண்டவன் முருகன்தானே!
"மலையே மலைகூறிடு வாகையனே!" உயர்ந்து நிற்பது மலை. ஆகையால்தான் மலை போல் உயர்ந்தவர்கள் என்று தமிழில் புகழ்கிறோம். உயர்ந்த பண்புகளை உடைய முருகனையும் மலையே என்று உயர்த்திச் சொல்கிறார். முருகன் எந்த மலையைக் கூறிட்டார்? தாரகாசுரனின் கிரவுஞ்ச மலையை வேலால் அழித்தார் முருகன். "அப்படி மலையைக் கூறிட்ட திறமுடையவனே! வேடுவர் குலமகள் வள்ளியைக் கொண்டவனே! கசடறக் கற்காதவர்கள் போல நானும் மூளை குழம்பித் தவித்து, சமயக் கூச்சலிட்டு வீழ்வேனோ! அப்படியெல்லாம் நேராமல் காத்தருள்வாய் முருகா!"
பக்தியுடன்,
கோ.இராகவன்
இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது. அவரவர் மதங்களையே முழுமையாக அறியாமையால் வந்தது. ஒருவருடைய கருத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணாத்துரை. ஆகையால் வீண்சண்டை கூடாது. இப்படி மதங்களை வைத்துக் கொண்டு ஆன்மீகத் தலைவர்கள் எல்லாம் சண்டையிடுவதை அருணகிரி வெறுத்தார். தானும் அந்த நிலைக்கு ஆளாகக் கூடாதேயென்று வருந்தினார். ஆகையால் இறைவனை வேண்டி, "அப்பனே முருகா! அரைகுறையாக உண்மைகளை அறிந்து அவற்றைக் கொண்டு நிலையில்லாத கடலலை போல முளை குழம்பி, நானும் கூச்சலிட்டு கேவலப்பட்டு நிலையில் தாழ்வேனோ! அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே வேலவா!" என்று வரம் கேட்கிறார்.
கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் உளதோ
கொலையே புரி வேடர் குலப்பிடி தோய்
மலையே மலை கூறிடு வாகையனே
அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். இப்பேர்ப்பட்ட வரத்தை இறைவனிடம் கேட்கும் பொழுது இறைவனைப் புகழ்ந்தே கேட்கிறார். எப்படிப் புகழ்கிறார்?
"கொலையே புரி வேடர்!" வேடுவர்கள் கொலைத்தொழில் புரிகின்றவர்கள். மக்களை அல்ல. மாக்களை. அதுவும் உண்பதற்கு. நாடு பிடிக்கும் ஆசையில் மக்களைக் கொல்கின்றவர்கள் அல்லர் வேடுவர். உணவிற்காக மட்டுமே விலங்குகளைக் கொல்லும் வழக்கமுடையவர். ஆகையால்தால் "கொலையே புரி" என்று அந்தக் கொலையைக் கூட உயர்வு நவிற்சியாகச் சொல்கிறார் அருணகிரி. அந்தக் குலத்தில் ஒரு பிடி இருந்ததாம். அந்தப் பிடியைக் கொண்டவனே என்று முருகனைப் புகழ்கிறார். பிடி என்றால்? பிடி என்றால் பெண் யானை. பெண் யானையின் நடையும் அழகுதான். அப்படி அழகாக நடக்கும் வள்ளியைக் கொண்டவன் முருகன்தானே!
"மலையே மலைகூறிடு வாகையனே!" உயர்ந்து நிற்பது மலை. ஆகையால்தான் மலை போல் உயர்ந்தவர்கள் என்று தமிழில் புகழ்கிறோம். உயர்ந்த பண்புகளை உடைய முருகனையும் மலையே என்று உயர்த்திச் சொல்கிறார். முருகன் எந்த மலையைக் கூறிட்டார்? தாரகாசுரனின் கிரவுஞ்ச மலையை வேலால் அழித்தார் முருகன். "அப்படி மலையைக் கூறிட்ட திறமுடையவனே! வேடுவர் குலமகள் வள்ளியைக் கொண்டவனே! கசடறக் கற்காதவர்கள் போல நானும் மூளை குழம்பித் தவித்து, சமயக் கூச்சலிட்டு வீழ்வேனோ! அப்படியெல்லாம் நேராமல் காத்தருள்வாய் முருகா!"
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, September 05, 2006
32. மூன்று சகோதரர்களின் கதை
ஒரு ஊரில் அண்ணன் தம்பிகள் மூவர் இருந்தனர். நல்ல குடும்பம். மூத்தவன் திருமணம் செய்து கொண்டான். வாய்த்தவள் நல்ல மனையாள். இல்லறம் நல்லறமாக இருந்தது. இறைவன் அருளால் மழலைச் செல்வங்கள் பெருகின. அண்ணன் வாழும் வாழ்வை நினைத்து அடுத்தவனும் திருமணம் செய்து கொண்டான். அந்தோ பரிதாபம்! அவனுக்கு பெண்ணெனும் உருவில் வாய்த்தவள் அன்பே துளிர்க்காத உலக்கைக் கட்டை போன்றவள். மனைவியை திருத்த வழி தெரியாமல் அவளோடு சண்டையிட்டு அவனும் அமைதியிழந்தான். நிம்மதி போனது. பிள்ளைகளும் ஆன பின் பிரச்சனைகள் பெரிதாயின. இளைய அண்ணன் படும் வேதனையைப் பார்த்து கடைசித் தம்பி இல்லறத்தையே வெறுத்து துறவறம் பூண்டான்.
இவர்கள் மூவரில் மூத்தவனும் கடைக்குட்டியும் நிம்மதியாக இருந்தார்கள். வாழ்க்கை இனிதாகச் சென்றது. நினைத்தது நினைத்தபடி நடந்தது. அவரவர்கள் வழியில் சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் இரண்டாமவன் நொந்து நூலாகித் துவண்டு வாழ்க்கையையே வெறுத்து விட்டான். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் எல்லாம் விரும்பிய வகையில் நடந்தால் வாழ்க்கை இன்பமயமானது. ஏறுக்கு மாறாயின் எல்லாம் பாழ். அப்படி வாழ்க்கை பாழாவது நமது கையிலும் இருக்கிறது. நம்மைச் சேர்ந்தவர்கள் கையிலும் இருக்கிறது. இதைத்தான் பர்த்தாவிற்கு ஏற்ற பதிவிரதை கிடைக்கா விட்டால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று அன்றே விவாகரத்து பற்றி பாடியிருக்கிறார் ஔவையார்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? ஒருவன் வாழ்வதும் மற்றொருவன் வீழ்வதும் எதனால்? ஊழ், விதி, முன்வினை என்றெல்லாம் சொல்கின்றார்களே! அவைகளினாலா? வள்ளுவர் என்ன சொல்கின்றார்?
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்." அதாவது, ஊழ்வினையைக் காட்டிலும் வலிமை மிக்கது எது? எப்படிச் சென்றாலும் அது தன்னுடைய தன்மையைக் காட்டி விடும். விதியின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்கின்றார். சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எழுதிய இளங்கோவடிகள் சமணர் என்று கருதப் படுகிறவர் (சைவர் என்று தமிழாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்). அவரும் முற்பிறப்பில் கோவலன் செய்த பிழையால் மறுபிறப்பில் அவன் துன்புற்றதைக் கூறுகிறார். பொதுவாகவே எல்லாரும் ஒப்புக் கொள்வது என்னவென்றால் செய்கின்ற நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன் உண்டு என்று.
பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே
இதைத்தான் அருணகிரியாரும் முருகனிடம் கேட்கிறார். "அப்பா முருகா! பாழான இந்த வாழ்வு எனப்படும் மாயையில் என்னை வீழ்ச்சியுறும் வகையில் இட்டாயே! ஏன்? தாழ்வானவை என்று அறிஞர் பெருமக்களால் அறியப்படும் தீமைகளை நான் புரிந்தேனா? என்னைக் காப்பாற்றிய தெய்வமே! நீ நன்றாக இருப்பாய்! காரணத்தைக் கூறிவிடு!" என்று இறைஞ்சுகிறார் அருணகிரி.
பொதுவாக நாம் பேச்சு வழக்கில் ஒருவரிடம் கேட்கும் பொழுது, "அப்பா! நீ நன்றாக இருப்பாய்! உண்மையைச் சொல்லி விடு." என்று கேட்போம். அதையே கவிதை நடையிலும் பயன்படுத்தி செய்யுளை முடிக்கும் பொழுது "வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!" என்று கூறுகிறார். எந்த வினைகளிலிருந்தும் காப்பாற்ற வல்லவன் இறைவன் என்பதால் அவனிடமே காரணத்தைக் கேட்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
இவர்கள் மூவரில் மூத்தவனும் கடைக்குட்டியும் நிம்மதியாக இருந்தார்கள். வாழ்க்கை இனிதாகச் சென்றது. நினைத்தது நினைத்தபடி நடந்தது. அவரவர்கள் வழியில் சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் இரண்டாமவன் நொந்து நூலாகித் துவண்டு வாழ்க்கையையே வெறுத்து விட்டான். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் எல்லாம் விரும்பிய வகையில் நடந்தால் வாழ்க்கை இன்பமயமானது. ஏறுக்கு மாறாயின் எல்லாம் பாழ். அப்படி வாழ்க்கை பாழாவது நமது கையிலும் இருக்கிறது. நம்மைச் சேர்ந்தவர்கள் கையிலும் இருக்கிறது. இதைத்தான் பர்த்தாவிற்கு ஏற்ற பதிவிரதை கிடைக்கா விட்டால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று அன்றே விவாகரத்து பற்றி பாடியிருக்கிறார் ஔவையார்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? ஒருவன் வாழ்வதும் மற்றொருவன் வீழ்வதும் எதனால்? ஊழ், விதி, முன்வினை என்றெல்லாம் சொல்கின்றார்களே! அவைகளினாலா? வள்ளுவர் என்ன சொல்கின்றார்?
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்." அதாவது, ஊழ்வினையைக் காட்டிலும் வலிமை மிக்கது எது? எப்படிச் சென்றாலும் அது தன்னுடைய தன்மையைக் காட்டி விடும். விதியின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்கின்றார். சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எழுதிய இளங்கோவடிகள் சமணர் என்று கருதப் படுகிறவர் (சைவர் என்று தமிழாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்). அவரும் முற்பிறப்பில் கோவலன் செய்த பிழையால் மறுபிறப்பில் அவன் துன்புற்றதைக் கூறுகிறார். பொதுவாகவே எல்லாரும் ஒப்புக் கொள்வது என்னவென்றால் செய்கின்ற நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன் உண்டு என்று.
பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே
இதைத்தான் அருணகிரியாரும் முருகனிடம் கேட்கிறார். "அப்பா முருகா! பாழான இந்த வாழ்வு எனப்படும் மாயையில் என்னை வீழ்ச்சியுறும் வகையில் இட்டாயே! ஏன்? தாழ்வானவை என்று அறிஞர் பெருமக்களால் அறியப்படும் தீமைகளை நான் புரிந்தேனா? என்னைக் காப்பாற்றிய தெய்வமே! நீ நன்றாக இருப்பாய்! காரணத்தைக் கூறிவிடு!" என்று இறைஞ்சுகிறார் அருணகிரி.
பொதுவாக நாம் பேச்சு வழக்கில் ஒருவரிடம் கேட்கும் பொழுது, "அப்பா! நீ நன்றாக இருப்பாய்! உண்மையைச் சொல்லி விடு." என்று கேட்போம். அதையே கவிதை நடையிலும் பயன்படுத்தி செய்யுளை முடிக்கும் பொழுது "வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!" என்று கூறுகிறார். எந்த வினைகளிலிருந்தும் காப்பாற்ற வல்லவன் இறைவன் என்பதால் அவனிடமே காரணத்தைக் கேட்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, August 29, 2006
31.செவ்வானமே செந்தாமரையே
இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. "இல்லே எனும் மாயையில் இட்டனை நீ" என்று சென்ற பாடலில் வருந்திய அருணகிரிநாதர், இந்தப் பாடலில் எப்படிக் காப்பாற்றப்பட்டார் என்பதைச் சொல்கிறார்.
செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
தொடக்கமே முருகனின் பண்பை விளக்குகிறது. செவ்வேள் முருகன் செம்மைப் பண்புடையவன். அவனது மனம் மட்டுமல்ல உடலும் உடைகளும் கூட செம்மையானவை. எட்டுத்தொகை நூல்களில் தலையாயது குறுந்தொகை. இதில்தான் தருமிக்காக இறைவன் பாடிய "கொங்கு தேர் வாழ்க்கை" என்ற செய்யுளும் தொகுக்கப் பட்டுள்ளது. இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று தொடங்கியவர், "பவழத்தன்ன மேனி" என்கிறார். அதாவது பவழம் போன்ற செக்கச் செவேலென்று இருக்கும் தெய்வம் என்கிறார்.
பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள். தாமரை மலரும் சிவப்பு. ஆக திருவடிகளும் சிவப்பு. மேனியும் சிவப்பு. அநுபூதியிலும் அருணகிரி அதைத்தான் சொல்கிறார். "செவ்வான் உருவில் திகழ் வேலவன்!" விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில் காணும் செந்நிறம் எத்தனை சுகமானது. பார்க்கப் பார்க்கத் திகட்டாடது. அத்தகைய செம்மையானவர் முருகன் என்பது அருணகிரி வாக்கு. இதை வேறுவிதாமகவும் பார்க்க வேண்டும். வானத்தின் செம்மை உதயத்திலும் அஸ்தமனத்திலும் விளங்கும். முருகனின் செம்மை இன்பத்தின் உதயத்திலும் துன்பத்தின் அஸ்தமனத்திலும் விளங்கும். ஆகையால்தான் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்" என்று புகழ்கிறார்.
"முருகா! பேரிறைவா! துன்பத்தில் உழன்று கொண்டிருந்தேன் நான்! உண்மையை உணராமல், நன்மையைப் புரியாமல், தன்மையை விளங்காமல் திரிந்தேன் நான்! அந்த மாயைகள் எல்லாம் விலக, அவைகள் எல்லாம் ஒவ்வாதவை என்று நீயே உணர்வித்தாய்! அப்படி உன் கருணையால் ஒவ்வாதவைகளை ஒருவர் உணர்வதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. எம்மால் ஆவதொன்றுமில்லை." என்கிறார் அருணகிரி. சென்ற பாடலில் "மாயையில் இட்டதற்கு" முருகனைக் காரணம் கேட்ட அருணகிரி, இந்தப் பாடலில் முருகன் காப்பாற்றியதைச் சொல்கிறார். இறைவனாகப் பார்த்துக் காப்பாற்றா விட்டால் உய்ய வழி ஏது? இப்பொழுது நான்கு வரிகளையும் படியுங்கள்.
செவ்வான் உருவில் திகழ் வேலவன்
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!
நாமாக ஒன்றைச் செய்ய முடியுமா? இறைவனின் திருவருளினாலன்றி பிழைக்க வழியேது? இறைவனை உணர்ந்து கொள்ளவும் இறைவனின் கருணை வேண்டும் என்கிறார் அருணகிரி. பட்டினத்தடிகளும் அப்படித்தானே! "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என்று இறைவன் உணர்வித்த பிறகே உய்த்தார்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
தொடக்கமே முருகனின் பண்பை விளக்குகிறது. செவ்வேள் முருகன் செம்மைப் பண்புடையவன். அவனது மனம் மட்டுமல்ல உடலும் உடைகளும் கூட செம்மையானவை. எட்டுத்தொகை நூல்களில் தலையாயது குறுந்தொகை. இதில்தான் தருமிக்காக இறைவன் பாடிய "கொங்கு தேர் வாழ்க்கை" என்ற செய்யுளும் தொகுக்கப் பட்டுள்ளது. இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று தொடங்கியவர், "பவழத்தன்ன மேனி" என்கிறார். அதாவது பவழம் போன்ற செக்கச் செவேலென்று இருக்கும் தெய்வம் என்கிறார்.
பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள். தாமரை மலரும் சிவப்பு. ஆக திருவடிகளும் சிவப்பு. மேனியும் சிவப்பு. அநுபூதியிலும் அருணகிரி அதைத்தான் சொல்கிறார். "செவ்வான் உருவில் திகழ் வேலவன்!" விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில் காணும் செந்நிறம் எத்தனை சுகமானது. பார்க்கப் பார்க்கத் திகட்டாடது. அத்தகைய செம்மையானவர் முருகன் என்பது அருணகிரி வாக்கு. இதை வேறுவிதாமகவும் பார்க்க வேண்டும். வானத்தின் செம்மை உதயத்திலும் அஸ்தமனத்திலும் விளங்கும். முருகனின் செம்மை இன்பத்தின் உதயத்திலும் துன்பத்தின் அஸ்தமனத்திலும் விளங்கும். ஆகையால்தான் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்" என்று புகழ்கிறார்.
"முருகா! பேரிறைவா! துன்பத்தில் உழன்று கொண்டிருந்தேன் நான்! உண்மையை உணராமல், நன்மையைப் புரியாமல், தன்மையை விளங்காமல் திரிந்தேன் நான்! அந்த மாயைகள் எல்லாம் விலக, அவைகள் எல்லாம் ஒவ்வாதவை என்று நீயே உணர்வித்தாய்! அப்படி உன் கருணையால் ஒவ்வாதவைகளை ஒருவர் உணர்வதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. எம்மால் ஆவதொன்றுமில்லை." என்கிறார் அருணகிரி. சென்ற பாடலில் "மாயையில் இட்டதற்கு" முருகனைக் காரணம் கேட்ட அருணகிரி, இந்தப் பாடலில் முருகன் காப்பாற்றியதைச் சொல்கிறார். இறைவனாகப் பார்த்துக் காப்பாற்றா விட்டால் உய்ய வழி ஏது? இப்பொழுது நான்கு வரிகளையும் படியுங்கள்.
செவ்வான் உருவில் திகழ் வேலவன்
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!
நாமாக ஒன்றைச் செய்ய முடியுமா? இறைவனின் திருவருளினாலன்றி பிழைக்க வழியேது? இறைவனை உணர்ந்து கொள்ளவும் இறைவனின் கருணை வேண்டும் என்கிறார் அருணகிரி. பட்டினத்தடிகளும் அப்படித்தானே! "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என்று இறைவன் உணர்வித்த பிறகே உய்த்தார்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, August 22, 2006
30. மலத்தை மலத்தால் நீக்கி...
தத்துவச் சுவையும் கவிச்சுவையும் ஒருங்கே சேர்ந்த அழகான பாடல் இது. பக்தியையும் கவித்துவமாகச் சொல்வதில் அருணகிரிநாதர் வல்லவர். மதுரைத் திருப்புகழை எடுத்துக் கொள்ளுங்கள். "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம்" என்று முருகன் திருவடிகளைச் சொல்கிறார். வரை என்றால் மலை. வரையாடு என்று இன்னமும் ஊர்ப்புறங்களில் மலையாட்டைச் சொல்வார்கள். இருக்கின்ற மலைகளில் எல்லாம் உலவி நிறைந்து நமக்கு நல்லருட் சீர்களை வரிசைகளாகத் தரும் திருவடிகள் என்று முருகன் திருவடிகளைக் குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்ற சொற்றொடரை எவ்வளவு அழகாக "வரையினில் எங்கனும் உலவி நிறைந்தது" என்று குறிப்பிடுகிறார்.
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே
மல்லுக்கட்டுகிறவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? பலர் கூடிப் பார்க்க, மல்லர்கள் இருவர் தோளோடு தோள் பொருதிப் போரிடுவார்கள். இரண்டு வலுவான தோள்கள் கொண்டவர்களே மல்லுக்கட்டுகிறார்கள் என்றால், பன்னிரண்டு தோள்களைக் கொண்ட முருகப் பெருமான் என்ன செய்வார்? "மல்லேபுரி பன்னிரு வாகுவில்" என்கிறார். வாகு என்றால் தோள். வீரவாகு என்றால் வீரமிக்க தோள்களை உடையவன் என்று பொருள். பண்டொரு முறை நாரதர் நடத்திய வேள்வியில் மந்திரத்தை தவறாக உச்சரித்ததால் வேள்வித்தீயிலிருந்து முரட்டு ஆடு ஒன்று வந்து அனைவரையும் முட்டித் தள்ளியது. முருகன் அருளால் வீரவாகு அந்த ஆட்டை அடக்கி முருகனுக்கே வாகனமாக்கினார். அது வீரவாகுவின் தோள்வலியைக் காட்டுகிறது.
சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய பன்னிரண்டு தோள்களை வைத்துக் கொண்டு முருகன் என்ன செய்கிறார்? "என் சொல்லே புனையும் சுடர் வேலவனே" என்று அருணகிரி புகழ்கிறார். தமிழ்க்கடவுளுக்கு தமிழ்மாலைகள் சூட்டி வழிபடுகிறார் அவர். "முருகா சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய உன்னுடைய பன்னிரண்டு தோள்களிலும் தீந்தமிழில் சொற்களால் நான் தொடுத்த பாமாலைகளை அணிந்து கொண்டு சுடர் மிகுந்த வேலோடு அருள்கின்றவனே!"
"இல்லே எனும் மாயை". இல் என்றால் இல்வாழ்க்கை. "இல்வாழ்க்கை என்ற மாயையில் என்னை விழச்செய்தாய் முருகா! நானும் இல்லறத்தை நல்லறமாகப் பேணாமல் பொல்லாதவனாகி உழன்றேனே! அப்பொழுதெல்லாம் என்னுடைய அறியாமையை நீக்கவில்லையே! ஏன்?" என்று முருகனைக் கேட்கிறார் அருணகிரி. ஒரு மலத்தை நீக்க இன்னொரு மலத்தைச் சேர்க்கிறார் இறைவன். துணியை சோப்புத் தூள் போட்டுத் துவைக்கிறோம். வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். மனம் வெளுக்கவும் அதைத்தான் முருகன் செய்திருக்கின்றார்.
ஏற்கனவே இவ்வுலகவாழ்க்கை என்னும் மாயையில் இருந்தார் அருணகிரி. அந்த மாயா மலத்தோடு பொல்லாத்தனம் என்னும் ஆணவ மலத்தையும் கொடுத்தார் முருகன். பிறவிப் பாவங்கள் என்னும் கர்ம மலம் வேறு. மூன்று மலங்களும் சேர்ந்து பல தவறுகள் செய்தார் அருணகிரி. ஆனால் இறுதி விளைவு முருகனின் கருணையாக விளைந்தது. மனமும் குணமும் வெளுத்தார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே
மல்லுக்கட்டுகிறவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? பலர் கூடிப் பார்க்க, மல்லர்கள் இருவர் தோளோடு தோள் பொருதிப் போரிடுவார்கள். இரண்டு வலுவான தோள்கள் கொண்டவர்களே மல்லுக்கட்டுகிறார்கள் என்றால், பன்னிரண்டு தோள்களைக் கொண்ட முருகப் பெருமான் என்ன செய்வார்? "மல்லேபுரி பன்னிரு வாகுவில்" என்கிறார். வாகு என்றால் தோள். வீரவாகு என்றால் வீரமிக்க தோள்களை உடையவன் என்று பொருள். பண்டொரு முறை நாரதர் நடத்திய வேள்வியில் மந்திரத்தை தவறாக உச்சரித்ததால் வேள்வித்தீயிலிருந்து முரட்டு ஆடு ஒன்று வந்து அனைவரையும் முட்டித் தள்ளியது. முருகன் அருளால் வீரவாகு அந்த ஆட்டை அடக்கி முருகனுக்கே வாகனமாக்கினார். அது வீரவாகுவின் தோள்வலியைக் காட்டுகிறது.
சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய பன்னிரண்டு தோள்களை வைத்துக் கொண்டு முருகன் என்ன செய்கிறார்? "என் சொல்லே புனையும் சுடர் வேலவனே" என்று அருணகிரி புகழ்கிறார். தமிழ்க்கடவுளுக்கு தமிழ்மாலைகள் சூட்டி வழிபடுகிறார் அவர். "முருகா சிறப்பாக மல்லுக்கட்டக் கூடிய உன்னுடைய பன்னிரண்டு தோள்களிலும் தீந்தமிழில் சொற்களால் நான் தொடுத்த பாமாலைகளை அணிந்து கொண்டு சுடர் மிகுந்த வேலோடு அருள்கின்றவனே!"
"இல்லே எனும் மாயை". இல் என்றால் இல்வாழ்க்கை. "இல்வாழ்க்கை என்ற மாயையில் என்னை விழச்செய்தாய் முருகா! நானும் இல்லறத்தை நல்லறமாகப் பேணாமல் பொல்லாதவனாகி உழன்றேனே! அப்பொழுதெல்லாம் என்னுடைய அறியாமையை நீக்கவில்லையே! ஏன்?" என்று முருகனைக் கேட்கிறார் அருணகிரி. ஒரு மலத்தை நீக்க இன்னொரு மலத்தைச் சேர்க்கிறார் இறைவன். துணியை சோப்புத் தூள் போட்டுத் துவைக்கிறோம். வெளுப்பான துணி நமக்குக் கிடைக்கிறது. அழுக்கை நீக்கிய சோப்பை நல்லது என துணியில் வைத்திருக்கின்றோமா? இல்லையே! ஆகையால் சோப்பும் மலம்தான். சோப்புத்தூள் அழுக்கை நீக்குகிறது. பிறகு சோப்புத்தூளை நீரில் கழுவி நாம் நீக்கி விடுகிறோம். மனம் வெளுக்கவும் அதைத்தான் முருகன் செய்திருக்கின்றார்.
ஏற்கனவே இவ்வுலகவாழ்க்கை என்னும் மாயையில் இருந்தார் அருணகிரி. அந்த மாயா மலத்தோடு பொல்லாத்தனம் என்னும் ஆணவ மலத்தையும் கொடுத்தார் முருகன். பிறவிப் பாவங்கள் என்னும் கர்ம மலம் வேறு. மூன்று மலங்களும் சேர்ந்து பல தவறுகள் செய்தார் அருணகிரி. ஆனால் இறுதி விளைவு முருகனின் கருணையாக விளைந்தது. மனமும் குணமும் வெளுத்தார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, August 15, 2006
29. அலுப்புத் தட்டாத அமுதம்
அருணகிரி தமிழ்க் கடல். அதிலும் அவரை ஓசைமுனி என்பார் பாம்பன் சுவாமிகள். தமிழிலுள்ள ஓசைகளெல்லாம் அத்துப்படியானவர். அவர் சொல்லித் தத்துவம் கேட்பது நமக்கெல்லாம் இனிமை. இந்தப் பாடலும் ஒரு தத்துவப் பாடலே! இந்தப் பாடலில் இரண்டு உண்மைகளைக் கூறியுள்ளார் அருணகிரி. உணர வேண்டிய உண்மைகள்.
ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே
இந்த உலகாய பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிற்கு இரண்டு பண்புகள் உண்டு. நன்மை ஒன்று. தீமை மற்றொன்று. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லமும் எடுக்கலாம். சாராயமும் காய்ச்சலாம். அது பயன்படுத்துகின்றவர்களின் தன்மையைப் பொருத்தது. மிகவும் நல்லது என்ற பொருளிலும் கூட ஏதேனும் தீமை இருக்கும். மிகவும் இனிமையானதாக கருதப்படும் அமுதம் சாவாமருந்து. அதை அருந்துதல் இன்பம். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இளமையாக சாகாமல் இருப்பது. கண்டிப்பாக அலுப்புத் தட்டிவிடும். அப்படியெல்லாம் எந்தத் தீமையையும் தராத ஒரு அமுதம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அப்படிப் பட்ட அமுதமும் உண்டு. அயில்வேல் அரசனே அந்த அமுதம். அயில் என்றால் கூர்மை. கூர்மையான வேலையுடைய முருகனே இன்பத்தை மட்டுமே தரக்கூடிய அமுதம். அதுவும் எப்படி? சற்று விளக்கமாகப் பார்ப்போம். கூரில்லாதவன் என்று யாரைச் சொல்வோம்? அறிவில் சற்று மந்தமாக இருப்பவர்களை கூரில்லாதவன் என்பது வழக்கம். கூர்மை என்பது அறிவின் பண்பு. வேல் ஞானத்தின் வடிவம் என்பது நாம் அறிந்ததே! ஞானம் கூர்மையாக இருக்க வேண்டும். அறிவு பெருகப் பெருக ஆராய்ந்து தெளியும் பண்பு பெருகும். நாம் அவசரப்பட்டு முடிவெடுப்பதெல்லாம் அறிவீனத்தினால்தானே! ஆக முற்றும் உணர்ந்தவர் தீயவராக இருக்க முடியாது. அப்படி அனைத்தையும் அறியும் அறிவு முருகனிடத்தில் அடங்கும். ஆகையால் ஞானாகரனே என்று அடுத்த சொல்லைப் போடுகிறார்.
இப்பொழுது படியுங்கள். "ஆனா அமுதே! அயில் வேல் அரசே! ஞானாகரனே!" புரிந்திருக்கும் என நினைக்கிறேன். "இறைவனே! நீ தீதில்லா அமுது. எப்படித் தெரியுமா? அனைவரையும் அடக்கும் ஞானம் உன்னிடத்தில் அடங்கும். அதனை உருவகமாக கையில் வேலாகத் தாங்கிய இறைவனே!"
இப்படியெல்லாம் அழைத்து விட்டு, நவிலத் தகுமோ என்கிறார். அதாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறார். எதைச் சொல்ல முடியுமா என்று அருணகிரி தயங்குகிறார்! இறைவனிடத்தில் நேரடி உபதேசம் பெற்ற அவருக்கே சொல்லி விட முடியாத விஷயம் ஒன்று இருக்கிறதா? என்ன அது? அடுத்த இரண்டு வரிகளைப் பாருங்கள். "யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!" இதைத்தான் அவரால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. அறிவு அடக்கத்தைக் கொடுக்கும் என்று முன்பே அறிந்தோம். அந்த அடக்கம் இறைவனின் கருணையால் வருவது. அதன் விளைவு என்ன? அந்த விளைவைத்தான் அருணகிரியால் சொல்ல முடியவில்லை.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பார்கள். அதாவது இறைவனை உணர்ந்தவர்கள் அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னதில்லையாம். அப்படிச் சொன்னவர்கள் உணர்ந்ததில்லையாம். அருணகிரி உணர்ந்தவர். ஆயினும் நமக்காக, நாம் புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தவர் இங்கே வந்து தடுக்கி விட்டார். இறைவன் கருணையின் விளைவு என்ன தெரியுமா? நான் என்ற அகந்தையை விழுங்கி விட்டு, அனைத்துப் பரிமாணங்களிலும் அன்பு என்ற அமைதி ஒழுக இருக்கும் தன்மை. அதை எப்படி விளக்குவது என்று அவருக்குத் தெரியவில்லை. மேலே சொன்னது புரிந்தது போல இருக்கும். ஆனால் முழுவதும் புரியாது. ஏனென்றால் சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சொல்லொணா நிலையது. பரவசம் என்று சொல்லலாம். ஆனால் பரவசம் எப்படி இருக்குமென்று யாரேனும் சொல்ல முடியுமா? வெல்லம் இனிப்பாக இருக்கும் என்று சொல்லலாம். எப்படி இனிப்பாக இருக்குமென்று யாரால் சொல்ல முடியும்? சுவைத்துப் பார்த்து உணர்ந்தவர்களிடம் வெல்லம் இனிக்குமென்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். முருகப் பெருமானின் அருட்பெருங் கருணையின் விளைவு இனிக்கும் என்று இதுவரை சொல்லி வந்த அருணகிரிநாதர் எப்படி இனிக்குமென்று சொல்ல முடியாத நிலை இதுதான். ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.
பக்தியுடன்,
கோ.இராகவன்
ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே
இந்த உலகாய பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிற்கு இரண்டு பண்புகள் உண்டு. நன்மை ஒன்று. தீமை மற்றொன்று. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லமும் எடுக்கலாம். சாராயமும் காய்ச்சலாம். அது பயன்படுத்துகின்றவர்களின் தன்மையைப் பொருத்தது. மிகவும் நல்லது என்ற பொருளிலும் கூட ஏதேனும் தீமை இருக்கும். மிகவும் இனிமையானதாக கருதப்படும் அமுதம் சாவாமருந்து. அதை அருந்துதல் இன்பம். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இளமையாக சாகாமல் இருப்பது. கண்டிப்பாக அலுப்புத் தட்டிவிடும். அப்படியெல்லாம் எந்தத் தீமையையும் தராத ஒரு அமுதம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அப்படிப் பட்ட அமுதமும் உண்டு. அயில்வேல் அரசனே அந்த அமுதம். அயில் என்றால் கூர்மை. கூர்மையான வேலையுடைய முருகனே இன்பத்தை மட்டுமே தரக்கூடிய அமுதம். அதுவும் எப்படி? சற்று விளக்கமாகப் பார்ப்போம். கூரில்லாதவன் என்று யாரைச் சொல்வோம்? அறிவில் சற்று மந்தமாக இருப்பவர்களை கூரில்லாதவன் என்பது வழக்கம். கூர்மை என்பது அறிவின் பண்பு. வேல் ஞானத்தின் வடிவம் என்பது நாம் அறிந்ததே! ஞானம் கூர்மையாக இருக்க வேண்டும். அறிவு பெருகப் பெருக ஆராய்ந்து தெளியும் பண்பு பெருகும். நாம் அவசரப்பட்டு முடிவெடுப்பதெல்லாம் அறிவீனத்தினால்தானே! ஆக முற்றும் உணர்ந்தவர் தீயவராக இருக்க முடியாது. அப்படி அனைத்தையும் அறியும் அறிவு முருகனிடத்தில் அடங்கும். ஆகையால் ஞானாகரனே என்று அடுத்த சொல்லைப் போடுகிறார்.
இப்பொழுது படியுங்கள். "ஆனா அமுதே! அயில் வேல் அரசே! ஞானாகரனே!" புரிந்திருக்கும் என நினைக்கிறேன். "இறைவனே! நீ தீதில்லா அமுது. எப்படித் தெரியுமா? அனைவரையும் அடக்கும் ஞானம் உன்னிடத்தில் அடங்கும். அதனை உருவகமாக கையில் வேலாகத் தாங்கிய இறைவனே!"
இப்படியெல்லாம் அழைத்து விட்டு, நவிலத் தகுமோ என்கிறார். அதாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறார். எதைச் சொல்ல முடியுமா என்று அருணகிரி தயங்குகிறார்! இறைவனிடத்தில் நேரடி உபதேசம் பெற்ற அவருக்கே சொல்லி விட முடியாத விஷயம் ஒன்று இருக்கிறதா? என்ன அது? அடுத்த இரண்டு வரிகளைப் பாருங்கள். "யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே!" இதைத்தான் அவரால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. அறிவு அடக்கத்தைக் கொடுக்கும் என்று முன்பே அறிந்தோம். அந்த அடக்கம் இறைவனின் கருணையால் வருவது. அதன் விளைவு என்ன? அந்த விளைவைத்தான் அருணகிரியால் சொல்ல முடியவில்லை.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பார்கள். அதாவது இறைவனை உணர்ந்தவர்கள் அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னதில்லையாம். அப்படிச் சொன்னவர்கள் உணர்ந்ததில்லையாம். அருணகிரி உணர்ந்தவர். ஆயினும் நமக்காக, நாம் புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தவர் இங்கே வந்து தடுக்கி விட்டார். இறைவன் கருணையின் விளைவு என்ன தெரியுமா? நான் என்ற அகந்தையை விழுங்கி விட்டு, அனைத்துப் பரிமாணங்களிலும் அன்பு என்ற அமைதி ஒழுக இருக்கும் தன்மை. அதை எப்படி விளக்குவது என்று அவருக்குத் தெரியவில்லை. மேலே சொன்னது புரிந்தது போல இருக்கும். ஆனால் முழுவதும் புரியாது. ஏனென்றால் சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சொல்லொணா நிலையது. பரவசம் என்று சொல்லலாம். ஆனால் பரவசம் எப்படி இருக்குமென்று யாரேனும் சொல்ல முடியுமா? வெல்லம் இனிப்பாக இருக்கும் என்று சொல்லலாம். எப்படி இனிப்பாக இருக்குமென்று யாரால் சொல்ல முடியும்? சுவைத்துப் பார்த்து உணர்ந்தவர்களிடம் வெல்லம் இனிக்குமென்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். முருகப் பெருமானின் அருட்பெருங் கருணையின் விளைவு இனிக்கும் என்று இதுவரை சொல்லி வந்த அருணகிரிநாதர் எப்படி இனிக்குமென்று சொல்ல முடியாத நிலை இதுதான். ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, August 07, 2006
28. யாரிடம் கடன் கேட்க வேண்டும்?
வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டு அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதென்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால் அருணகிரிக்கு அது எளிதில் கைவந்த கலையாக இருந்திருக்கிறது. ஆம். இந்தப் பாடலில் இரண்டு வரிகளில் வாழ்க்கைத் தத்துவத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் சொல்லாத பலவற்றைச் சொல்வது.
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங்கு எதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே
நிலையாமைத் தத்துவத்தைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது. ஆனாலும் யாரும் புரிந்து கொண்டது போலத் தெரியவில்லை. நாம் மகிழ்கின்ற விடயங்களெல்லாம் மின்னலைப் போன்றி தோன்றி மறையக் கூடியவை. ஒருவேளை அவை நிலைத்தாலும் மகிழ்ச்சி நிலைக்காது. சுவை மிகுந்த உணவுகளை உண்கிறோம். அந்தச் சுவை எவ்வளவு நேரம் இன்பம் தருகிறது. நாவில் உணவு இருக்கும் வரை சுவை தெரியும். அவ்வளவுதான். சரி. நாவில் தொடர்ந்து இருக்கட்டும் என்று உணவை வாயிலேயே வைத்திருந்தால் சுவை தொடருமா? சுவை சுமையாகிப் போகாதா? உலக இயக்கமாகிய கலவி இன்பமும் சிறு பொழுதே. மின்னலைப் போல. தோன்றும். நிற்பது போல நின்று உடனே மறையும்.
வாழ்க்கையே அப்படித்தானே. நேற்று பிறந்து, இன்று வாழ்ந்து, நாளை மடிவதுதானே வாழ்க்கை. மின்னலைப் போலத்தான். நினைக்காத பொழுது தோன்றி நினைக்காத பொழுது மறைவது. எப்பொழுது நடக்குமென்று கூற முடியாது. "மின்னே நிகர் வாழ்வு" என்கிறார் அருணகிரி நாதர். அந்த வாழ்வையும் நாம் விரும்புகிறோம். ஏன் விரும்புகிறோம் என்று யாருக்கும் தெரியாது. தெரியாமலே நடக்கிறது நமது வாழ்க்கை. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் பிறக்கிறோம். தொடக்கமே கோணல். முதல் கோணல் முற்றும் கோணல். அப்படிப்பட்ட வாழ்வை நாம் தெரியாமலே விரும்புகிறோம்.
ஏன் விரும்புகிறோம்? எல்லாம் விதியின் பயன். விதி என்பது ஊழ். ஊழிற் பெருவலி யாவுள என்று கூறுகிறார் வள்ளுவர். பெரியவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால்தான் அவர்கள் அடக்கமாக வாழ்கின்றார்கள். அமரருள் உய்க்கின்றார்கள். நமக்கும் எடுத்துச் சொல்கின்றார்கள். வள்ளுவரைப் போல. அருணகிரி நாதரைப் போல. "என்ன இது! மானிடப் பிறப்பெடுத்து விட்டோம். எல்லாம் மின்னலைப் போல நடக்கிறது. இருந்தும் இதைப் போய் விரும்பிச் சீரழிகின்றோமே! இதைத்தான் விதியின் பயன் என்பதோ!" என்று வருந்துகிறார் அருணகிரி.
கடன் கேட்பதையும் கடனில்லாதவனிடம் கேட்க வேண்டும். ஏற்கனவே கடனாளியிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்குமா? நிலையில்லாத வாழ்க்கைச் சமுத்திரத்தைக் கடக்க நிலைப்பவரிடம்தானே கேட்க வேண்டும். என்றும் நிலைக்கும் கந்தனைக் கேட்கிறார் அருணகிரி. பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே என்று அடுக்குகிறார் புகழாரங்களை. பொன் ஒளிரும். முருகன் ஒளி பொருந்தியவர். மணி குளிரும். ஆறுமுகர் குளிர்ச்சி மிகுந்த பார்வை கொண்டவர். பொருள் என்பது மெய்ப்பொருள். வேலவரின் ஞானமே மெய்ப்பொருள். அருள் நமக்கு வேண்டியது. கந்தவேள் அருளினால் நமது சொந்தவேள்.
இதையெல்லாம் கூறிவிட்டு மன்னே என்கிறார். அதாவது மன்னன். மன்னன் என்பவன் ஆள்கின்றவன். பழநி ஆண்டவன் என்றைக்கும் ஆள்கின்றவன் என்று சொல்கிறார். மயிலேறிய முருகனைப் புகழ்வதில் அருணகிரிக்கு அவ்வளவு ஆர்வம். முதலில் மயிலேறிய சேவகனே என்றார். இந்தப் பாடலில் மயிலேறிய வானவனே என்கிறார். பூவோடு சேர்ந்தவை அனைத்தும் மணக்கும் என்பது போல, முருகனோடு தொடர்புடைய அனைத்திற்கும் புகழ் கிடைக்கும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங்கு எதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே
நிலையாமைத் தத்துவத்தைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது. ஆனாலும் யாரும் புரிந்து கொண்டது போலத் தெரியவில்லை. நாம் மகிழ்கின்ற விடயங்களெல்லாம் மின்னலைப் போன்றி தோன்றி மறையக் கூடியவை. ஒருவேளை அவை நிலைத்தாலும் மகிழ்ச்சி நிலைக்காது. சுவை மிகுந்த உணவுகளை உண்கிறோம். அந்தச் சுவை எவ்வளவு நேரம் இன்பம் தருகிறது. நாவில் உணவு இருக்கும் வரை சுவை தெரியும். அவ்வளவுதான். சரி. நாவில் தொடர்ந்து இருக்கட்டும் என்று உணவை வாயிலேயே வைத்திருந்தால் சுவை தொடருமா? சுவை சுமையாகிப் போகாதா? உலக இயக்கமாகிய கலவி இன்பமும் சிறு பொழுதே. மின்னலைப் போல. தோன்றும். நிற்பது போல நின்று உடனே மறையும்.
வாழ்க்கையே அப்படித்தானே. நேற்று பிறந்து, இன்று வாழ்ந்து, நாளை மடிவதுதானே வாழ்க்கை. மின்னலைப் போலத்தான். நினைக்காத பொழுது தோன்றி நினைக்காத பொழுது மறைவது. எப்பொழுது நடக்குமென்று கூற முடியாது. "மின்னே நிகர் வாழ்வு" என்கிறார் அருணகிரி நாதர். அந்த வாழ்வையும் நாம் விரும்புகிறோம். ஏன் விரும்புகிறோம் என்று யாருக்கும் தெரியாது. தெரியாமலே நடக்கிறது நமது வாழ்க்கை. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் பிறக்கிறோம். தொடக்கமே கோணல். முதல் கோணல் முற்றும் கோணல். அப்படிப்பட்ட வாழ்வை நாம் தெரியாமலே விரும்புகிறோம்.
ஏன் விரும்புகிறோம்? எல்லாம் விதியின் பயன். விதி என்பது ஊழ். ஊழிற் பெருவலி யாவுள என்று கூறுகிறார் வள்ளுவர். பெரியவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால்தான் அவர்கள் அடக்கமாக வாழ்கின்றார்கள். அமரருள் உய்க்கின்றார்கள். நமக்கும் எடுத்துச் சொல்கின்றார்கள். வள்ளுவரைப் போல. அருணகிரி நாதரைப் போல. "என்ன இது! மானிடப் பிறப்பெடுத்து விட்டோம். எல்லாம் மின்னலைப் போல நடக்கிறது. இருந்தும் இதைப் போய் விரும்பிச் சீரழிகின்றோமே! இதைத்தான் விதியின் பயன் என்பதோ!" என்று வருந்துகிறார் அருணகிரி.
கடன் கேட்பதையும் கடனில்லாதவனிடம் கேட்க வேண்டும். ஏற்கனவே கடனாளியிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்குமா? நிலையில்லாத வாழ்க்கைச் சமுத்திரத்தைக் கடக்க நிலைப்பவரிடம்தானே கேட்க வேண்டும். என்றும் நிலைக்கும் கந்தனைக் கேட்கிறார் அருணகிரி. பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே என்று அடுக்குகிறார் புகழாரங்களை. பொன் ஒளிரும். முருகன் ஒளி பொருந்தியவர். மணி குளிரும். ஆறுமுகர் குளிர்ச்சி மிகுந்த பார்வை கொண்டவர். பொருள் என்பது மெய்ப்பொருள். வேலவரின் ஞானமே மெய்ப்பொருள். அருள் நமக்கு வேண்டியது. கந்தவேள் அருளினால் நமது சொந்தவேள்.
இதையெல்லாம் கூறிவிட்டு மன்னே என்கிறார். அதாவது மன்னன். மன்னன் என்பவன் ஆள்கின்றவன். பழநி ஆண்டவன் என்றைக்கும் ஆள்கின்றவன் என்று சொல்கிறார். மயிலேறிய முருகனைப் புகழ்வதில் அருணகிரிக்கு அவ்வளவு ஆர்வம். முதலில் மயிலேறிய சேவகனே என்றார். இந்தப் பாடலில் மயிலேறிய வானவனே என்கிறார். பூவோடு சேர்ந்தவை அனைத்தும் மணக்கும் என்பது போல, முருகனோடு தொடர்புடைய அனைத்திற்கும் புகழ் கிடைக்கும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, August 01, 2006
27. ஆதாரத்தின் ஆதாரம்
ஆதாரம் என்ற சொல் தமிழில் மிகவும் முக்கியமானது. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒன்று ஆதாரமாக இருக்கிறது. உடலுக்கு உயிர் ஆதாரம். உயிருக்கு ஆன்மா ஆதாரம். ஆதாரமில்லாதது ஒன்றுமில்லை. பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் இருக்கும். நெய்யிற்கு கிண்ணம் ஆதாரம். கிண்ணத்திற்கு நெய் ஆதாரம். நெய் இல்லையென்றால் அதை வைக்கக் கிண்ணம் தேவையில்லை. கிண்ணம் இல்லையென்றால் நெய்யை சேமிக்க முடியாது. அதே போலத்தான் உடலும் உயிரும். ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றிற்குப் பயனில்லை.
இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்? அருள் இருக்க வேண்டும். அது இறைவனின் அடியவர்களைச் சேர வேண்டும். அடியார்களுக்கு இறைவன் அருளே ஆதாரம். அதுதான் அவர்களுக்கு வாழ்வளிக்கும். இப்பொழுது புரிகிறதா ஆதாரத்தின் ஆதாரம்.
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனோ
தீதா சுரலோக சிகாமணியே!
அருணகிரி படாத பாடெல்லாம் பட்டவர். பிறகு ஆண்டவனின் அருட்பார்வை அவர் மீது பட்டது. அருணகிரியாக இருந்தவர் அருணகிரி நாதரானார். முதலில் அவர் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த பொழுது இறைவன் அருள் என்னும் ஆதாரம் இல்லை. அதைத்தான் "ஆதாரம் இலேன் அருளைப் பெறவே" என்கிறார். "முருகா! உன்னுடைய அருள் கிடைத்தது. ஆனால் அதைப் பெறுவதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருந்தது? சிற்றின்பச் சேற்றில் உழன்று கொண்டிருந்த என்னை உன்னுடைய அருளைக் கொடுத்து கை தூக்கி விட்டாய். எனக்கு என்ன தகுதி என்று நீ கொஞ்சமும் நினைகக்வில்லையே! உன் கருணையே கருணை!"
"ஆதாரமிலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே" என்ற வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கூறுவார்கள். "முருகா! உன்னுடைய அருளைப் பெறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தேனே! நீ கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லயே!" என்று. ஆனால் முருகன் நினைக்காமலா அருணகிரிக்கு வாழ்வு வந்தது? ஆகையால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தவறு செய்து விட்டோம். இருந்தும் மற்றொருவர் உதவுகிறார். அவரிடம் என்ன சொல்வோம்? "ஐயா! நான் தப்பு செய்து விட்டேன். இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல் பெரிய மனது செய்ததற்கு நன்றி" என்றுதானே சொல்வோம். அந்த வகையில்தால் இங்கும் பொருள் கொள்ள வேண்டும். அருணகிரி செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் அருள் மழை பொழிந்தார் முருகன். தாயுள்ளம் முருகனுக்கு.
அந்தக் கருணை உள்ளம் கொண்டவனை எப்படிப் பாராட்டுவது? அவனது நலன்கள் என்ன? வேதாகம ஞான விநோதன். வேதங்களை அறிந்தவனே! அவைகளைக் கடந்தவனே! சரி. வேதம் என்றால் என்ன? எழுதாக் கிளவி நான்கு வேதங்களா? அப்படியும் கொள்ளலாம். உண்மையில் வேதம் என்பது மெய்ப்பொருள் தத்துவம். அந்த மெய்ப்பொருளைப் பற்றித் தமிழ் என்ன சொல்கிறது? "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே" என்கிறது தேவாரப் பதிகம். வேதம் நான்கிலும் அல்ல. மாறாக வேதம் நான்கினும். அதாவது நான்கு வேதங்களைக் காட்டிலும் நமச்சிவாயம் என்ற மந்திரம் மெய்ப்பொருளாகும். ஔவை சொல்வது என்ன? உமையோ இறைவனொரு பாகத்து ஒடுக்கம் என்று சொல்லியவள், இறைவனோ தொண்டருள்ளதுள்ளத்து ஒடுக்கம் என்று கூறியிருக்கிறாள். முருகப் பெருமான் தொண்டர்களுக்கான தெய்வம். தொண்டர்களுக்கு உள்ளுமிருந்து அவர்களைக் கடந்தும் இருக்கும் கருணைக் கடவுள். இப்பொழுது படியுங்கள். "வேதாகம ஞான விநோதன்!" புதுப் பொருள் புரிகிறதா!
இறைவனுடைய புகழை சொல்லால் அளக்க முடியாது. செயலால் விளக்க முடியாது. மனதால் அளக்க முடியுமா? வானம் விரிந்தது என்று சொல்வோம். எவ்வளவு விரிந்தது என்று இன்று வரைக்கும் எந்த அறிவியல் அறிஞரும் சொல்லியிருக்கின்றாரா? அதுபோலத்தான் இறைவனின் புகழும். அதைத்தான் "மன அதீதா" என்ற சொற்றொடரில் அழகாக விளக்குகிறார் அருணகிரி நாதர்.
"முருகா! எத்தனையோ குற்றங்கள் செய்தேன். உன்னுடைய அருளை அடைய எனக்கு எந்த ஆதாரமும் இல்லை. அடித்தளமும் இல்லை. இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல், ஓடி வந்து என்னை ஆட்கொண்ட பரமகுரு! நீ தொண்டருக்கும் தொண்டன்! வேத நாயகன்! வாக்கால் மனத்தால் அளக்கவொன்னா தனிப் பெருந் தெய்வம்! தேவலோகத்தின் மணிமுடி! உன் புகழ் வாழ்க!"
பக்தியுடன்,
கோ.இராகவன்
இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்? அருள் இருக்க வேண்டும். அது இறைவனின் அடியவர்களைச் சேர வேண்டும். அடியார்களுக்கு இறைவன் அருளே ஆதாரம். அதுதான் அவர்களுக்கு வாழ்வளிக்கும். இப்பொழுது புரிகிறதா ஆதாரத்தின் ஆதாரம்.
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனோ
தீதா சுரலோக சிகாமணியே!
அருணகிரி படாத பாடெல்லாம் பட்டவர். பிறகு ஆண்டவனின் அருட்பார்வை அவர் மீது பட்டது. அருணகிரியாக இருந்தவர் அருணகிரி நாதரானார். முதலில் அவர் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த பொழுது இறைவன் அருள் என்னும் ஆதாரம் இல்லை. அதைத்தான் "ஆதாரம் இலேன் அருளைப் பெறவே" என்கிறார். "முருகா! உன்னுடைய அருள் கிடைத்தது. ஆனால் அதைப் பெறுவதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருந்தது? சிற்றின்பச் சேற்றில் உழன்று கொண்டிருந்த என்னை உன்னுடைய அருளைக் கொடுத்து கை தூக்கி விட்டாய். எனக்கு என்ன தகுதி என்று நீ கொஞ்சமும் நினைகக்வில்லையே! உன் கருணையே கருணை!"
"ஆதாரமிலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே" என்ற வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கூறுவார்கள். "முருகா! உன்னுடைய அருளைப் பெறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தேனே! நீ கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லயே!" என்று. ஆனால் முருகன் நினைக்காமலா அருணகிரிக்கு வாழ்வு வந்தது? ஆகையால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தவறு செய்து விட்டோம். இருந்தும் மற்றொருவர் உதவுகிறார். அவரிடம் என்ன சொல்வோம்? "ஐயா! நான் தப்பு செய்து விட்டேன். இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல் பெரிய மனது செய்ததற்கு நன்றி" என்றுதானே சொல்வோம். அந்த வகையில்தால் இங்கும் பொருள் கொள்ள வேண்டும். அருணகிரி செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் அருள் மழை பொழிந்தார் முருகன். தாயுள்ளம் முருகனுக்கு.
அந்தக் கருணை உள்ளம் கொண்டவனை எப்படிப் பாராட்டுவது? அவனது நலன்கள் என்ன? வேதாகம ஞான விநோதன். வேதங்களை அறிந்தவனே! அவைகளைக் கடந்தவனே! சரி. வேதம் என்றால் என்ன? எழுதாக் கிளவி நான்கு வேதங்களா? அப்படியும் கொள்ளலாம். உண்மையில் வேதம் என்பது மெய்ப்பொருள் தத்துவம். அந்த மெய்ப்பொருளைப் பற்றித் தமிழ் என்ன சொல்கிறது? "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே" என்கிறது தேவாரப் பதிகம். வேதம் நான்கிலும் அல்ல. மாறாக வேதம் நான்கினும். அதாவது நான்கு வேதங்களைக் காட்டிலும் நமச்சிவாயம் என்ற மந்திரம் மெய்ப்பொருளாகும். ஔவை சொல்வது என்ன? உமையோ இறைவனொரு பாகத்து ஒடுக்கம் என்று சொல்லியவள், இறைவனோ தொண்டருள்ளதுள்ளத்து ஒடுக்கம் என்று கூறியிருக்கிறாள். முருகப் பெருமான் தொண்டர்களுக்கான தெய்வம். தொண்டர்களுக்கு உள்ளுமிருந்து அவர்களைக் கடந்தும் இருக்கும் கருணைக் கடவுள். இப்பொழுது படியுங்கள். "வேதாகம ஞான விநோதன்!" புதுப் பொருள் புரிகிறதா!
இறைவனுடைய புகழை சொல்லால் அளக்க முடியாது. செயலால் விளக்க முடியாது. மனதால் அளக்க முடியுமா? வானம் விரிந்தது என்று சொல்வோம். எவ்வளவு விரிந்தது என்று இன்று வரைக்கும் எந்த அறிவியல் அறிஞரும் சொல்லியிருக்கின்றாரா? அதுபோலத்தான் இறைவனின் புகழும். அதைத்தான் "மன அதீதா" என்ற சொற்றொடரில் அழகாக விளக்குகிறார் அருணகிரி நாதர்.
"முருகா! எத்தனையோ குற்றங்கள் செய்தேன். உன்னுடைய அருளை அடைய எனக்கு எந்த ஆதாரமும் இல்லை. அடித்தளமும் இல்லை. இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல், ஓடி வந்து என்னை ஆட்கொண்ட பரமகுரு! நீ தொண்டருக்கும் தொண்டன்! வேத நாயகன்! வாக்கால் மனத்தால் அளக்கவொன்னா தனிப் பெருந் தெய்வம்! தேவலோகத்தின் மணிமுடி! உன் புகழ் வாழ்க!"
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, July 25, 2006
26. நிற்பதும் நிலைப்பதும்
இந்த உலகத்தில் குற்றங்கள் எதனால் நடக்கின்றன? குற்றம் செய்கின்றவர்கள் எதனால் அதைச் செய்கின்றார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். அது நிலையாமையை நினைக்காமை. நாம் நிலைப்போம். நமது வாழ்வு நிலைக்கும். நமது அதிகாரம் நிலைக்கம் என்று நினைப்பதுதான் குற்றங்களின் அடிப்படைக் காரணம். நிற்பது எது? நிலைப்பது எது? நிற்பவைகள் எல்லாம் நிலைப்பவைகள் அல்ல. வானுயர உயர்ந்த மாடமாளிகைகள் நாள்பட நிற்கும். நூற்றாண்டுகளையும் தாண்டி நிற்கும். ஆனால் எப்பொழுதும் நின்று நிலைக்குமா? ஆக எப்பொழுதும் ஒன்று நிற்குமானால் அது நிலைப்பது.
பேபல் மன்னனுக்கும் அந்தக் குழப்பம் வந்தது. தான் நிலைப்போம். தனது ஆட்சியும் அதிகாரமும் நிலைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டான். விளைவு? விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு கோபுரம் நின்றது. அந்தக் கோபுரமும் நிலைக்கும் என்று நம்பி, அதன் மீது ஏறி நின்று இறைவனை வம்புக்கிழுத்தான். பாவம் பேபல். நிற்பவைகள் எல்லாம் நிலைக்காதவை என்று அவனுக்கு உணர்த்த அவனையும் அழித்து, அவனது கோபுரத்தையும் அழித்தார் இறைவன். நிற்பவைகளையும் நிலைப்பவைகளையும் முறையாகப் புரிந்து கொண்டிருந்தால் இறைவனின் கருணையோடு பேபல் வாழ்ந்திருப்பான்.
நிற்பது குறித்தும் நிலைப்பது குறித்தும் அழகும் கருத்தும் ஒருங்கே அமைந்த பாடல் இது. இதற்கு விளக்கம் சொல்வதும் மிகவும் இனிமையானது.
மெய்யே என வெவ்வினை வாழ்வையுகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே
நிலைப்பது எது என்ற உண்மையை உணர வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணி உழன்று கொண்டிருந்தால் நன்றன்று. அப்படி எத்தனை நாள்தான் துன்பப்படுவது? முருகா! நீதான் காக்க வேண்டும். இதைத்தான் முதலிரண்டு வரிகளில் அழகாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். "மெய்யே என வெவ்வினை வாழ்வினை உகந்து, ஐயோ! அடியேன் அலையத் தகுமோ!"
அடுத்த இரண்டு அடிகளும் அழகுணர்ச்சி மிகுந்த வரிகள். "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்" என்கிறார் அருணகிரி. முருகனுடைய திருக்கைகளும், அந்தக் கைகள் தாங்கிய வேலும், கழலணிந்த திருவடிகளும் செம்மையானவை என்று இதற்குப் பொருள். கொடுத்துச் சிவக்கும் வள்ளலின் கைகள். வள்ளியின் கணவன் முருகனும் வள்ளல்தான். வேல் ஏன் செம்மையாக இருக்கிறது? எதிரிகளைக் கொன்றதாலா? இல்லை. வேல் அறிவின் அடையாளம். கொண்ட அறிவும் செம்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறவழியில் நடக்க முடியும். செம்மையற்ற அறிவு அழிவு வழியையே காட்டும். முருகனின் திருவடிகள் எதனால் சிவந்தன? அந்தத் திருவடிகளை தமிழடியவர்கள் தாங்கித் தாங்கிச் சிவந்தனவாம். என்ன அழகான நயம். மேலே சொன்ன அத்தனையையும் சொல்ல அருணகிரிக்கு தேவைப்பட்டவை ஐந்தே சொற்கள்.
மயிலேறிய சேவகனே! முருகன் திருக்கோலங்களிலேயே சிறந்தது மயில் மீது அமர்ந்த கோலம். வள்ளி தெய்வானையுடன் இருந்தால் இன்னமும் சிறப்பு. முருகனின் செம்மைப் பண்பை சென்ற அடியில் பார்த்தோம். மாணிக்கத்தை ஒத்த செம்மை. மயிலானது பசுமை கலந்த நிறமுடையது. அதாவது மரகத வண்ணம். மயில் மீது முருகன் அமர்ந்திருப்பது மரகதமும் மாணிக்கமும் ஒன்று சேர்ந்து இருப்பது போல எழில் மிகுந்த காட்சி. அந்தக் காட்டியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
முருகா! மயிலேறிய மாணிக்கமே! திருக்கரங்களும், கரமேந்திய வேலும், அடியவர் துயர் நீக்கும் திருவடிகளும் செம்மையாகக் விளங்குகின்றவனே! நிலையாத இந்த வாழ்வை உண்மையென்று நம்பி துன்புறாமல் காப்பாற்றுவாய்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
பேபல் மன்னனுக்கும் அந்தக் குழப்பம் வந்தது. தான் நிலைப்போம். தனது ஆட்சியும் அதிகாரமும் நிலைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டான். விளைவு? விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு கோபுரம் நின்றது. அந்தக் கோபுரமும் நிலைக்கும் என்று நம்பி, அதன் மீது ஏறி நின்று இறைவனை வம்புக்கிழுத்தான். பாவம் பேபல். நிற்பவைகள் எல்லாம் நிலைக்காதவை என்று அவனுக்கு உணர்த்த அவனையும் அழித்து, அவனது கோபுரத்தையும் அழித்தார் இறைவன். நிற்பவைகளையும் நிலைப்பவைகளையும் முறையாகப் புரிந்து கொண்டிருந்தால் இறைவனின் கருணையோடு பேபல் வாழ்ந்திருப்பான்.
நிற்பது குறித்தும் நிலைப்பது குறித்தும் அழகும் கருத்தும் ஒருங்கே அமைந்த பாடல் இது. இதற்கு விளக்கம் சொல்வதும் மிகவும் இனிமையானது.
மெய்யே என வெவ்வினை வாழ்வையுகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே
நிலைப்பது எது என்ற உண்மையை உணர வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணி உழன்று கொண்டிருந்தால் நன்றன்று. அப்படி எத்தனை நாள்தான் துன்பப்படுவது? முருகா! நீதான் காக்க வேண்டும். இதைத்தான் முதலிரண்டு வரிகளில் அழகாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். "மெய்யே என வெவ்வினை வாழ்வினை உகந்து, ஐயோ! அடியேன் அலையத் தகுமோ!"
அடுத்த இரண்டு அடிகளும் அழகுணர்ச்சி மிகுந்த வரிகள். "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்" என்கிறார் அருணகிரி. முருகனுடைய திருக்கைகளும், அந்தக் கைகள் தாங்கிய வேலும், கழலணிந்த திருவடிகளும் செம்மையானவை என்று இதற்குப் பொருள். கொடுத்துச் சிவக்கும் வள்ளலின் கைகள். வள்ளியின் கணவன் முருகனும் வள்ளல்தான். வேல் ஏன் செம்மையாக இருக்கிறது? எதிரிகளைக் கொன்றதாலா? இல்லை. வேல் அறிவின் அடையாளம். கொண்ட அறிவும் செம்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறவழியில் நடக்க முடியும். செம்மையற்ற அறிவு அழிவு வழியையே காட்டும். முருகனின் திருவடிகள் எதனால் சிவந்தன? அந்தத் திருவடிகளை தமிழடியவர்கள் தாங்கித் தாங்கிச் சிவந்தனவாம். என்ன அழகான நயம். மேலே சொன்ன அத்தனையையும் சொல்ல அருணகிரிக்கு தேவைப்பட்டவை ஐந்தே சொற்கள்.
மயிலேறிய சேவகனே! முருகன் திருக்கோலங்களிலேயே சிறந்தது மயில் மீது அமர்ந்த கோலம். வள்ளி தெய்வானையுடன் இருந்தால் இன்னமும் சிறப்பு. முருகனின் செம்மைப் பண்பை சென்ற அடியில் பார்த்தோம். மாணிக்கத்தை ஒத்த செம்மை. மயிலானது பசுமை கலந்த நிறமுடையது. அதாவது மரகத வண்ணம். மயில் மீது முருகன் அமர்ந்திருப்பது மரகதமும் மாணிக்கமும் ஒன்று சேர்ந்து இருப்பது போல எழில் மிகுந்த காட்சி. அந்தக் காட்டியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
முருகா! மயிலேறிய மாணிக்கமே! திருக்கரங்களும், கரமேந்திய வேலும், அடியவர் துயர் நீக்கும் திருவடிகளும் செம்மையாகக் விளங்குகின்றவனே! நிலையாத இந்த வாழ்வை உண்மையென்று நம்பி துன்புறாமல் காப்பாற்றுவாய்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, July 11, 2006
25. சண்டை போட்டு எதிர்ப்பவனைக் காப்பது
இந்த மண்ணில் பிறந்து விட்டாலே, உடலெடுத்து விட்டாலே, உடலிலுள்ள ஒவ்வொரு உணர்விற்கும் உணவிடுவது அவசியம். பசிக்கு உணவு. வருத்தத்தில் அழுகை. களைப்பில் ஓய்வு. மகிழ்ச்சியில் சிரிப்பு. சிலர் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருப்பார்கள். அது மிகவும் தவறானது. எந்த உணர்வையும் அடக்குவது எதிர்மறையான விளைவையே தரும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அலுப்புத் தட்டிவிடும். பசிக்கு மீறி உண்டால், உடல் உபாதை உண்டாகி உண்டதெல்லாம் மறுபடியும் ஆகாதென்று மருத்துவரால் தடுக்கப்பட்டு விடும்.
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே
அருணகிரியும் அளவிற்கு அதிகமாகவே உண்டார். அவருக்கும் ஒரு மருத்துவர் வந்தார். இளம் வயதில் தையலார் மையலில் வீழ்ந்து பரத்தையர் வீடே சுகமென்று இருந்தார். இத்தனைக்கும் அருணகிரி திருமணமானவர் என்று சொல்வார்கள். "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்." அருணகிரியின் அச்சும் முறிந்தது. முதலில் அழகு அழிந்து, பிறகு ஆசை அழிந்தது. முருகன் அருளால் உய்வு பெற்றார். அதைத்தான் முதலிரண்டு அடிகளில் இந்தப் பாடலில் சொல்கிறார். "கூர் வேல் விழியுடைய மங்கையர் கொங்கையிலே நான் நாள்தோறும் சேர்வேன். முருகா! அப்பொழுதெல்லாம் உன்னுடைய அருள் என்னைச் சேர வேண்டுமென்று நீ எண்ணவில்லையே!" முருகனைக் கேட்கிறார். முருகனுக்குத் தெரியாததா? மருத்துவனுக்குத்தானே தெரியும் மருந்தை எப்பொழுது கொடுக்க வேண்டுமென்று!
கந்தன் வந்தான். மருந்தைத் தந்தான். அருணகிரி பிழைத்தார். அருணகிரியால் தமிழ் பிழைத்தது. அந்தத் தமிழில் முருகனை பாடிப் புகழ்ந்து மகிழ்ந்தார். அதுதான் அடுத்த இரண்டு அடிகள். இங்கே மற்றொன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். உணர்வுகளுக்கு வடிகாலான சம்போகத்தைத் தவறென்று சொல்லவில்லை. மாறாக கொங்கையில் சேர்வேன். அத்தோடு முருகனின் அருளோடும் சேர்வேன் என்று கூறுகின்றார். உடலுறவு தவறென்றால் பிறகு உலகம் இயங்குவது எங்ஙனம்? ஆகையால் சொற்களைக் கோர்க்கும் பொழுது திறமையாக கோர்த்திருக்கின்றார். அருணகிரி பாடியதெல்லாம் நமக்காக என்று அறிந்து அநுபூதியைப் படிக்க வேண்டும்.
சூரன் என்பது ஆணவத்தின் உருவகம். அந்த ஆணவம் வேரோடு அழிய வேண்டும். கருவேல மரத்தை அடியோடு வெட்டினால் போதாது. வேரையும் பொசுக்கி விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மரம் முளைத்து விடும். அகந்தையும் அப்படியே! முருகன் சூரனை அழிக்கவில்லை. ஆனால் சூரனின் அகந்தையை அழித்தார். சூரன்தான் சேவலும் மயிலுமாய் புகழோடு இன்றும் வாழ்கின்றானே.
ஆணவத்தின் காரணம் மாயை. தாரகன் மாயாமலம். மாயைதான் தன்னை பெரியவன் என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பின் விளைவே ஆணவம். ஆக மாயை ஆணவத்தைக் கொடுக்கிறது. அதனால் முதலில் மாயையை அழித்தார் முருகன். கிரவுஞ்ச மலையான நின்ற தாரகாசுரனை முதலில் அழித்தார். அதைத்தான் "சூர் வேரொடு குன்று தொளைத்த" என்று விளக்குகிறது மூன்றாவது அடி. அப்படியெல்லாம் போர் புரிந்து முருகன் சாதித்தது என்ன? அழிவா? இல்லை. போரிட்டுக் காத்தார். யாரைக் காத்தார்? யாரோடு போர் புரிந்தாரோ அவர்களைக் காத்தார். அல்லது புரந்தார். சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். இதைத்தான் "போர் வேல புரந்தர பூபதியே" என்று பாடலை முடிக்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே
அருணகிரியும் அளவிற்கு அதிகமாகவே உண்டார். அவருக்கும் ஒரு மருத்துவர் வந்தார். இளம் வயதில் தையலார் மையலில் வீழ்ந்து பரத்தையர் வீடே சுகமென்று இருந்தார். இத்தனைக்கும் அருணகிரி திருமணமானவர் என்று சொல்வார்கள். "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்." அருணகிரியின் அச்சும் முறிந்தது. முதலில் அழகு அழிந்து, பிறகு ஆசை அழிந்தது. முருகன் அருளால் உய்வு பெற்றார். அதைத்தான் முதலிரண்டு அடிகளில் இந்தப் பாடலில் சொல்கிறார். "கூர் வேல் விழியுடைய மங்கையர் கொங்கையிலே நான் நாள்தோறும் சேர்வேன். முருகா! அப்பொழுதெல்லாம் உன்னுடைய அருள் என்னைச் சேர வேண்டுமென்று நீ எண்ணவில்லையே!" முருகனைக் கேட்கிறார். முருகனுக்குத் தெரியாததா? மருத்துவனுக்குத்தானே தெரியும் மருந்தை எப்பொழுது கொடுக்க வேண்டுமென்று!
கந்தன் வந்தான். மருந்தைத் தந்தான். அருணகிரி பிழைத்தார். அருணகிரியால் தமிழ் பிழைத்தது. அந்தத் தமிழில் முருகனை பாடிப் புகழ்ந்து மகிழ்ந்தார். அதுதான் அடுத்த இரண்டு அடிகள். இங்கே மற்றொன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். உணர்வுகளுக்கு வடிகாலான சம்போகத்தைத் தவறென்று சொல்லவில்லை. மாறாக கொங்கையில் சேர்வேன். அத்தோடு முருகனின் அருளோடும் சேர்வேன் என்று கூறுகின்றார். உடலுறவு தவறென்றால் பிறகு உலகம் இயங்குவது எங்ஙனம்? ஆகையால் சொற்களைக் கோர்க்கும் பொழுது திறமையாக கோர்த்திருக்கின்றார். அருணகிரி பாடியதெல்லாம் நமக்காக என்று அறிந்து அநுபூதியைப் படிக்க வேண்டும்.
சூரன் என்பது ஆணவத்தின் உருவகம். அந்த ஆணவம் வேரோடு அழிய வேண்டும். கருவேல மரத்தை அடியோடு வெட்டினால் போதாது. வேரையும் பொசுக்கி விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மரம் முளைத்து விடும். அகந்தையும் அப்படியே! முருகன் சூரனை அழிக்கவில்லை. ஆனால் சூரனின் அகந்தையை அழித்தார். சூரன்தான் சேவலும் மயிலுமாய் புகழோடு இன்றும் வாழ்கின்றானே.
ஆணவத்தின் காரணம் மாயை. தாரகன் மாயாமலம். மாயைதான் தன்னை பெரியவன் என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பின் விளைவே ஆணவம். ஆக மாயை ஆணவத்தைக் கொடுக்கிறது. அதனால் முதலில் மாயையை அழித்தார் முருகன். கிரவுஞ்ச மலையான நின்ற தாரகாசுரனை முதலில் அழித்தார். அதைத்தான் "சூர் வேரொடு குன்று தொளைத்த" என்று விளக்குகிறது மூன்றாவது அடி. அப்படியெல்லாம் போர் புரிந்து முருகன் சாதித்தது என்ன? அழிவா? இல்லை. போரிட்டுக் காத்தார். யாரைக் காத்தார்? யாரோடு போர் புரிந்தாரோ அவர்களைக் காத்தார். அல்லது புரந்தார். சிங்கமுகாசுரன் அம்பிகைக்கு சிம்ம வாகனம். தாரகன் ஐயனாருக்கு ஆனை வாகனம். இதைத்தான் "போர் வேல புரந்தர பூபதியே" என்று பாடலை முடிக்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, July 04, 2006
24. அடியின்றி முடியவோ!
அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே
அருணகிரி முருகனைப் புகழ்ந்து, அவனது திருவடிச் சிறப்புகளைப் பற்றி மகிழ்ந்து முகிழ்ந்து தெவிட்டாத தீந்தமிழில் நிறையச் சொல்கிறாரே! அப்படி என்ன கண்டார்? எதைக் கண்டார்? எப்படிக் கொண்டார் என்று சிந்தித்தால், விடை கிடைக்கிறது கந்தரலங்காரத்தில். "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்!" வண்டுகள் மொய்க்கும் பூந்தாரை (மாலை) அணிந்த வள்ளியை வேட்டுவன் உருவில் சென்று வென்றவனே! உன்னை ஒருவர் வைதாலும் அது தமிழில் என்றால் அவரை விரைந்து காப்பவனே! அதாவது முருகனுக்கு இருக்கும் தமிழ்க்காதல். தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளலைப் புகழ்ந்து பாடினால், என்னென்ன கிடைக்கும்? வாழ்வு போகும். ஆம். இவ்வுலக வாழ்வு எனும் பற்று போய், இறைவன் திருவடி கிடைக்கும். அதனால்தான் அலுக்காமல் தமிழில் நிறைய பாடியிருக்கிறார் அருணகிரி. திருப்புகழ்களும், கந்தர் அநுபூதியும், கந்தர் அலங்காரமும், கந்தர் அந்தாதியும், வேல் விருந்தமும், மயில் விருத்தமும். சேவல் விருத்தமும் இன்னும் நிறையவும் பாடியிருக்கிறார்.
முருகனுடைய திருவடிகளை எப்பொழுதும் நினைக்க வேண்டும். இது இல்லறம் துறந்த வல்லவர்களுக்கு. நாளுக்கு ஒரு முறையேனும் நினைக்க வேண்டும். இது இல்லறம் போற்றும் நல்லவர்களுக்கு. அப்படி நினைக்காமல் இருக்க முடியுமா? இருந்தால் அது அறியாமை. அறியாமை இருந்தால் என்ன ஆகும்? எல்லாம் முடிந்து போகும். அறியாமை என்னும் இருள் சூழ்ந்த நிலத்தினிலே வெற்றி என்னும் பயிர் விளைவதில்லை. அறிவு என்னும் சூரியன் அதற்குத் தேவைப்படுகிறது. இறைவனுடைய திருவடிகளை அறியாத பொழுது வாழ்க்கையின் முடிவு இருளில் மூழ்குகிறது. அதை அந்தம் என்பார்கள். அந்த அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். அதாவது எமன். கரிய எருமை மேல் ஏறி வருவான். ஆகையால் யமன் வருகையில் இருளும் வரும். ஆனால் இறைவனுடைய அடியவர்களுக்கு அந்தத் துயரம் இல்லை. வேலோடும் மயிலோடும் சேவலோடும் முருகனே வந்தணைப்பான். ஆகையால் முடிவு கெடாது. இப்பொழுது புரிந்திருக்குமே "அடியைக் குறியாதறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ!"
முதலிரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அடியார்க்கு யாம் அடியார் என்பது ஈசன் வாக்கு. பெரியது எது என்ற கேள்விக்கு ஔவையும் "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்கிறார். இறைவனுக்கும் இவ்வுலக மக்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்த (இன்றும் மக்கள் மனதில் வாழும்) அடியார்கள்து பெருமைகளை அறிந்து உணர வேண்டும். அவர்தம் வாழ்வில் பின்பற்றிய பொதுநலனில் நாமும் பாடம் கற்க வேண்டும். பெருஞ் சமயக் குரவர் திருநாவுக்கரசர். தேவாரம் பாடி ஈசன் அருளை உலகுக்குக் காட்டிய மகான். அப்படிப்பட்ட பெரியவர் சமயத் தொண்டோடு சமூகத் தொண்டும் செய்தார். ஆம். உழவாரப் பணி செய்து தொண்டாற்றினார். பலரும் நடக்கும் நிலம். அங்கே முட்செடிகள் இருந்தால் என்ன? அதை பெரும் சமயக் குரவரான அப்பரா செய்ய வேண்டும்? மடத்தில் இருக்கின்றவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாமே! ஆனால் அவரே செய்தார். ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர். காந்தியடிகள் தம்முடைய கழிப்பறையைத் தாமே செய்து வந்தார். அது பெரியவர்கள் செயல். அந்தச் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்று வாழ்ந்தால் அன்றி, நம்முடைய வாழ்க்கையில் எந்த பயனும் இருக்காது. இல்லையென்றால் எல்லாரையும் போல நமது வாழ்வும் முடிந்து போகும். அடியார்கள் புகழ் போல நின்று நிலைக்காது.
வடிவிக்கிர வேல் மகிபா என்றால்? முருகனுடைய வேல் வடிவுடையது. அறிவுடையது. வெற்றி உடையது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது என்ன? கொடியானது கொம்பைச் சுற்றி வளரும். அங்கே கொடிக்கு கொம்பு ஆதாரம். கொம்பிற்கு கொடி ஆதாரம். ஒன்று இல்லையேல் மற்றொன்று இருக்க வேண்டியதில்லை. வேறுவேறாயினும் இரண்டும் ஒன்றே. இல்லறத்தில் கணவன் மனைவி உறவும் அவ்வாறே. பெரியவரும் இல்லை. சிறியவரும் இல்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரம். இதை எடுத்துக் காட்டத்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் வழக்கம் வந்தது. இதை வைத்துக் கொண்டு இறைவனுக்கு இல்லற உணர்ச்சிகள் இருப்பதாக தவறாகக் கருதக் கூடாது. எழுத்துக் கூட்டி எழுதச் சொல்லித் தரும் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். இருந்தும் மாணவனுக்கான அவரும் எழுத்துக் கூட்டுவது போல இறைவன் இறைவியோடு சேர்ந்து காட்சி தருகிறான். சரி. செய்யுளுக்கு வருவோம். முருகன் கொம்பு. வள்ளி கொடி. அதைத்தான் குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே என்கிறார். வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது வள்ளிக் கொடியை.
குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். உருவத்தில் பெரியது பூதம். பூதரன் என்றால் பருத்தவன். குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். அப்படிப் பட்ட முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி நாம் வாழ்வு பெற வேண்டும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே
அருணகிரி முருகனைப் புகழ்ந்து, அவனது திருவடிச் சிறப்புகளைப் பற்றி மகிழ்ந்து முகிழ்ந்து தெவிட்டாத தீந்தமிழில் நிறையச் சொல்கிறாரே! அப்படி என்ன கண்டார்? எதைக் கண்டார்? எப்படிக் கொண்டார் என்று சிந்தித்தால், விடை கிடைக்கிறது கந்தரலங்காரத்தில். "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்!" வண்டுகள் மொய்க்கும் பூந்தாரை (மாலை) அணிந்த வள்ளியை வேட்டுவன் உருவில் சென்று வென்றவனே! உன்னை ஒருவர் வைதாலும் அது தமிழில் என்றால் அவரை விரைந்து காப்பவனே! அதாவது முருகனுக்கு இருக்கும் தமிழ்க்காதல். தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளலைப் புகழ்ந்து பாடினால், என்னென்ன கிடைக்கும்? வாழ்வு போகும். ஆம். இவ்வுலக வாழ்வு எனும் பற்று போய், இறைவன் திருவடி கிடைக்கும். அதனால்தான் அலுக்காமல் தமிழில் நிறைய பாடியிருக்கிறார் அருணகிரி. திருப்புகழ்களும், கந்தர் அநுபூதியும், கந்தர் அலங்காரமும், கந்தர் அந்தாதியும், வேல் விருந்தமும், மயில் விருத்தமும். சேவல் விருத்தமும் இன்னும் நிறையவும் பாடியிருக்கிறார்.
முருகனுடைய திருவடிகளை எப்பொழுதும் நினைக்க வேண்டும். இது இல்லறம் துறந்த வல்லவர்களுக்கு. நாளுக்கு ஒரு முறையேனும் நினைக்க வேண்டும். இது இல்லறம் போற்றும் நல்லவர்களுக்கு. அப்படி நினைக்காமல் இருக்க முடியுமா? இருந்தால் அது அறியாமை. அறியாமை இருந்தால் என்ன ஆகும்? எல்லாம் முடிந்து போகும். அறியாமை என்னும் இருள் சூழ்ந்த நிலத்தினிலே வெற்றி என்னும் பயிர் விளைவதில்லை. அறிவு என்னும் சூரியன் அதற்குத் தேவைப்படுகிறது. இறைவனுடைய திருவடிகளை அறியாத பொழுது வாழ்க்கையின் முடிவு இருளில் மூழ்குகிறது. அதை அந்தம் என்பார்கள். அந்த அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். அதாவது எமன். கரிய எருமை மேல் ஏறி வருவான். ஆகையால் யமன் வருகையில் இருளும் வரும். ஆனால் இறைவனுடைய அடியவர்களுக்கு அந்தத் துயரம் இல்லை. வேலோடும் மயிலோடும் சேவலோடும் முருகனே வந்தணைப்பான். ஆகையால் முடிவு கெடாது. இப்பொழுது புரிந்திருக்குமே "அடியைக் குறியாதறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ!"
முதலிரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அடியார்க்கு யாம் அடியார் என்பது ஈசன் வாக்கு. பெரியது எது என்ற கேள்விக்கு ஔவையும் "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்கிறார். இறைவனுக்கும் இவ்வுலக மக்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்த (இன்றும் மக்கள் மனதில் வாழும்) அடியார்கள்து பெருமைகளை அறிந்து உணர வேண்டும். அவர்தம் வாழ்வில் பின்பற்றிய பொதுநலனில் நாமும் பாடம் கற்க வேண்டும். பெருஞ் சமயக் குரவர் திருநாவுக்கரசர். தேவாரம் பாடி ஈசன் அருளை உலகுக்குக் காட்டிய மகான். அப்படிப்பட்ட பெரியவர் சமயத் தொண்டோடு சமூகத் தொண்டும் செய்தார். ஆம். உழவாரப் பணி செய்து தொண்டாற்றினார். பலரும் நடக்கும் நிலம். அங்கே முட்செடிகள் இருந்தால் என்ன? அதை பெரும் சமயக் குரவரான அப்பரா செய்ய வேண்டும்? மடத்தில் இருக்கின்றவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாமே! ஆனால் அவரே செய்தார். ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர். காந்தியடிகள் தம்முடைய கழிப்பறையைத் தாமே செய்து வந்தார். அது பெரியவர்கள் செயல். அந்தச் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்று வாழ்ந்தால் அன்றி, நம்முடைய வாழ்க்கையில் எந்த பயனும் இருக்காது. இல்லையென்றால் எல்லாரையும் போல நமது வாழ்வும் முடிந்து போகும். அடியார்கள் புகழ் போல நின்று நிலைக்காது.
வடிவிக்கிர வேல் மகிபா என்றால்? முருகனுடைய வேல் வடிவுடையது. அறிவுடையது. வெற்றி உடையது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது என்ன? கொடியானது கொம்பைச் சுற்றி வளரும். அங்கே கொடிக்கு கொம்பு ஆதாரம். கொம்பிற்கு கொடி ஆதாரம். ஒன்று இல்லையேல் மற்றொன்று இருக்க வேண்டியதில்லை. வேறுவேறாயினும் இரண்டும் ஒன்றே. இல்லறத்தில் கணவன் மனைவி உறவும் அவ்வாறே. பெரியவரும் இல்லை. சிறியவரும் இல்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரம். இதை எடுத்துக் காட்டத்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் வழக்கம் வந்தது. இதை வைத்துக் கொண்டு இறைவனுக்கு இல்லற உணர்ச்சிகள் இருப்பதாக தவறாகக் கருதக் கூடாது. எழுத்துக் கூட்டி எழுதச் சொல்லித் தரும் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். இருந்தும் மாணவனுக்கான அவரும் எழுத்துக் கூட்டுவது போல இறைவன் இறைவியோடு சேர்ந்து காட்சி தருகிறான். சரி. செய்யுளுக்கு வருவோம். முருகன் கொம்பு. வள்ளி கொடி. அதைத்தான் குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே என்கிறார். வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது வள்ளிக் கொடியை.
குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். உருவத்தில் பெரியது பூதம். பூதரன் என்றால் பருத்தவன். குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். அப்படிப் பட்ட முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி நாம் வாழ்வு பெற வேண்டும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, June 27, 2006
23. சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொன்னால்
முருகா, உன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று விருப்பம் கொண்டு வள்ளி நாச்சியார் அரும் பெரும் தவம் செய்து, அதன் பலனாக உன்னையே அடைந்தார். அழகான கூந்தல் அலங்காரம் கொண்ட வள்ளியின் திருவடிகளை அடையும், மேருமலையையை ஒத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், வேளையில் வந்து காப்பவருமான முருகா! எங்களையும் காத்து அருள்வாயாக!
காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே
மேலே சொன்னது இந்தப் பாடலுக்கான வெளிப்படையான விளக்கம். அதை அப்படியே பொருள் கொள்வதிலும் தவறில்லை. அதே நேரத்தில் உட்பொருளை அறிந்து கொள்ள முடியுமானால் அது மிகவும் சிறந்தது. அதை இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இந்தப் பாடலில் அருணகிரி உலக இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். மிகவும் ஆழமாக அறிந்து தெளிய வேண்டிய பாடலிது.
"காளைக் குமரேசன் எனக் கருதி" என்றால் "தனக்கான ஆண்மகன் என்று கருதி" என்று பொருள். காளை என்றால் ஆண்மகன் என்று வேறு எங்கு சொல்லியிருக்கிறார்கள்? புறநாநூறு உதவிக்கு வருகிறது. "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே" என்ற பாடலில் "களிறு எறிந்து மீள்தல் காளைக்குக் கடனே" என்று வருகிறது. காளை என்ற ஆகுபெயர் இங்கே வீரத்தைக் குறிக்கிறது. முருகனே மணவாளனாக வரவேண்டும் என்று வள்ளி தவம் இருந்தார். அதைத்தான் "தாளைப் பணியத் தவம் எய்தியவா" என்கிறார் அருணகிரி.
சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆகின்றது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்குக்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது.
இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கே கொண்டவர் முருகப் பெருமான். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. தெய்வயானை அம்மை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. ஆகையால்தான் வள்ளி தெய்வயானையோடு முருகனை வணங்குதல் மிகவும் சிறப்பு. முன்பே சொன்னது போல வள்ளிக்கு முருகனை அடையும் ஆசை இருந்தது. ஆகையால் தவம் செய்தார். அடைய விருப்பம் கொண்டு தவம் செய்தமையால் வள்ளி இச்சா சக்தியாகிறார்.
"வேளைச் சுரபூபதி மேருவையே" என்கின்ற சொற்றொடரை இப்பொழுது பார்ப்போம். மேரு மலை என்பது இமயமலையின் மற்றொரு பெயர். உலகத்தில் உயர்ந்த சிகரம் இமயத்தில்தானே இருக்கிறது. அதுபோல முருகக் கடவுள் உயர்ந்தவர் என்று பொருள். சுரபூபதி என்றால் தேவர்களின் தலைவன். அது சரி. அதென்ன வேளை? காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்கிறார் வள்ளுவர். அப்படி காக்க வேண்டிய வேளை வந்ததும் வேலைத் தூக்கிக் கொண்டு காக்கும் வேலை பார்க்க வருகின்றவன் கந்தன். அதனால்தான் அந்த வேளை என்ற அடைமொழி.
"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்றும் வருகிறதே. முன்பு ஒருமுறை முருகன் வள்ளியைப் பணிவாரா என்று பார்த்தோமே! "பணியா என வள்ளி பதம் பணியும்" என்ற வரிகளைச் சொல்கிறேன். பிறகு இங்கே மறுபடியும் வருகிறதே. இங்கே முருகன் வள்ளியைப் பணிகிறார் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறாரே அருணகிரி. என்ன நினைத்து சொல்லியிருப்பார்? அது ஒரு உட்பொருள். ஆசை அல்லது இச்சை என்பது அனைத்து செயல்களுக்கும் அறிவிற்கும் ஆதாரமாக இருப்பதைப் பார்த்தோம். உயிர்களுக்கு எல்லாம் ஆதாரமானது ஆன்மா. அந்த ஆன்மா விலகிவிட்டால் வெறும் உடலுக்கு எந்த ஆசையும் இல்லை. ஆகையால் செயலும் இல்லை. அதை அறியும் ஞானமும் இல்லை. அப்படிப்பட்ட ஆன்மாக்களை இறைவன் அணைத்துச் செல்வதுதான் "பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்ற சொற்றொடர். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. இச்சா சக்தி ஆன்மாவின் ஆதாரம். அந்த ஆன்மாக்கள் அடைவது இறைவன் திருவடியை. அதுவும் ஆன்மாக்கள் தேடிச்செல்ல வேண்டாம். பெருங்கருணையோடு இறைவனே ஆன்மாக்களை அணைத்துக் கொள்வான் என்பதைத்தான் அப்படிச் சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே
மேலே சொன்னது இந்தப் பாடலுக்கான வெளிப்படையான விளக்கம். அதை அப்படியே பொருள் கொள்வதிலும் தவறில்லை. அதே நேரத்தில் உட்பொருளை அறிந்து கொள்ள முடியுமானால் அது மிகவும் சிறந்தது. அதை இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இந்தப் பாடலில் அருணகிரி உலக இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். மிகவும் ஆழமாக அறிந்து தெளிய வேண்டிய பாடலிது.
"காளைக் குமரேசன் எனக் கருதி" என்றால் "தனக்கான ஆண்மகன் என்று கருதி" என்று பொருள். காளை என்றால் ஆண்மகன் என்று வேறு எங்கு சொல்லியிருக்கிறார்கள்? புறநாநூறு உதவிக்கு வருகிறது. "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே" என்ற பாடலில் "களிறு எறிந்து மீள்தல் காளைக்குக் கடனே" என்று வருகிறது. காளை என்ற ஆகுபெயர் இங்கே வீரத்தைக் குறிக்கிறது. முருகனே மணவாளனாக வரவேண்டும் என்று வள்ளி தவம் இருந்தார். அதைத்தான் "தாளைப் பணியத் தவம் எய்தியவா" என்கிறார் அருணகிரி.
சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆகின்றது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்குக்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது.
இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கே கொண்டவர் முருகப் பெருமான். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. தெய்வயானை அம்மை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. ஆகையால்தான் வள்ளி தெய்வயானையோடு முருகனை வணங்குதல் மிகவும் சிறப்பு. முன்பே சொன்னது போல வள்ளிக்கு முருகனை அடையும் ஆசை இருந்தது. ஆகையால் தவம் செய்தார். அடைய விருப்பம் கொண்டு தவம் செய்தமையால் வள்ளி இச்சா சக்தியாகிறார்.
"வேளைச் சுரபூபதி மேருவையே" என்கின்ற சொற்றொடரை இப்பொழுது பார்ப்போம். மேரு மலை என்பது இமயமலையின் மற்றொரு பெயர். உலகத்தில் உயர்ந்த சிகரம் இமயத்தில்தானே இருக்கிறது. அதுபோல முருகக் கடவுள் உயர்ந்தவர் என்று பொருள். சுரபூபதி என்றால் தேவர்களின் தலைவன். அது சரி. அதென்ன வேளை? காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்கிறார் வள்ளுவர். அப்படி காக்க வேண்டிய வேளை வந்ததும் வேலைத் தூக்கிக் கொண்டு காக்கும் வேலை பார்க்க வருகின்றவன் கந்தன். அதனால்தான் அந்த வேளை என்ற அடைமொழி.
"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்றும் வருகிறதே. முன்பு ஒருமுறை முருகன் வள்ளியைப் பணிவாரா என்று பார்த்தோமே! "பணியா என வள்ளி பதம் பணியும்" என்ற வரிகளைச் சொல்கிறேன். பிறகு இங்கே மறுபடியும் வருகிறதே. இங்கே முருகன் வள்ளியைப் பணிகிறார் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறாரே அருணகிரி. என்ன நினைத்து சொல்லியிருப்பார்? அது ஒரு உட்பொருள். ஆசை அல்லது இச்சை என்பது அனைத்து செயல்களுக்கும் அறிவிற்கும் ஆதாரமாக இருப்பதைப் பார்த்தோம். உயிர்களுக்கு எல்லாம் ஆதாரமானது ஆன்மா. அந்த ஆன்மா விலகிவிட்டால் வெறும் உடலுக்கு எந்த ஆசையும் இல்லை. ஆகையால் செயலும் இல்லை. அதை அறியும் ஞானமும் இல்லை. அப்படிப்பட்ட ஆன்மாக்களை இறைவன் அணைத்துச் செல்வதுதான் "பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்ற சொற்றொடர். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. இச்சா சக்தி ஆன்மாவின் ஆதாரம். அந்த ஆன்மாக்கள் அடைவது இறைவன் திருவடியை. அதுவும் ஆன்மாக்கள் தேடிச்செல்ல வேண்டாம். பெருங்கருணையோடு இறைவனே ஆன்மாக்களை அணைத்துக் கொள்வான் என்பதைத்தான் அப்படிச் சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, June 20, 2006
22. முருகன் காட்டும் ஒலியும் ஒளியும்
நுண்ணிய கருத்துகளை தண்மையாகச் சொல்வதில் அருணகிரிக்கு நிகர் அருணகிரியே! இந்தப் பாடலில் நான்கு வரிகள். முதல் வரி மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். மற்ற மூன்று வரிகளும் முருகனைப் புகழ்கின்றன. ஒரு பெரிய விஷயத்தை ஒரு அடியில் அடக்கிவிட்டு, முருகனைப் புகழ மூன்று அடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். காரணம் முருகனைப் புகழ்வதிலுள்ள ஆர்வம். எவ்வளவு புகழ்ந்தாலும் போதவில்லை. அதே நேரத்தில் அநுபூதி அடைவதற்கான கருத்தையும் சொல்ல வேண்டும். அதற்குக் கை கொடுகிறது தமிழ். சுருங்கச் சொல்ல பொருள் மிகுந்த சொற்களும், விரித்துச் சொல்ல அழகான சொற்களுமாய் தமிழ் விளையாட்டு நடத்தியிருக்கிறார் அருணகிரி.
கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரயென் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூரா விபாடணனே
கருதா மறவா நெறி என்றால் என்ன? எதைக் கருதக் கூடாது? எதை மறக்கக் கூடாது? முதலில் எதை மறக்கக் கூடாது என்று பார்ப்போம். "நன்றி மறப்பது நன்றன்று!" இதுவும் வள்ளுவர் வாக்கு. செய்நன்றி மறந்தவர்க்கு உய்வில்லை. ஆகையால் நன்றி மறக்கக் கூடாது. சரி. எதைக் கருதக் கூடாது? "நன்றல்லது அன்றே மறப்பது நன்று". அதை நினைத்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆகையால் அதைப் பெரிதாகக் கருதக் கூடாது. சரி. அதற்கும் கந்தர் அநுபூதிக்கும் என்ன தொடர்பு?
சூரபத்மன் சிறந்த தவசி. ஈசனே நேரில் வந்து வேண்டிய வரங்கள் தந்தார். அதிலிருந்து அவனது தவவலிமை புரியும். அப்படி ஈசனிடமே வரத்தைப் பெற்ற சூரன், வரம் தந்த வள்ளலின் அம்சமாக அவரது மகனே வந்து நின்ற பொழுது, நன்றியை மறந்து எதிர்த்தான். அப்படி எதிர்த்த சூரன் செய்தது நன்றல்லது. அந்த நன்றல்லதையும் அன்றே மறந்த முருகப் பெருமான், அவனைத் திருத்தி சேவலும் மயிலுமாக மாற்றி உலகோர் புகழும் வரம் கொடுத்தார். இப்பொழுது புரிகிறதா கருதா மறவா நெறி! இன்னொரு விதமாகவும் சொல்லலாம். யோகநிலை அல்லது தவநிலை என்பது நினைப்பையும் மறப்பையும் கடந்த நிலை. அந்த நிலையையும் இறைவனொடு நம்மை ஒன்று படுத்தும்.
அப்படிப்பட்ட அரிய நெறியும் வேண்டுமென்று முருகனின் தாள் பணிய வேண்டும். அதுதான் "கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா!" முருகனுடைய திருவடிகள் எப்படிப்பட்டவை? "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே" என்கிறது கந்தரலங்காரம். நான்முகன் நமது தலையில் எழுதியதை அழித்துவிடும் தன்மை முருகனுடைய திருவடிகளுக்கு உண்டு. அப்படி நான்முகன் எழுதியதை அழித்து நல்ல வாழ்வு தரும் பாதங்கள் கந்தனுடையவை. அப்படிப்பட்ட திருவடிகளைத் தர இசைவாய் வரதா என்கிறார். கொடுப்பதையும் விரும்பிக் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் இசைவாய் வரம் தா என்கிறார்.
முருகா! மயில்வாகனே! மயில் என்பது என்ன? சூரபதுமன். அதே நேரத்தில் ஓங்கார வடிவம். மயில் மேல் ஏறி வருகின்றவன் முருகன். ஆக முருகனைத் தாங்குவது மயில். வேறு விதமாகச் சொன்னால், முருகனின் இருக்கையே ஓங்காரம். ஓங்காரத்தையே அடித்தளமாகக் கொண்டவர் முருகப் பெருமான். அதனால்தான் மயில் வாகவன். மயில் மேல் உட்கார்வதா, பறப்பதா என்று விதண்டாவாதமாக ஆராயாமல், உட்பொருளை உணர்ந்தால் தமிழின் மேன்மை புரியும். தமிழ் உருவகமாகவும் புழங்கக் கூடிய மொழி. ஓங்காரம் என்பதைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் மயிலைப் பற்றிச் சொல்லி விளங்க வைத்து விடலாம். நமது முன்னோர்களின் அறிவுடைமை அது.
சூர விபாடணன் என்று செய்யுள் முடிகிறது. இது வடமொழிக் கையாளல். தமிழில் சூரனை இரண்டு கூறுகளாகப் பிரித்தவன் என்று பொருள். இங்குதான் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஏன் இரண்டு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். மூன்றாக நான்காக அல்லது தூளாக அடித்து நொறுக்கியிருக்கலாமே. அதை விடுத்து இரண்டாகப் பிரித்தது ஏன்? மயில் உருவடிவம். சேவல் ஒலிவடிவம். இந்த உலகப் பொருட்கள் அனைத்தும் ஓங்கார வடிவானவை. சூரனும் அவ்வாறே! வெள்ளை ஒளியை ஏழாகப் பிரிப்பது போல ஓங்காரமான சூரனைப் பிரித்து ஒங்காரத்தின் ஒளி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் காட்டியிருக்கிறார் முருகன். சுருங்கச் சொன்னால் ஒலியும் ஒளியும் காட்டியிருக்கிறார்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரயென் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூரா விபாடணனே
கருதா மறவா நெறி என்றால் என்ன? எதைக் கருதக் கூடாது? எதை மறக்கக் கூடாது? முதலில் எதை மறக்கக் கூடாது என்று பார்ப்போம். "நன்றி மறப்பது நன்றன்று!" இதுவும் வள்ளுவர் வாக்கு. செய்நன்றி மறந்தவர்க்கு உய்வில்லை. ஆகையால் நன்றி மறக்கக் கூடாது. சரி. எதைக் கருதக் கூடாது? "நன்றல்லது அன்றே மறப்பது நன்று". அதை நினைத்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆகையால் அதைப் பெரிதாகக் கருதக் கூடாது. சரி. அதற்கும் கந்தர் அநுபூதிக்கும் என்ன தொடர்பு?
சூரபத்மன் சிறந்த தவசி. ஈசனே நேரில் வந்து வேண்டிய வரங்கள் தந்தார். அதிலிருந்து அவனது தவவலிமை புரியும். அப்படி ஈசனிடமே வரத்தைப் பெற்ற சூரன், வரம் தந்த வள்ளலின் அம்சமாக அவரது மகனே வந்து நின்ற பொழுது, நன்றியை மறந்து எதிர்த்தான். அப்படி எதிர்த்த சூரன் செய்தது நன்றல்லது. அந்த நன்றல்லதையும் அன்றே மறந்த முருகப் பெருமான், அவனைத் திருத்தி சேவலும் மயிலுமாக மாற்றி உலகோர் புகழும் வரம் கொடுத்தார். இப்பொழுது புரிகிறதா கருதா மறவா நெறி! இன்னொரு விதமாகவும் சொல்லலாம். யோகநிலை அல்லது தவநிலை என்பது நினைப்பையும் மறப்பையும் கடந்த நிலை. அந்த நிலையையும் இறைவனொடு நம்மை ஒன்று படுத்தும்.
அப்படிப்பட்ட அரிய நெறியும் வேண்டுமென்று முருகனின் தாள் பணிய வேண்டும். அதுதான் "கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா!" முருகனுடைய திருவடிகள் எப்படிப்பட்டவை? "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே" என்கிறது கந்தரலங்காரம். நான்முகன் நமது தலையில் எழுதியதை அழித்துவிடும் தன்மை முருகனுடைய திருவடிகளுக்கு உண்டு. அப்படி நான்முகன் எழுதியதை அழித்து நல்ல வாழ்வு தரும் பாதங்கள் கந்தனுடையவை. அப்படிப்பட்ட திருவடிகளைத் தர இசைவாய் வரதா என்கிறார். கொடுப்பதையும் விரும்பிக் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் இசைவாய் வரம் தா என்கிறார்.
முருகா! மயில்வாகனே! மயில் என்பது என்ன? சூரபதுமன். அதே நேரத்தில் ஓங்கார வடிவம். மயில் மேல் ஏறி வருகின்றவன் முருகன். ஆக முருகனைத் தாங்குவது மயில். வேறு விதமாகச் சொன்னால், முருகனின் இருக்கையே ஓங்காரம். ஓங்காரத்தையே அடித்தளமாகக் கொண்டவர் முருகப் பெருமான். அதனால்தான் மயில் வாகவன். மயில் மேல் உட்கார்வதா, பறப்பதா என்று விதண்டாவாதமாக ஆராயாமல், உட்பொருளை உணர்ந்தால் தமிழின் மேன்மை புரியும். தமிழ் உருவகமாகவும் புழங்கக் கூடிய மொழி. ஓங்காரம் என்பதைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் மயிலைப் பற்றிச் சொல்லி விளங்க வைத்து விடலாம். நமது முன்னோர்களின் அறிவுடைமை அது.
சூர விபாடணன் என்று செய்யுள் முடிகிறது. இது வடமொழிக் கையாளல். தமிழில் சூரனை இரண்டு கூறுகளாகப் பிரித்தவன் என்று பொருள். இங்குதான் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஏன் இரண்டு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். மூன்றாக நான்காக அல்லது தூளாக அடித்து நொறுக்கியிருக்கலாமே. அதை விடுத்து இரண்டாகப் பிரித்தது ஏன்? மயில் உருவடிவம். சேவல் ஒலிவடிவம். இந்த உலகப் பொருட்கள் அனைத்தும் ஓங்கார வடிவானவை. சூரனும் அவ்வாறே! வெள்ளை ஒளியை ஏழாகப் பிரிப்பது போல ஓங்காரமான சூரனைப் பிரித்து ஒங்காரத்தின் ஒளி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் காட்டியிருக்கிறார் முருகன். சுருங்கச் சொன்னால் ஒலியும் ஒளியும் காட்டியிருக்கிறார்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, June 13, 2006
21. பாத்திரம் அறிந்து பிச்சையிடு
மிகவும் அரிதான பொருள் பொதிந்த பாடல். அதனால்தானோ என்னவோ "அரிது" என்றே துவக்கியிருக்கிறார் அருணகிரி.
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே
பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது தமிழ்ப் பழமொழி. காரணம் அந்தப் பிச்சையைத் தாங்கும் வன்மையும் தன்மையும் பாத்திரத்திற்கு இருக்க வேண்டும் என்பதுதான். தங்கக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட கழுதைப்பால் தானுங்கெட்டு கிண்ணத்தையும் கெடுக்கும் என்ற வழக்கு ஊர்ப்புறங்களில் இன்னும் உண்டு. ஒன்றை ஒருவருக்குக் கொடுக்கும் பொழுது அவர் அதற்குத் தகுதியானவர்தானா என்று அறிந்தே கொடுக்க வேண்டும். கொடுப்பது எதுவாயினும் இந்தக் கருத்து பொருந்தும்.
மீன் பிடிக்கத் தெரியாதவனுக்குத் தூண்டிலைக் கொடுத்து என்ன பயன்? கண்கள் இரண்டும் இழந்தவருக்கு ஓவியத்தால் என்ன நன்மை? விரைந்து செல்லும் ஊர்தியைக் காலிழந்தவருக்குக் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான். தானும் உண்ணவில்லை. உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்கவில்லை. ஆனால் ஔவைக்குக் கொடுத்தான். காரணம் ஔவையார் அந்த நெல்லிக்கனிக்குப் பொருத்தமானவர். தமிழ் வாழ ஆசைப்பட்டான் அதியமான். ஆகையால் பொருத்தமில்லாதவராக இருந்தால் நம்மைப் போன்றவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்.
சாதாரணப் பொருட்களுக்கே இப்படியென்றால், மிகவும் அரிதான பெரிதான பொருட்களுக்கு எத்துணை சிந்திக்க வேண்டும். கொடுக்குமிடத்தில் முருகன் இருந்தால் என்ன செய்வார்? நம்முடைய மனங்களில் அழுக்கு நிறைய இருக்கிறது. இருந்தும் இறைவன் மீது அன்பு வைக்கும் நல்ல பண்பை நமக்குத் தந்திருக்கிறான். அதற்கு நம்மைப் பாத்திரமாக்கி பிறகு நமக்கு அந்த பிச்சையை இட்டிருக்கிறான். பொருத்தமில்லாதவன் என்று இறைவன் ஒதுக்கி விடுவதில்லை. நம்மை அந்தப் பரிசுக்குப் பொருத்தமானவராக்கி அழகு பார்ப்பான் ஆண்டவன். அப்படி கந்தன் அருணகிரிக்குச் செய்த கருணைதான் இந்தப் பாடல். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக!" மிகவும் அரிதான உண்மைப் பொருளுக்கு என்னை பொருத்தமுள்ளவனாக மாற்றி உபதேசம் செய்தவனே என்று பாடுகிறார்.
அல்லா முகமது நபிகளிடத்திலே காட்டிய கருணையும், பரமபிதா மோசசிடம் காட்டிய கருணையும், முருகன் அருணகிரிக்குக் காட்டிய கருணையும் எவ்வளவு பெரியவை. இறைவன் நபியண்ணல் வழியாகக் குரானைத் தந்தார். மோசஸ் வழியாகப் பத்து கட்டளைகளைத் தந்தார். அருணகிரி வழியாக தமிழ் அமுதம் தந்தார். ஆக இம்மூவரும் இறைவன் கருணைக்குப் பொருத்தமானவர்கள். ஆகையால்தான் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பொருள், அவர்களுக்கும் பயன்பட்டு, இன்றளவும் நமக்கும் பயன்படுகிறது. இப்பொழுது புரிந்திருக்கும் பாத்திரமறிந்து பிச்சையிடும் நுண்மை. பாடலின் முதலிரண்டுனடிகளை இப்பொழுது படியுங்கள். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக உபதேசம் உணர்த்தியவா!" பொருள் விளங்குகிறது அல்லவா! மதங்களையெல்லாம் கடந்த தமிழ்.
"சேவலங் கொடியன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால் உலகே" என்கிறார் பெருந்தேவனார். சேவற்கொடியன் திருக்கரங்களில் உலகம் பத்திரமாக காக்கப் படுகிறது என்பது இதன் பொருள். சங்ககாலத் தமிழ் வரிகள் இவை. அப்படி உலகத்தின் பாரத்தைச் சுமக்கும் கடவுளின் தோள்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். இது உருவகம்தான். அதனால்தான் "விரிதாரண விக்கிரம வேள்" என்று முருகனைக் கூறுகிறார் அருணகிரி.
இமையோர் என்றால் இமைக்காதவர்கள். யார் அவர்கள்? தேவர்கள் இமைக்காதவர்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தேவர்கள் உச்சரிப்பது தாரக மந்திரம். தாரகம் என்றால் பிரணவம். அந்தப் பிரணவ மந்திரமும் முருகனுக்கு உரியது என்கிறார் அருணகிரி. தந்தைக்கே உபதேசித்தவன் அல்லவா. தேவர்கள் எப்பொழுதும் புகழும் தாரக மந்திரமே என்றும் சொல்கிறார். அதுதான் "இமையோர் புரி தாரக" என்பது.
தேவர்கள் கூறும் பிரணவப் பொருளே! விரிந்து பரந்த தோள்களில் உலகத்தைக் காப்பவரே! கிடைப்பதற்கு மிகவும் அரிதான உண்மைப் பொருளினை எனக்கு உபதேசிக்க, அந்தத் தகுதியை எனக்களித்து உபதேசமும் அருளிய முருகா, நீ போற்றி! இது அருணகிரி வாக்கு.
பக்தியுடன்,
கோ.இராகவன்
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே
பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது தமிழ்ப் பழமொழி. காரணம் அந்தப் பிச்சையைத் தாங்கும் வன்மையும் தன்மையும் பாத்திரத்திற்கு இருக்க வேண்டும் என்பதுதான். தங்கக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட கழுதைப்பால் தானுங்கெட்டு கிண்ணத்தையும் கெடுக்கும் என்ற வழக்கு ஊர்ப்புறங்களில் இன்னும் உண்டு. ஒன்றை ஒருவருக்குக் கொடுக்கும் பொழுது அவர் அதற்குத் தகுதியானவர்தானா என்று அறிந்தே கொடுக்க வேண்டும். கொடுப்பது எதுவாயினும் இந்தக் கருத்து பொருந்தும்.
மீன் பிடிக்கத் தெரியாதவனுக்குத் தூண்டிலைக் கொடுத்து என்ன பயன்? கண்கள் இரண்டும் இழந்தவருக்கு ஓவியத்தால் என்ன நன்மை? விரைந்து செல்லும் ஊர்தியைக் காலிழந்தவருக்குக் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான். தானும் உண்ணவில்லை. உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்கவில்லை. ஆனால் ஔவைக்குக் கொடுத்தான். காரணம் ஔவையார் அந்த நெல்லிக்கனிக்குப் பொருத்தமானவர். தமிழ் வாழ ஆசைப்பட்டான் அதியமான். ஆகையால் பொருத்தமில்லாதவராக இருந்தால் நம்மைப் போன்றவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்.
சாதாரணப் பொருட்களுக்கே இப்படியென்றால், மிகவும் அரிதான பெரிதான பொருட்களுக்கு எத்துணை சிந்திக்க வேண்டும். கொடுக்குமிடத்தில் முருகன் இருந்தால் என்ன செய்வார்? நம்முடைய மனங்களில் அழுக்கு நிறைய இருக்கிறது. இருந்தும் இறைவன் மீது அன்பு வைக்கும் நல்ல பண்பை நமக்குத் தந்திருக்கிறான். அதற்கு நம்மைப் பாத்திரமாக்கி பிறகு நமக்கு அந்த பிச்சையை இட்டிருக்கிறான். பொருத்தமில்லாதவன் என்று இறைவன் ஒதுக்கி விடுவதில்லை. நம்மை அந்தப் பரிசுக்குப் பொருத்தமானவராக்கி அழகு பார்ப்பான் ஆண்டவன். அப்படி கந்தன் அருணகிரிக்குச் செய்த கருணைதான் இந்தப் பாடல். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக!" மிகவும் அரிதான உண்மைப் பொருளுக்கு என்னை பொருத்தமுள்ளவனாக மாற்றி உபதேசம் செய்தவனே என்று பாடுகிறார்.
அல்லா முகமது நபிகளிடத்திலே காட்டிய கருணையும், பரமபிதா மோசசிடம் காட்டிய கருணையும், முருகன் அருணகிரிக்குக் காட்டிய கருணையும் எவ்வளவு பெரியவை. இறைவன் நபியண்ணல் வழியாகக் குரானைத் தந்தார். மோசஸ் வழியாகப் பத்து கட்டளைகளைத் தந்தார். அருணகிரி வழியாக தமிழ் அமுதம் தந்தார். ஆக இம்மூவரும் இறைவன் கருணைக்குப் பொருத்தமானவர்கள். ஆகையால்தான் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பொருள், அவர்களுக்கும் பயன்பட்டு, இன்றளவும் நமக்கும் பயன்படுகிறது. இப்பொழுது புரிந்திருக்கும் பாத்திரமறிந்து பிச்சையிடும் நுண்மை. பாடலின் முதலிரண்டுனடிகளை இப்பொழுது படியுங்கள். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக உபதேசம் உணர்த்தியவா!" பொருள் விளங்குகிறது அல்லவா! மதங்களையெல்லாம் கடந்த தமிழ்.
"சேவலங் கொடியன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால் உலகே" என்கிறார் பெருந்தேவனார். சேவற்கொடியன் திருக்கரங்களில் உலகம் பத்திரமாக காக்கப் படுகிறது என்பது இதன் பொருள். சங்ககாலத் தமிழ் வரிகள் இவை. அப்படி உலகத்தின் பாரத்தைச் சுமக்கும் கடவுளின் தோள்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். இது உருவகம்தான். அதனால்தான் "விரிதாரண விக்கிரம வேள்" என்று முருகனைக் கூறுகிறார் அருணகிரி.
இமையோர் என்றால் இமைக்காதவர்கள். யார் அவர்கள்? தேவர்கள் இமைக்காதவர்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தேவர்கள் உச்சரிப்பது தாரக மந்திரம். தாரகம் என்றால் பிரணவம். அந்தப் பிரணவ மந்திரமும் முருகனுக்கு உரியது என்கிறார் அருணகிரி. தந்தைக்கே உபதேசித்தவன் அல்லவா. தேவர்கள் எப்பொழுதும் புகழும் தாரக மந்திரமே என்றும் சொல்கிறார். அதுதான் "இமையோர் புரி தாரக" என்பது.
தேவர்கள் கூறும் பிரணவப் பொருளே! விரிந்து பரந்த தோள்களில் உலகத்தைக் காப்பவரே! கிடைப்பதற்கு மிகவும் அரிதான உண்மைப் பொருளினை எனக்கு உபதேசிக்க, அந்தத் தகுதியை எனக்களித்து உபதேசமும் அருளிய முருகா, நீ போற்றி! இது அருணகிரி வாக்கு.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, June 06, 2006
20. மானம் கப்பலில் குடி போகாமல் இருக்க
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
இந்தப் பாடலைப் பொருள் கொள்ளும் பொழுது கீழ்க்கண்ட முறையில் வரிகளை மாற்றி அமைத்துப் படித்தால் எளிதாகப் புரியும்.
அடி அந்தமில்லா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. அறிவு தொடக்கமும் முடிவும் அற்றது. ஞானத்தின் தொடக்கம் என்று எதைச் சொல்ல முடியும்? பிறக்கும் குழந்தை கூட பசிக்கு அழவும், பாலைக் குடிக்கவும் தேவைப்படும் அறிவோடுதான் பிறக்கிறது. அறிவுக்குக் கரை ஏது? அனைத்தும் அறிந்தவர் யார்? கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. இது கலைமகள் வாக்கு. கலைமகளுக்கே அப்படியென்றால் நமக்கெல்லாம்? ஆகையால் அடக்கம் வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும்.
ஆக ஞானம் ஆதியும் அந்தமும் இல்லாது. ஞானத்தின் வடிவான வேலும் முதலும் முடிவும் இல்லாதது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய அரசே! முருகா! அதுதான் "அடி அந்தமிலா அயில்வேல் அரசே!"
அடுத்த வரிக்கு வருவோம். இந்த வரி மிடியைப் பற்றிப் பேசுகிறது. மிடி என்றால் வறுமை. வறுமை என்பது வாழ்வில் வெறுமை. கொடிது கொடிது வறுமை கொடிது என்கிறார் ஔவை. அதனிமும் கொடிது இளமையில் வறுமை. குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் அனுபவிக்கும் பருவங்கள். அந்தச் சமயத்தில் வறுமையென்றால் அதுதான் கொடுமை. பழநி திருப்புகழ் சொல்கிறது. "செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே....எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்!" வறுமை வருமையில் எல்லாப் பெருமையும் சிறுமையடையும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறார் வள்ளுவர். அதானால்தான் அருணகிரி வறுமையைப் பாவி என்கிறார். மிடி என்று ஒரு பாவி வெளிப்படின் என்னவாகும் என்று முருகனைக் கூப்பிட்டுச் சொல்கிறார்.
வறியவர் உண்பது குறைவு. குறைந்த ஊட்டம் உடலை இளைக்கச் செய்யும். கட்டிளம் காளையும் காய்ந்த கம்பந்தட்டையாவான். ஆக வடிவு குறையும். தனம் என்றால் செல்வம். நிலையில்லாததேயாயினும் செல்வம் பயனுள்ளது. அதுவும் போகும். விரும்பியதைச் செய்ய முடியாது. வேண்டியதை உண்ண முடியாது. நாடியதைக் கொள்ள முடியாது. அதனால் அடுத்த கட்டமாக வேண்டியது கிடைக்காமல் மனம் நோகும். நொந்த மனத்தால் குணம் கெடும். குணமில்லாத ஒருவனுடைய குடும்பம் நல்ல பெயரை எடுக்காது. ஆகையால் குடும்ப மானம் போகும். அது குலப் பெருமையைச் சாய்க்கும். பேரரசர் வழியில் வந்திருந்தாலும் பேரன் திருடினால் குலப்பெருமை நாசமாகாதா! அதைத்தான் "வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா" என்கிறார். சுருங்கச் சொன்னால் மானம் கப்பலில் குடிபோகும்.
முதலும் முடிவும் இல்லாத ஞான வடிவமான வேலினைத் தாங்கிய அரசே! வறுமை என்ற வெறுமை தாக்குமானால் பெருமை போகும். உடன் வடிவு, செல்வம், மனத்தூய்மை, குணம், குடும்ப மானம், குலப்பெருமை எல்லாம் போகும். இந்தத் துன்பத்திலிருந்து வேலவா நீ காக்க வா!
பக்தியுடன்,
கோ.இராகவன்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
இந்தப் பாடலைப் பொருள் கொள்ளும் பொழுது கீழ்க்கண்ட முறையில் வரிகளை மாற்றி அமைத்துப் படித்தால் எளிதாகப் புரியும்.
அடி அந்தமில்லா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. அறிவு தொடக்கமும் முடிவும் அற்றது. ஞானத்தின் தொடக்கம் என்று எதைச் சொல்ல முடியும்? பிறக்கும் குழந்தை கூட பசிக்கு அழவும், பாலைக் குடிக்கவும் தேவைப்படும் அறிவோடுதான் பிறக்கிறது. அறிவுக்குக் கரை ஏது? அனைத்தும் அறிந்தவர் யார்? கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. இது கலைமகள் வாக்கு. கலைமகளுக்கே அப்படியென்றால் நமக்கெல்லாம்? ஆகையால் அடக்கம் வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும்.
ஆக ஞானம் ஆதியும் அந்தமும் இல்லாது. ஞானத்தின் வடிவான வேலும் முதலும் முடிவும் இல்லாதது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய அரசே! முருகா! அதுதான் "அடி அந்தமிலா அயில்வேல் அரசே!"
அடுத்த வரிக்கு வருவோம். இந்த வரி மிடியைப் பற்றிப் பேசுகிறது. மிடி என்றால் வறுமை. வறுமை என்பது வாழ்வில் வெறுமை. கொடிது கொடிது வறுமை கொடிது என்கிறார் ஔவை. அதனிமும் கொடிது இளமையில் வறுமை. குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் அனுபவிக்கும் பருவங்கள். அந்தச் சமயத்தில் வறுமையென்றால் அதுதான் கொடுமை. பழநி திருப்புகழ் சொல்கிறது. "செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே....எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்!" வறுமை வருமையில் எல்லாப் பெருமையும் சிறுமையடையும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறார் வள்ளுவர். அதானால்தான் அருணகிரி வறுமையைப் பாவி என்கிறார். மிடி என்று ஒரு பாவி வெளிப்படின் என்னவாகும் என்று முருகனைக் கூப்பிட்டுச் சொல்கிறார்.
வறியவர் உண்பது குறைவு. குறைந்த ஊட்டம் உடலை இளைக்கச் செய்யும். கட்டிளம் காளையும் காய்ந்த கம்பந்தட்டையாவான். ஆக வடிவு குறையும். தனம் என்றால் செல்வம். நிலையில்லாததேயாயினும் செல்வம் பயனுள்ளது. அதுவும் போகும். விரும்பியதைச் செய்ய முடியாது. வேண்டியதை உண்ண முடியாது. நாடியதைக் கொள்ள முடியாது. அதனால் அடுத்த கட்டமாக வேண்டியது கிடைக்காமல் மனம் நோகும். நொந்த மனத்தால் குணம் கெடும். குணமில்லாத ஒருவனுடைய குடும்பம் நல்ல பெயரை எடுக்காது. ஆகையால் குடும்ப மானம் போகும். அது குலப் பெருமையைச் சாய்க்கும். பேரரசர் வழியில் வந்திருந்தாலும் பேரன் திருடினால் குலப்பெருமை நாசமாகாதா! அதைத்தான் "வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா" என்கிறார். சுருங்கச் சொன்னால் மானம் கப்பலில் குடிபோகும்.
முதலும் முடிவும் இல்லாத ஞான வடிவமான வேலினைத் தாங்கிய அரசே! வறுமை என்ற வெறுமை தாக்குமானால் பெருமை போகும். உடன் வடிவு, செல்வம், மனத்தூய்மை, குணம், குடும்ப மானம், குலப்பெருமை எல்லாம் போகும். இந்தத் துன்பத்திலிருந்து வேலவா நீ காக்க வா!
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, May 29, 2006
19. அப்பன் சேர்த்தது வட்டியோடு மகனுக்கு
இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. முருகனைப் பாடி மகிழ வேண்டும் என்று கூறிய அருணகிரி முருகப் பெருமானின் சில பண்புகளை, அதாவது நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றவைகளை நமக்குக் கூறுகிறார்.
உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங் கரனே
ஒருவர் இன்னாருடைய மகன் என்று சொல்லும் பொழுதே பெருமையும் சிறுமையும் அதோடு வந்து விடுகிறது. உத்தமனுடைய பிள்ளைக்கு நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்த புண்ணியம் மகனுக்கோ மகளுக்கோ செல்லும் இடமெல்லாம் வாழ்வளிக்கும். தீயவனுடைய பிள்ளை நல்லவனாக இருந்தாலும் போகின்ற இடத்தில்லெல்லாம் பிரச்சனைகள் வந்து நிற்கும். பெற்றவர்கள் நல்ல பெயரைச் சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளுக்குச் சேர்க்கும் மிகப் பெரிய சொத்து அது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்று சொல்கிறார் ஔவையார்.
பாடி மகிழப்பட வேண்டிய முருகப் பெருமானின் தந்தையும் பெருமை மிக்கவர்தான். அந்த பரமசிவனின் பெருமைகள் யாவை? உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் அந்த ஈசன். உதியா - பிறப்பில்லாத. மரியா - இறப்பில்லாத. உணரா - நினைப்பில்லாத. மறவா - மறதியில்லாத. பிறப்பும் இறப்பும் இல்லா ஆதி நாயகன் சிவபெருமான். நினைப்பு இல்லாதவர். இது பெருமையா என்றால் ஆம் என்பதே விடை. விடையேறு நாயகன் மறவாதவன். ஆகையால் மறந்ததை நினைக்க வேண்டிய வகையில்லாதவன். தொலைத்தால்தானே தேட வேண்டும். மறந்தால்தானே நினைக்க வேண்டும்.
விதிமால் அறியாத விமலன் என்றால்? விதியை எழுதுகிறவன் நான்முகன். ஆகையால் அவன் விதி. மால் என்றால் திருமால். அயனும் (பிரம்மன்) அரியும் கூடித் தேடியும் அடி முடி காணக்கிடைக்காத பெருமான் எம்பெருமான். கந்த குரு கவசத்தில் "அடி முடி அறிய ஒண்ணா அண்ணாமலையோனோ" என்று புகழப்படுகிறது. முருகக் கடவுள் யார்? "பாதிமதி நதி போதும் மணிச்சடை நாதர் அருளிய குமரேசா" என்கிறது திருப்புகழ். பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்! நதி கங்கை. இப்படி மதியும் நதியும் போதும் சடையரின் நெற்றிக் கண்ணிலே அறுவராகத் தோன்றி அம்மையால் ஒருவரானவன் கந்தன். அவனுக்கு தந்தை தாயின் புகழும் உண்டு. அதற்கு மேல் சேர்த்த சுயப்புகழும் உண்டு. ஆக இந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளில் சிவபெருமானைப் புகழ்ந்தாலும் அத்தனையும் முருகனுக்கும் உண்டு. அப்பன் வங்கியில் சேர்த்து வைத்த பணம் வட்டியோடு மகனைச் சேர்வதைப் போல.
அந்த விமலனின் புதல்வனை அதிகா அநகா அபயா என்று இறைஞ்சுகிறார் அருணகிரி. அதிகா என்றால் எல்லாருக்கும் தலைவர். தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் தலைவர் எம்பெருமான். அவருக்கும் தேவர் முருகன். தேவாதி தேவன் சிவன். தேவ தேவாதி தேவன் முருகன். ஆகையால் அப்பனுக்கே பாடஞ் சொல்ல முடிந்தது சுப்பனால். அஞ்செழுத்து அப்பனுக்கு. ஆறெழுத்து மகனுக்கு. பழமுதிர்ச்சோலை திருப்புகழ் சொல்கிறது இப்படி. "அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்!" அயன் என்றால் பிரமன். அரி என்றால் திருமால். அரன் என்றால் சிவன். இவர்கள் மூவரும் ஆகி, அவர்களுக்கும் மேலானவனே என்று திருப்புகழ் செப்புகிறது. அதனால்தான் கந்தரலங்காரத்தில் "பின்னை ஒருவரை யான் பின் செல்கேன்" என்கிறார்.
அநகா என்றால் குற்றமற்றவன் என்று பொருள். அபயா என்றால் அச்சமற்றவன் என்று பொருள். அதைத்தான் அடுக்கடுக்காக அதிகா அநகா அபயா என்று கூறுகிறார்.
அமராவதி காவலனே! சூர பயங்கரனே! போர்க்களத்திலே சூரனை அச்சப்படுத்திய முருகன் அவனை அழிக்கவில்லை. ஆகையால்தான் அவனுக்குச் சூர பயங்கரன் என்றும் ஒரு பெயர். அப்படி சூரனிடமிருந்து அமராவதியைக் காத்து இந்திரனிடம் ஒப்படைத்ததால் அமராவதி காவலனாகவும் ஆயினான் முருகன்.
முருகா! உன்னுடைய தந்தையின் சிறப்புப் பண்புகள் யாவும் பெற்று அவைகளுக்கு மேலேயும் பெற்று மும்மூர்த்திகளுக்கும் மேலாய் விளங்கும் வேலவனே! நீ தேவதேவாதி தேவன். குற்றமற்றவன். அச்சமற்றவன். சூரனுக்கு அச்சமூட்டியவன். அதனால் அமராவதியைக் காத்தவன். உன்னுடைய புகழை என்றும் மனதால் நினைத்து நாவால் பாடவேண்டும். அதற்கும் நீயே அருள வேண்டும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங் கரனே
ஒருவர் இன்னாருடைய மகன் என்று சொல்லும் பொழுதே பெருமையும் சிறுமையும் அதோடு வந்து விடுகிறது. உத்தமனுடைய பிள்ளைக்கு நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்த புண்ணியம் மகனுக்கோ மகளுக்கோ செல்லும் இடமெல்லாம் வாழ்வளிக்கும். தீயவனுடைய பிள்ளை நல்லவனாக இருந்தாலும் போகின்ற இடத்தில்லெல்லாம் பிரச்சனைகள் வந்து நிற்கும். பெற்றவர்கள் நல்ல பெயரைச் சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளுக்குச் சேர்க்கும் மிகப் பெரிய சொத்து அது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்று சொல்கிறார் ஔவையார்.
பாடி மகிழப்பட வேண்டிய முருகப் பெருமானின் தந்தையும் பெருமை மிக்கவர்தான். அந்த பரமசிவனின் பெருமைகள் யாவை? உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் அந்த ஈசன். உதியா - பிறப்பில்லாத. மரியா - இறப்பில்லாத. உணரா - நினைப்பில்லாத. மறவா - மறதியில்லாத. பிறப்பும் இறப்பும் இல்லா ஆதி நாயகன் சிவபெருமான். நினைப்பு இல்லாதவர். இது பெருமையா என்றால் ஆம் என்பதே விடை. விடையேறு நாயகன் மறவாதவன். ஆகையால் மறந்ததை நினைக்க வேண்டிய வகையில்லாதவன். தொலைத்தால்தானே தேட வேண்டும். மறந்தால்தானே நினைக்க வேண்டும்.
விதிமால் அறியாத விமலன் என்றால்? விதியை எழுதுகிறவன் நான்முகன். ஆகையால் அவன் விதி. மால் என்றால் திருமால். அயனும் (பிரம்மன்) அரியும் கூடித் தேடியும் அடி முடி காணக்கிடைக்காத பெருமான் எம்பெருமான். கந்த குரு கவசத்தில் "அடி முடி அறிய ஒண்ணா அண்ணாமலையோனோ" என்று புகழப்படுகிறது. முருகக் கடவுள் யார்? "பாதிமதி நதி போதும் மணிச்சடை நாதர் அருளிய குமரேசா" என்கிறது திருப்புகழ். பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்! நதி கங்கை. இப்படி மதியும் நதியும் போதும் சடையரின் நெற்றிக் கண்ணிலே அறுவராகத் தோன்றி அம்மையால் ஒருவரானவன் கந்தன். அவனுக்கு தந்தை தாயின் புகழும் உண்டு. அதற்கு மேல் சேர்த்த சுயப்புகழும் உண்டு. ஆக இந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளில் சிவபெருமானைப் புகழ்ந்தாலும் அத்தனையும் முருகனுக்கும் உண்டு. அப்பன் வங்கியில் சேர்த்து வைத்த பணம் வட்டியோடு மகனைச் சேர்வதைப் போல.
அந்த விமலனின் புதல்வனை அதிகா அநகா அபயா என்று இறைஞ்சுகிறார் அருணகிரி. அதிகா என்றால் எல்லாருக்கும் தலைவர். தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் தலைவர் எம்பெருமான். அவருக்கும் தேவர் முருகன். தேவாதி தேவன் சிவன். தேவ தேவாதி தேவன் முருகன். ஆகையால் அப்பனுக்கே பாடஞ் சொல்ல முடிந்தது சுப்பனால். அஞ்செழுத்து அப்பனுக்கு. ஆறெழுத்து மகனுக்கு. பழமுதிர்ச்சோலை திருப்புகழ் சொல்கிறது இப்படி. "அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்!" அயன் என்றால் பிரமன். அரி என்றால் திருமால். அரன் என்றால் சிவன். இவர்கள் மூவரும் ஆகி, அவர்களுக்கும் மேலானவனே என்று திருப்புகழ் செப்புகிறது. அதனால்தான் கந்தரலங்காரத்தில் "பின்னை ஒருவரை யான் பின் செல்கேன்" என்கிறார்.
அநகா என்றால் குற்றமற்றவன் என்று பொருள். அபயா என்றால் அச்சமற்றவன் என்று பொருள். அதைத்தான் அடுக்கடுக்காக அதிகா அநகா அபயா என்று கூறுகிறார்.
அமராவதி காவலனே! சூர பயங்கரனே! போர்க்களத்திலே சூரனை அச்சப்படுத்திய முருகன் அவனை அழிக்கவில்லை. ஆகையால்தான் அவனுக்குச் சூர பயங்கரன் என்றும் ஒரு பெயர். அப்படி சூரனிடமிருந்து அமராவதியைக் காத்து இந்திரனிடம் ஒப்படைத்ததால் அமராவதி காவலனாகவும் ஆயினான் முருகன்.
முருகா! உன்னுடைய தந்தையின் சிறப்புப் பண்புகள் யாவும் பெற்று அவைகளுக்கு மேலேயும் பெற்று மும்மூர்த்திகளுக்கும் மேலாய் விளங்கும் வேலவனே! நீ தேவதேவாதி தேவன். குற்றமற்றவன். அச்சமற்றவன். சூரனுக்கு அச்சமூட்டியவன். அதனால் அமராவதியைக் காத்தவன். உன்னுடைய புகழை என்றும் மனதால் நினைத்து நாவால் பாடவேண்டும். அதற்கும் நீயே அருள வேண்டும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, May 22, 2006
18. படித்தால் மட்டும் போதுமா
கடல் நிறைய நீர் இருக்கிறது. அந்த நீரை மேகங்களுக்குத் தருகிறது கடல். அப்படிக் கடலிலிருந்து பெற்ற நீரை மழையாகப் பொழிந்து விடுகிறது மேகம். பூமியிலிருந்து வானத்திற்குப் போன நீர் மீண்டும் பூமிக்கே வந்து விடுகிறது. அந்த நீரும் ஆறாகி மீண்டும் கடலிலேயே கலக்கிறது. பிறகு ஏன் கடல் நீரை மேகத்திற்குத் தரவேண்டும்? பிறகு அதையே பெறவேண்டும்? அப்படிக் கொடுத்துப் பெறும் வழியில் மண்ணுயிர்கள் எல்லாம் பயன்பெறுகிறது அல்லவா. அதனால்தான். கடலின் கருணை.
அதுபோலத்தான் அடியவர்களுக்குச் சிறந்த கல்வி ஞானம் வாய்க்கிறது. அவர்கள் இறைவன் மீதும் அவனது நற்பண்புகளைப் பற்றியும் பாடல்கள் புனைகிறார்கள். இப்படி அவர்களுக்கு அறிவும் கல்வியும் தருவது யார்? எல்லாம் முருகன் கொடுத்தது. அப்படிக் கொடுத்து, பிறகு அவர்களிடமிருந்தே திரும்பப் பெற்றுக் கொள்கிறான். "யாம் ஓதிய கல்வியும் என் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"
யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே
ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இரண்டு காரணங்கள் உண்டு. பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் கிள்ளை மொழியைக் கேட்பதில் பிரியம். ஆகையால் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்ததை திரும்பக் கேட்பதில் அவ்வளவு ஆனந்தம். "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களுக்கெல்லாம் தாயல்லவா முருகப் பெருமான்!
இரண்டாவது காரணம் பொதுநலம். ஆம். அப்படி அடியவர்கள் இறைவனைப் பற்றிப் பாடுகையில் மக்களுக்கு நல்ல கருத்துகள் பல கூறுவர். அது படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பயனளிக்கும். அதனால்தான் இந்தக் கொடுத்துப் பெறும் விளையாட்டு. எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை. நல்லதைச் சொல்வார் என்று உள்ளவருக்கே கொடுக்கப் படுகிறது. மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்களது படைப்பு தீதானால் நாளடைவில் தடுக்கப் படுகிறது. எத்தனை பேர் எழுதினார்கள். இன்னும் எழுதுகிறார்கள். எல்லாம் நிலைக்கிறதா?
ஓதிய கல்வியும் அறிவும் என்கிறார். படித்தால் அறிவு வராது. உணர்ந்து ஓதினால்தான் அறிவு வரும். அப்படி நல்ல அறிவை முருகன் கொடுத்த பின்னும் மண்ணுலக மையல் நீங்காமல் இருந்தால் எப்படி? மையல் என்பது தையல்களுக்கு பையல்கள் மீதும் பையல்களுக்குத் தையல்கள் மீதும் வருவதில்லை. எதன் மீதும் வரலாம். ஒன்றின் மீது மையல் வந்து விட்டால் அது வளர்ந்து வெறியாகும். அது நன்றன்று. அப்படிப்பட்ட மையலை மறந்து அறவழியில் நடக்க வேண்டும். நன்றாகக் கவனியுங்கள் அருணகிரியின் வாக்கை. இல்லறவாசிகள் துறவறம் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. வீணான ஆசைகளை நீக்கி அறவழியில் நடக்கும்படிச் சொல்கிறார்.
அது போதுமா? நல்வழியில் நடப்பது நன்று. அத்தோடு செய்ய வேண்டியது இன்னொன்று. ஆம். வேலவரின் புகழினைப் பாடுதல். "சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை வெல்லுமிடத்து" என்கிறார் வள்ளுவர். நான் ஒன்றைச் சொன்னால் அதைத் தோற்கடிக்கும் விதத்தில் யாரும் எதையும் கூறாதிருக்கும்படி சொல்லவேண்டும். ஆகையால் வேலவரின் புகழினைப் பாடி மகிழ வேண்டும். ஆகவேதான் முருகனை அழைத்து "நாமேல் நடவீர் நடவீர்" என்று வேண்டுகிறார். முருகனைத் தவிர வேறெதைப் பற்றியும் பாடவில்லை அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
அதுபோலத்தான் அடியவர்களுக்குச் சிறந்த கல்வி ஞானம் வாய்க்கிறது. அவர்கள் இறைவன் மீதும் அவனது நற்பண்புகளைப் பற்றியும் பாடல்கள் புனைகிறார்கள். இப்படி அவர்களுக்கு அறிவும் கல்வியும் தருவது யார்? எல்லாம் முருகன் கொடுத்தது. அப்படிக் கொடுத்து, பிறகு அவர்களிடமிருந்தே திரும்பப் பெற்றுக் கொள்கிறான். "யாம் ஓதிய கல்வியும் என் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"
யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே
ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இரண்டு காரணங்கள் உண்டு. பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் கிள்ளை மொழியைக் கேட்பதில் பிரியம். ஆகையால் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்ததை திரும்பக் கேட்பதில் அவ்வளவு ஆனந்தம். "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களுக்கெல்லாம் தாயல்லவா முருகப் பெருமான்!
இரண்டாவது காரணம் பொதுநலம். ஆம். அப்படி அடியவர்கள் இறைவனைப் பற்றிப் பாடுகையில் மக்களுக்கு நல்ல கருத்துகள் பல கூறுவர். அது படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பயனளிக்கும். அதனால்தான் இந்தக் கொடுத்துப் பெறும் விளையாட்டு. எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை. நல்லதைச் சொல்வார் என்று உள்ளவருக்கே கொடுக்கப் படுகிறது. மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்களது படைப்பு தீதானால் நாளடைவில் தடுக்கப் படுகிறது. எத்தனை பேர் எழுதினார்கள். இன்னும் எழுதுகிறார்கள். எல்லாம் நிலைக்கிறதா?
ஓதிய கல்வியும் அறிவும் என்கிறார். படித்தால் அறிவு வராது. உணர்ந்து ஓதினால்தான் அறிவு வரும். அப்படி நல்ல அறிவை முருகன் கொடுத்த பின்னும் மண்ணுலக மையல் நீங்காமல் இருந்தால் எப்படி? மையல் என்பது தையல்களுக்கு பையல்கள் மீதும் பையல்களுக்குத் தையல்கள் மீதும் வருவதில்லை. எதன் மீதும் வரலாம். ஒன்றின் மீது மையல் வந்து விட்டால் அது வளர்ந்து வெறியாகும். அது நன்றன்று. அப்படிப்பட்ட மையலை மறந்து அறவழியில் நடக்க வேண்டும். நன்றாகக் கவனியுங்கள் அருணகிரியின் வாக்கை. இல்லறவாசிகள் துறவறம் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. வீணான ஆசைகளை நீக்கி அறவழியில் நடக்கும்படிச் சொல்கிறார்.
அது போதுமா? நல்வழியில் நடப்பது நன்று. அத்தோடு செய்ய வேண்டியது இன்னொன்று. ஆம். வேலவரின் புகழினைப் பாடுதல். "சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை வெல்லுமிடத்து" என்கிறார் வள்ளுவர். நான் ஒன்றைச் சொன்னால் அதைத் தோற்கடிக்கும் விதத்தில் யாரும் எதையும் கூறாதிருக்கும்படி சொல்லவேண்டும். ஆகையால் வேலவரின் புகழினைப் பாடி மகிழ வேண்டும். ஆகவேதான் முருகனை அழைத்து "நாமேல் நடவீர் நடவீர்" என்று வேண்டுகிறார். முருகனைத் தவிர வேறெதைப் பற்றியும் பாடவில்லை அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, May 15, 2006
17. பேராசை என்னும் நோய்
பேராசையெனும் பிணியில் பிணிபட்
டோரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேலெறியும்
சூரா சுர லோக துரந்தரனே
ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம். இயல்பாக வரும் இத்தகைய ஆசைகளிலிருந்து அறிவைப் பயன்படுத்தித் தப்பிக்கலாம். பேராசை மீளாத் துன்பத்திற்குக் காரணம். அறிவு வேலை செய்யாத பொழுதே பேராசை வருகிறது. ஆகையால் அறிவைக் கொண்டு தப்பிக்க முடியாது. அங்கே நாம் யாராலாவது காப்பாற்றப்பட வேண்டும்.
உலகம் முழுதும் எடுத்துச் சொன்னது. ஹிட்லர் கேட்கவில்லை. பேராசை அவன் கண்களை மறைத்தது, அறிவை மழுக்கியது. அவனைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. அவனும் அவனது கொள்கைகளும் அழிந்து போயின. ஆக பேராசையெனும் பிணியானது நல்ல விளைவுகளைத் தருவதைப் போலத் தோன்றினாலும் இறுதியில் தீமையையே தரும். பேராசையோடு பலமுறை பாரதத்தின் மீது படையெடுத்தான் கஜினி முகமது. பெருஞ் செல்வத்தைக் கைப்பற்றினான். அவனை இன்று வரலாறு திருடன் என்கிறது. இப்படியெல்லாம் கொடுமை செய்யும் பேராசை என்னும் நோயில் உழலத் தகுமோ!
அப்படிப்பட்ட பேரழிவிலிருந்து யார் நம்மைக் காக்க வல்லார்? மருத்துவரிடமே நோயைக் கூற வேண்டும். கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கும் விஞ்ஞானியும் அறிவிற் சிறந்தவர்தான். ஆனால் அவரிடம் நோயைப் பற்றிச் சொன்னால் என்ன பயன்? பேராசைப் பிணியைப் போக்க வல்ல வல்லாளன் யார்? சுரலோக துரந்தரனாம். சுரர் என்றால் அமரர். இந்திரனா? இல்லை. அமர உலகத்திற்கு அதிபதி இந்திரன். உண்மைதான். ஆனால் துரப்பது (காப்பது) யார்?
சூரன் என்றால் சூரத்தனம் மிகுந்தவன். அப்படிப் பட்டவனே அமரர் உலகத்தைக் காக்க முடியும். ஒருவனுக்கு அடைமொழி கொடுத்தால் அதற்குச் சிறப்புக் காரணம் இருக்க வேண்டும். அப்படி அமரர் உலகைக் காக்கும் சூரனுக்கு என்ன சூரத்தனம் இருக்கிறது? "முதுசூர் பட வேல் எறியும் சூரா" என்கிறார் அருணகிரி. சூரன் மேல் வேலெறிந்து வென்று அமரர்தம் உலகத்தைக் காப்பது கந்தவேளே. இங்கே முதுசூர் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். முது என்றால் பழைய என்று பொருள். வேலை முருகன் எறிந்ததும் சூரன் இறந்தகாலம். ஆகையால் முதுசூர். என்ன சொல்லாற்றல் அருணகிரிக்கு!
சூரனை வேலெறிந்து அழித்து அவனையும் அவன் புகழையும் இறந்தகாலத்திற்குத் தள்ளி அமரர்களுடைய உலகமாகிய அமராவதியைக் காக்கும் கந்தவேளே! பேரழிவைத் தந்து அழிக்கும் பேராசை என்னும் நோயில் விழாத வகைக்கு எல்லாரையும் காத்தருள வேண்டும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
டோரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேலெறியும்
சூரா சுர லோக துரந்தரனே
ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம். இயல்பாக வரும் இத்தகைய ஆசைகளிலிருந்து அறிவைப் பயன்படுத்தித் தப்பிக்கலாம். பேராசை மீளாத் துன்பத்திற்குக் காரணம். அறிவு வேலை செய்யாத பொழுதே பேராசை வருகிறது. ஆகையால் அறிவைக் கொண்டு தப்பிக்க முடியாது. அங்கே நாம் யாராலாவது காப்பாற்றப்பட வேண்டும்.
உலகம் முழுதும் எடுத்துச் சொன்னது. ஹிட்லர் கேட்கவில்லை. பேராசை அவன் கண்களை மறைத்தது, அறிவை மழுக்கியது. அவனைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. அவனும் அவனது கொள்கைகளும் அழிந்து போயின. ஆக பேராசையெனும் பிணியானது நல்ல விளைவுகளைத் தருவதைப் போலத் தோன்றினாலும் இறுதியில் தீமையையே தரும். பேராசையோடு பலமுறை பாரதத்தின் மீது படையெடுத்தான் கஜினி முகமது. பெருஞ் செல்வத்தைக் கைப்பற்றினான். அவனை இன்று வரலாறு திருடன் என்கிறது. இப்படியெல்லாம் கொடுமை செய்யும் பேராசை என்னும் நோயில் உழலத் தகுமோ!
அப்படிப்பட்ட பேரழிவிலிருந்து யார் நம்மைக் காக்க வல்லார்? மருத்துவரிடமே நோயைக் கூற வேண்டும். கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கும் விஞ்ஞானியும் அறிவிற் சிறந்தவர்தான். ஆனால் அவரிடம் நோயைப் பற்றிச் சொன்னால் என்ன பயன்? பேராசைப் பிணியைப் போக்க வல்ல வல்லாளன் யார்? சுரலோக துரந்தரனாம். சுரர் என்றால் அமரர். இந்திரனா? இல்லை. அமர உலகத்திற்கு அதிபதி இந்திரன். உண்மைதான். ஆனால் துரப்பது (காப்பது) யார்?
சூரன் என்றால் சூரத்தனம் மிகுந்தவன். அப்படிப் பட்டவனே அமரர் உலகத்தைக் காக்க முடியும். ஒருவனுக்கு அடைமொழி கொடுத்தால் அதற்குச் சிறப்புக் காரணம் இருக்க வேண்டும். அப்படி அமரர் உலகைக் காக்கும் சூரனுக்கு என்ன சூரத்தனம் இருக்கிறது? "முதுசூர் பட வேல் எறியும் சூரா" என்கிறார் அருணகிரி. சூரன் மேல் வேலெறிந்து வென்று அமரர்தம் உலகத்தைக் காப்பது கந்தவேளே. இங்கே முதுசூர் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். முது என்றால் பழைய என்று பொருள். வேலை முருகன் எறிந்ததும் சூரன் இறந்தகாலம். ஆகையால் முதுசூர். என்ன சொல்லாற்றல் அருணகிரிக்கு!
சூரனை வேலெறிந்து அழித்து அவனையும் அவன் புகழையும் இறந்தகாலத்திற்குத் தள்ளி அமரர்களுடைய உலகமாகிய அமராவதியைக் காக்கும் கந்தவேளே! பேரழிவைத் தந்து அழிக்கும் பேராசை என்னும் நோயில் விழாத வகைக்கு எல்லாரையும் காத்தருள வேண்டும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, May 08, 2006
16. எட்டும் எட்டு
எட்டு என்றாலே எட்டி ஓடும் அளவிற்கு மூடத்தனமான எண்கணிதப் பைத்தியம் மக்களை ஆட்டிவைக்கிறது இன்று. ஆனால் அனைத்திற்கும் எட்டாப் பரம்பொருள் எட்டில் அடங்குமென்று ஆன்றோர் கூறுகிறார்கள். அதாவது நமக்கு எட்டும் எட்டு. நமக்கு புரியக்கூடிய எட்டு பண்புகளால் இறைவனைப் புகழ்கிறார்கள். அதென்ன! எடுத்துச் சொன்னால் மற்ற பண்புகளும் புரியாதா என்று வாதிடலாம். ஆனால் அதனால் பயனில்லை. பிரசவம் என்பது வேதனை மிக்க மறுபிறப்பு என்று ஆண்கள் அறியத்தான் முடியுமே தவிர உணர முடியாது. இப்படி மனித உணர்வுகளே உணர்ந்து கொள்ள முடியாத பொழுது, அனைத்தையும் கடந்தும் அவற்றின் உள்ளும் இருக்கும் கடவுளின் அத்தனை பண்புகளையும் நாம் உணர முடியுமா? சொல்ல முடியுமா? சொல்லில் முடியுமா? வள்ளுவரும் எண்குணத்தைப் பற்றிச் சொல்கிறார்.
"கோளிற் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகும் செயல்தந்து உணர்வென்றருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே
சரி. அந்த எட்டு பண்புகளையும் பார்ப்போம். 1)தன்னடக்கம் 2)துப்புரவு 3)இயற்கை ஆர்வலன் 4)அனைத்துமறியும் ஆர்வம் 5)உணர்ச்சிவசப்படாமை 6)பேரருள் 7)பேராற்றல் 8)கட்டுப்பாடு. இந்த எட்டு பண்புகளும் மானிடர்களுக்கு எட்டும் பண்புகளாதலால் அவற்றால் இறைவனை விளக்குகிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்தப் பாடலில் அருணகிரியும் அதைத்தான் சொல்கிறார். எண்குண பஞ்சரனே என்று முருகனைச் சொல்கிறார். பஞ்சரம் என்றால் கூடு. எட்டு குணங்களும் கூடியவனே என்று பொருள். இன்றைக்கும் தெற்கில் கோழி அடைக்கும் கூடையை பஞ்சாரம் என்று கொச்சையாகச் சொல்லும் வழக்கம் உண்டு. பட்டிக்காட்டிலும் பைந்தமிழ்ப் பழக்கம்.
அப்படி எட்டு பண்புகள் கூடிய முருகன் எப்படிப்பட்டவராம்! பொரு என்றால் போர். புங்கவர் என்றால் தேவர். பொருபுங்கவர் என்றால் போரிடும் தேவர். குருபுங்கவர் என்றால் குருதேவர். அசுரர்களோடு போரிடும் தேவர்களும் புவியிலுள்ள உயிரினங்களும் வணங்கும் குருதேவர் முருகன். அதைத்தான் "பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவர்" என்கிறார் அருணகிரிநாதர்.
அப்படி நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் குருதேவரான கந்தனுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். அத்தனை பெயர்கள் இருந்தாலும் அவையனைத்திலும் சிறந்தவை மூன்று பெயர்கள். அவைகள் முருகன், குமரன், குகன். அந்த மூன்று பெயர்களையும் அன்போடு உச்சரித்த உடனேயே உள்ளமுருகும். அப்படியெல்லாம் அந்தப் பெயர்களைச் சொல்லி உள்ளம் உருகும் உணர்வினை அருள்வாய் முருகா என்று உருகுகிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
"கோளிற் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகும் செயல்தந்து உணர்வென்றருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே
சரி. அந்த எட்டு பண்புகளையும் பார்ப்போம். 1)தன்னடக்கம் 2)துப்புரவு 3)இயற்கை ஆர்வலன் 4)அனைத்துமறியும் ஆர்வம் 5)உணர்ச்சிவசப்படாமை 6)பேரருள் 7)பேராற்றல் 8)கட்டுப்பாடு. இந்த எட்டு பண்புகளும் மானிடர்களுக்கு எட்டும் பண்புகளாதலால் அவற்றால் இறைவனை விளக்குகிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்தப் பாடலில் அருணகிரியும் அதைத்தான் சொல்கிறார். எண்குண பஞ்சரனே என்று முருகனைச் சொல்கிறார். பஞ்சரம் என்றால் கூடு. எட்டு குணங்களும் கூடியவனே என்று பொருள். இன்றைக்கும் தெற்கில் கோழி அடைக்கும் கூடையை பஞ்சாரம் என்று கொச்சையாகச் சொல்லும் வழக்கம் உண்டு. பட்டிக்காட்டிலும் பைந்தமிழ்ப் பழக்கம்.
அப்படி எட்டு பண்புகள் கூடிய முருகன் எப்படிப்பட்டவராம்! பொரு என்றால் போர். புங்கவர் என்றால் தேவர். பொருபுங்கவர் என்றால் போரிடும் தேவர். குருபுங்கவர் என்றால் குருதேவர். அசுரர்களோடு போரிடும் தேவர்களும் புவியிலுள்ள உயிரினங்களும் வணங்கும் குருதேவர் முருகன். அதைத்தான் "பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவர்" என்கிறார் அருணகிரிநாதர்.
அப்படி நமக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் குருதேவரான கந்தனுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். அத்தனை பெயர்கள் இருந்தாலும் அவையனைத்திலும் சிறந்தவை மூன்று பெயர்கள். அவைகள் முருகன், குமரன், குகன். அந்த மூன்று பெயர்களையும் அன்போடு உச்சரித்த உடனேயே உள்ளமுருகும். அப்படியெல்லாம் அந்தப் பெயர்களைச் சொல்லி உள்ளம் உருகும் உணர்வினை அருள்வாய் முருகா என்று உருகுகிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Posts (Atom)