ஆசானுடைய அருளிருந்தாலன்றி சீடன் கற்க முடியாது. முருகனுடைய அருளின்றி முருகனைப் பற்றித் தெரியவும் புரியவும் முடியாது. புரிந்தும் புரியாதது போல இருக்கிறதல்லவா. இதை இன்னமும் எளிமையாகப் பார்ப்போம். மிகவும் சாதுவான விலங்கு பசு. ஆகையால் அது சிறந்த வீட்டு விலங்காக இருக்கிறது. பசுவின் பால் உடல் நலத்திற்கு மிகவும் நன்று. பசுவின் மடியிலிருந்து பாலைப் பெற வேண்டும். அதற்குப் பசுவின் அருள் வேண்டும். வேண்டாதவர் தீண்ட முடியுமா? பிறகு பற்களைத் தேடத்தான் வேண்டும். ஆக எந்த ஒன்றிலிருந்தும் ஒன்றைப் பெற அந்த ஒன்றின் அருள் வேண்டும்.
முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள் கொண்டறியார் அறியும் தரமோ
உருவன் றருவன் றுளதல் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின்றதுவே
(உருவன்று இருளன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே)
இந்த உலகத்தின் இயக்கத்திற்கு முருகனே (இறைவனே) விளக்கம். அப்படிப்பட்ட உலகிலே எதையும் அறிவதற்கு முருகனின் அருள் வேண்டும். முருகனை ஆசானாகக் கொண்டு அறிந்தாலொழிய எதுவும் அறிந்து கொள்ள முடியாது. முருகனைத் தனிவேல்முனி என்கிறார். வேல் தனியானது. ஆம். போர்க்களத்தில் வேல் நின்றால் யாரும் போரிட வர மாட்டார்கள். வேல் தனியாகத்தான் நிற்க வேண்டும். கதிர்வேலுக்கு எதிர்வேல் ஏது?
உருவமும் அருவமும் இல்லாதவர் முருகன். உருவம் இல்லையென்றால் அருவம்தானே. ஆனால் இங்கே உருவமும் அருவமும் இல்லாதவர் என்று கூறுகிறார். இருப்பது இல்லாதது என அனைத்தையும் கடந்த கடவுள் கந்தன். பகலிலே ஒளி. இரவிலே இருள். இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டவம் இறைவன். இதுதான் கடைசி இரண்டடிகளுக்கான விளக்கம். எவ்வளவு எளிமையான கருத்து. இதை இப்படியே பொருள் கொண்டாலும் சரிதான். வாரியார் சுவாமிகள் இந்தப் பொருளையும் உடைத்து உட்பொருள் கண்டு சொல்லியிருக்கிறார். தமிழ்க்கடலல்லவா அவர்! அவரது விளக்கத்தைப் பார்ப்போம்.
"நாத விந்து கலாதி நமோநம" என்கிறது திருப்புகழ். நாதம் என்பது சேவல். ஓங்காரத்தைக் கொக்கரித்து உரைக்கும். மயில் ஓங்காரத்தை வடிவில் காட்டும். மயிற்பீலி விந்தின் வடிவம். நாதமும் விந்துவும் கூடியது உலக இயக்கம். முன்பே சொன்னது போல உலக இயக்கம் என்பது முருகனின் விளக்கம். அதனால்தான் "நாத விந்து கலாதி நமோநம" என்கிறது பழநி திருப்புகழ்.
விந்துவின் வடிவமான மயிலின் தோகை உருவம். நாதத்தின் வடிவமான சேவலின் ஒலி அருவம். (உருவன்று அருவன்று). விந்து உள்ளது. நாதம் இல்லாதது. (உளதன்று இலதன்று). இருண்ட மேகத்தைக் கண்டு மகிழ்ந்து ஓங்கார வடிவில் ஆடும் மயில். இருள் தீர்ந்து பகலவன் ஒளி பெருக்கும் வேளையில் ஓங்கார நாதமாகக் கூவுகது சேவல். (இருளன்று ஒளியன்று). உருவுக்கும் அருவுக்கும், இருப்பதிற்கும் இல்லாததிற்கும், இருளுக்கும் ஒளிக்கும் இடையில் நின்று வேலால் காப்பவன் முருகன். அவனை ஆசானாகப் பெற்று கற்றாலொழிய வேறு உய்வில்லை.
இந்தக் கருத்தைத்தான் கந்தரலங்காரத்தில் சொல்கிறார். கோழிக்கொடியனுடைய அடி பணியாமல் குவலயத்தில் (உலகத்தில்) வாழக் கருதுகின்ற மதியற்றவர்களே, ஊழ் எனப்படும் விதியின் கொடுமையிலிருந்து தப்பிப்பது வேறு எப்படி!
கோழிக் கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக்கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலியுண்ணவொட்டாது!
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, April 24, 2006
Monday, April 17, 2006
13. செம்மான் மகளைத் திருடிய பெம்மான்
கற்பு மணம் தெய்வயானை. களவு மணம் வள்ளி. பெற்றோர் பார்த்து, உற்றோர் சூழ, கற்றோர் புகழச் செய்து கொண்ட திருமணம் தெய்வயானையுடன். காட்டிற்குச் சென்று, வம்பு செய்து, கையைப் பிடித்து இழுத்து, கிண்டல் பேசி, மயக்கி, ஓடிச்சென்று பிறகு நம்பிராஜன் சம்மதத்துடன் செய்து கொண்ட திருமணம் வள்ளியுடன். அதனால்தான் திருடும் முருகன் என்கிறார். இரவோடிரவாக வீட்டிலுள்ளதை பிறரறியாமல் கொண்டு செல்வது திருட்டுதானே? ஆகையால் திருடும் திருடன் என்கிறார்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே
செம்மான் மகள் என்றால்......செழுமையான மானின் வயிற்றில் பிறந்த வள்ளி என்று பொருள். திருமால் தவம் செய்கையில் இலக்குமி மான் வடிவில் வந்து நிற்க, மாலின் கருணையால் மானின் வயிற்றில் பிறந்த குழந்தை வள்ளி என்று கந்த புராணம் கூறுகிறது. வள்ளிக் கிழங்கு தோண்டிய மெத்தென்ற குழியில் மான் ஈன்ற குழந்தையை நம்பிராஜன் வளர்த்தான். இதென்னடா! புள்ளிமானும் பக்திமானும் கூடிக் குழந்தை வந்ததா என்று அருவெறுப்புடன் கேட்கலாம். வீம்புக்குக் கேட்டாலும் இதற்கும் விடை சொல்லலாம். பொதுவாகவே எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறைவனின் பிறப்பு அல்லது அவதாரம் என்பது மானிடப் பிறப்பிலிருந்து மாறுபட்டதாகவே கூறப்பட்டுள்ளது. கன்னி மேரி கணவனுடன் கூடாமல் ஏசுநாதர் அவதரித்தார் என்று நம்புகிறது கிருத்துவ மதம். புத்த மதத்திலும் மற்ற மதங்களிலும் இந்த வகையான நிகழ்வுகள் உண்டு. ஆகவே இந்த விஷயங்களை பெரிது படுத்தி விளக்கம் கொள்வதை விட கருத்தை மட்டும் கொள்வது நன்று. "நாடோறும் மேதோறும் நவிமகள் சேர் வேடுவன்" என்று இராமச்சந்திரக் கவிராயர் கூறுகிறார். மான் நாள்தோறும் ஓரிடத்தில் இராமல் ஓடியோடிச் சென்று நுனிப்புல் மேய்ந்து ஆராச்சி செய்து கொண்டிருக்கும். அதுதான் "நாடோறு மேதோறும்". நவி என்றால் மான். நவிமகள் - மானின் மகள்.
சரி. இப்படியெல்லாம் உள்ள இயற்கைக்குப் புறம்பான விஷயங்களை நீக்கிவிட்டும் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லலாம். பெம்மான் என்றால் பெரும் ஆள். அல்லவா. அதுபோல செம்மான் என்பதை செம்மையான ஆள் என்றும் கொள்ளலாம். வேட்டுவனாகப் பிறந்த நம்பி செம்மையான வாழ்வே வாழ்ந்தான். குலத்தால் வருவதல்ல குணம். ஆனால் குலத்தால் போற்றப்படலாம். நல்ல குணத்தை எல்லாக் குலமும் ஒரு குலமாக நின்று போற்ற வேண்டும். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
செம்மையான நம்பிராஜனுடைய மகளைத் திருடிக்கொண்டு போன முருகனுக்கு என்ன? பெம்மான் முருகன் பிறவான் இறவான். முருகனுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது. நெற்றிக் கண்ணில் தோன்றியது? "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்கிறார் கச்சியப்பர் கந்த புராணத்தில். தோன்றினான் என்றோ பிறந்தான் என்றோ கூறவில்லை. உதித்தனன் என்கிறார். இன்று உதிக்கும் சூரியன் நேற்றும் இருந்தது போல, என்றுமுள்ள முருகன் உதித்தான். பிறந்தால்தான் இறப்பு. இராமரும் கிருஷ்ணரும் பிறந்தார்கள். ஆகையால் முடிவில் இறந்தார்கள். சரயு ஆற்றில் தன்னுயிரை விடுத்து பாற்கடல் புகுந்தார் இராமாவதாரத்தில். வேடுவன் விட்ட அம்பு காலில் பாய மண்ணுலகு நீத்தார் கிருஷ்ணாவதாரத்தில். இது புராணங்களில் சொல்லும் வழக்கு. மீனாட்சியாக மதுரையை ஆண்ட உமையம்மை இறக்கவில்லை. மாறாக தாமாகவே கயிலை சென்றார். காரணம் அவரது பிறப்பு மானிடப் பிறப்பாக இருக்கவில்லை. வேள்வியில் தோன்றிய வேதநாயகியாக வந்தார் தமிழர்களுக்காக. ஒவ்வொரு புராணங்களும் ஒன்றையொன்று பார்த்து எழுதப்பட்டதல்ல. ஏதோ ஒரு பொது விதியின் பால் எழுந்ததாகவே உள்ளன. ஏசுநாதரும் சிலுவையில் இறந்து, பிறகு உயிர்த்தெழுந்தார். கிரேக்கக் கடவுளாகக் கருதப்படும் ஹெர்குலில் இறக்கவில்லை. மாறாக மண்ணுலகிலிருந்து தெய்வமாகவே ஒலிம்பஸ் மலைக்குச் சென்றான். காரணம் அவனது பிறப்பும் தெய்வாதீனமானது.
சரி. கருத்துக்கு வருவோம். பிறப்பு ஒழிய வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது? இறைவனை வேண்டுவது. ஏற்கனவே கடன் வைத்திருப்பவனிடம் நாம் கடன் கேட்டுச் செல்ல முடியாது. ஆக பிறவா இறவாப் பெம்மான் யாரோ அவரிடமே கேட்க முடியும். அந்தத் தன்மையை உடைய முருகப் பெருமானிடம் பிறவித் துயரை நீக்குமாறு வேண்டுகிறார் அருணகிரி.
இதுவரை இரண்டு வரிகளுக்குத்தான் விளக்கம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள். சின்ன அணுவிற்குள் ஒளிந்துள்ள பெரிய ஆற்றலைப் போலத்தான் இதுவும். சரி அடுத்த இரண்டடிகளைப் பார்க்கலாம்.
சும்மா இரு சொல்லற. இது முருகன் அருணகிரிக்கு உபதேசித்தது. தொழுநோயின் கொடுமை வாட்ட, துயர் தாங்காமல் தற்கொலை முடிவெடுத்தார் அருணகிரி. ஆற்றுக்கும் மலைக்கும் ஓடாமல், தாம்புக்கயிறைத் தேடாமல், கொடிய நஞ்சை நாடாமல், திருவண்ணாமலைக் கோபுரத்தை நாடினார். உச்சிக்கு ஏறினார். முருகாவென அழைத்து அங்கிருந்து கீழே குதித்தார். பசித்து குழந்தை அழுகின்ற போதே தாய்க்கு பால் சுரப்பது போல, ஓடி வந்தார் வேலவர். தாங்கி நின்றார் அருணகிரியை. அப்பொழுது செய்த உபதேசம்தான் "சும்மா இரு சொல்லற!" மிகவும் கடினமான உபதேசம். ஒன்றும் செய்யாமல் எப்படி இருப்பது. மனத்தின் கடிவாளம் எங்கெங்கோ போகிறதே. கையைக் காலைக் கூட ஓரிடத்தில் சும்மா வைத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் எப்படியாவது எதையாவது தூண்டுகின்றனவே! அப்புறம் எப்படி சும்மாயிருப்பது? முயற்சித்துப் பாருங்களேன். அருணகிரி முயன்றார். வெற்றியும் பெற்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் சும்மா இருந்தார். முருகனே சொன்ன பிறகு அதற்கு மறுபேச்சேது.
சரி. சும்மா இருந்ததின் விளைவுகள் என்ன? சும்மா இரு சொல்லற என்று சொன்னதுமே அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார். சிற்றின்ப வாழ்வில் நீந்தித் திளைத்தவர் அருணகிரி. பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு இன்பத்தை அனுபவித்தார். நாமும் அனுபவிக்கிறோம். அப்படி அனுபவிக்கும் பொழுது இன்பமாகத் தோன்றினாலும் முடிவு துன்பமாகவே இருக்கிறது. தொலைக்காட்டியைப் பார்க்கிறோம். பார்க்கையில் அந்த நிகழ்ச்சிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாளடைவில் கண்பார்வைக் கோளாறு வருகிறது. இது போலத்தான் ஒவ்வொன்றும். அப்படிப் பட்ட பொருட்களே நமக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. அருணகிரிக்கும் அப்படித்தான் இருந்தது முருகனிடம் உபதேசம் கேட்பதற்கு முன்பு. பாடம் கேட்ட பிறகு அம் மாபொருட்கள் ஒன்றுமற்றவைகளாகின. பார்ப்பதெல்லாம் பரமன் மகன். கேட்பதெல்லாம் கந்தன் புகழ். வாசித்ததெல்லாம் வள்ளிமணாளன் பற்றி. நினைத்ததெல்லாம் அந்த நித்தியானந்தனைப் பற்றி. நோக்குமிடமெல்லாம் நீக்கமற நின்ற இறைவன் என்று பாரதி சொன்னது போன்ற நிலையை அடைந்தார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே
செம்மான் மகள் என்றால்......செழுமையான மானின் வயிற்றில் பிறந்த வள்ளி என்று பொருள். திருமால் தவம் செய்கையில் இலக்குமி மான் வடிவில் வந்து நிற்க, மாலின் கருணையால் மானின் வயிற்றில் பிறந்த குழந்தை வள்ளி என்று கந்த புராணம் கூறுகிறது. வள்ளிக் கிழங்கு தோண்டிய மெத்தென்ற குழியில் மான் ஈன்ற குழந்தையை நம்பிராஜன் வளர்த்தான். இதென்னடா! புள்ளிமானும் பக்திமானும் கூடிக் குழந்தை வந்ததா என்று அருவெறுப்புடன் கேட்கலாம். வீம்புக்குக் கேட்டாலும் இதற்கும் விடை சொல்லலாம். பொதுவாகவே எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறைவனின் பிறப்பு அல்லது அவதாரம் என்பது மானிடப் பிறப்பிலிருந்து மாறுபட்டதாகவே கூறப்பட்டுள்ளது. கன்னி மேரி கணவனுடன் கூடாமல் ஏசுநாதர் அவதரித்தார் என்று நம்புகிறது கிருத்துவ மதம். புத்த மதத்திலும் மற்ற மதங்களிலும் இந்த வகையான நிகழ்வுகள் உண்டு. ஆகவே இந்த விஷயங்களை பெரிது படுத்தி விளக்கம் கொள்வதை விட கருத்தை மட்டும் கொள்வது நன்று. "நாடோறும் மேதோறும் நவிமகள் சேர் வேடுவன்" என்று இராமச்சந்திரக் கவிராயர் கூறுகிறார். மான் நாள்தோறும் ஓரிடத்தில் இராமல் ஓடியோடிச் சென்று நுனிப்புல் மேய்ந்து ஆராச்சி செய்து கொண்டிருக்கும். அதுதான் "நாடோறு மேதோறும்". நவி என்றால் மான். நவிமகள் - மானின் மகள்.
சரி. இப்படியெல்லாம் உள்ள இயற்கைக்குப் புறம்பான விஷயங்களை நீக்கிவிட்டும் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லலாம். பெம்மான் என்றால் பெரும் ஆள். அல்லவா. அதுபோல செம்மான் என்பதை செம்மையான ஆள் என்றும் கொள்ளலாம். வேட்டுவனாகப் பிறந்த நம்பி செம்மையான வாழ்வே வாழ்ந்தான். குலத்தால் வருவதல்ல குணம். ஆனால் குலத்தால் போற்றப்படலாம். நல்ல குணத்தை எல்லாக் குலமும் ஒரு குலமாக நின்று போற்ற வேண்டும். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
செம்மையான நம்பிராஜனுடைய மகளைத் திருடிக்கொண்டு போன முருகனுக்கு என்ன? பெம்மான் முருகன் பிறவான் இறவான். முருகனுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது. நெற்றிக் கண்ணில் தோன்றியது? "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்கிறார் கச்சியப்பர் கந்த புராணத்தில். தோன்றினான் என்றோ பிறந்தான் என்றோ கூறவில்லை. உதித்தனன் என்கிறார். இன்று உதிக்கும் சூரியன் நேற்றும் இருந்தது போல, என்றுமுள்ள முருகன் உதித்தான். பிறந்தால்தான் இறப்பு. இராமரும் கிருஷ்ணரும் பிறந்தார்கள். ஆகையால் முடிவில் இறந்தார்கள். சரயு ஆற்றில் தன்னுயிரை விடுத்து பாற்கடல் புகுந்தார் இராமாவதாரத்தில். வேடுவன் விட்ட அம்பு காலில் பாய மண்ணுலகு நீத்தார் கிருஷ்ணாவதாரத்தில். இது புராணங்களில் சொல்லும் வழக்கு. மீனாட்சியாக மதுரையை ஆண்ட உமையம்மை இறக்கவில்லை. மாறாக தாமாகவே கயிலை சென்றார். காரணம் அவரது பிறப்பு மானிடப் பிறப்பாக இருக்கவில்லை. வேள்வியில் தோன்றிய வேதநாயகியாக வந்தார் தமிழர்களுக்காக. ஒவ்வொரு புராணங்களும் ஒன்றையொன்று பார்த்து எழுதப்பட்டதல்ல. ஏதோ ஒரு பொது விதியின் பால் எழுந்ததாகவே உள்ளன. ஏசுநாதரும் சிலுவையில் இறந்து, பிறகு உயிர்த்தெழுந்தார். கிரேக்கக் கடவுளாகக் கருதப்படும் ஹெர்குலில் இறக்கவில்லை. மாறாக மண்ணுலகிலிருந்து தெய்வமாகவே ஒலிம்பஸ் மலைக்குச் சென்றான். காரணம் அவனது பிறப்பும் தெய்வாதீனமானது.
சரி. கருத்துக்கு வருவோம். பிறப்பு ஒழிய வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது? இறைவனை வேண்டுவது. ஏற்கனவே கடன் வைத்திருப்பவனிடம் நாம் கடன் கேட்டுச் செல்ல முடியாது. ஆக பிறவா இறவாப் பெம்மான் யாரோ அவரிடமே கேட்க முடியும். அந்தத் தன்மையை உடைய முருகப் பெருமானிடம் பிறவித் துயரை நீக்குமாறு வேண்டுகிறார் அருணகிரி.
இதுவரை இரண்டு வரிகளுக்குத்தான் விளக்கம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள். சின்ன அணுவிற்குள் ஒளிந்துள்ள பெரிய ஆற்றலைப் போலத்தான் இதுவும். சரி அடுத்த இரண்டடிகளைப் பார்க்கலாம்.
சும்மா இரு சொல்லற. இது முருகன் அருணகிரிக்கு உபதேசித்தது. தொழுநோயின் கொடுமை வாட்ட, துயர் தாங்காமல் தற்கொலை முடிவெடுத்தார் அருணகிரி. ஆற்றுக்கும் மலைக்கும் ஓடாமல், தாம்புக்கயிறைத் தேடாமல், கொடிய நஞ்சை நாடாமல், திருவண்ணாமலைக் கோபுரத்தை நாடினார். உச்சிக்கு ஏறினார். முருகாவென அழைத்து அங்கிருந்து கீழே குதித்தார். பசித்து குழந்தை அழுகின்ற போதே தாய்க்கு பால் சுரப்பது போல, ஓடி வந்தார் வேலவர். தாங்கி நின்றார் அருணகிரியை. அப்பொழுது செய்த உபதேசம்தான் "சும்மா இரு சொல்லற!" மிகவும் கடினமான உபதேசம். ஒன்றும் செய்யாமல் எப்படி இருப்பது. மனத்தின் கடிவாளம் எங்கெங்கோ போகிறதே. கையைக் காலைக் கூட ஓரிடத்தில் சும்மா வைத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் எப்படியாவது எதையாவது தூண்டுகின்றனவே! அப்புறம் எப்படி சும்மாயிருப்பது? முயற்சித்துப் பாருங்களேன். அருணகிரி முயன்றார். வெற்றியும் பெற்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் சும்மா இருந்தார். முருகனே சொன்ன பிறகு அதற்கு மறுபேச்சேது.
சரி. சும்மா இருந்ததின் விளைவுகள் என்ன? சும்மா இரு சொல்லற என்று சொன்னதுமே அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார். சிற்றின்ப வாழ்வில் நீந்தித் திளைத்தவர் அருணகிரி. பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு இன்பத்தை அனுபவித்தார். நாமும் அனுபவிக்கிறோம். அப்படி அனுபவிக்கும் பொழுது இன்பமாகத் தோன்றினாலும் முடிவு துன்பமாகவே இருக்கிறது. தொலைக்காட்டியைப் பார்க்கிறோம். பார்க்கையில் அந்த நிகழ்ச்சிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாளடைவில் கண்பார்வைக் கோளாறு வருகிறது. இது போலத்தான் ஒவ்வொன்றும். அப்படிப் பட்ட பொருட்களே நமக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. அருணகிரிக்கும் அப்படித்தான் இருந்தது முருகனிடம் உபதேசம் கேட்பதற்கு முன்பு. பாடம் கேட்ட பிறகு அம் மாபொருட்கள் ஒன்றுமற்றவைகளாகின. பார்ப்பதெல்லாம் பரமன் மகன். கேட்பதெல்லாம் கந்தன் புகழ். வாசித்ததெல்லாம் வள்ளிமணாளன் பற்றி. நினைத்ததெல்லாம் அந்த நித்தியானந்தனைப் பற்றி. நோக்குமிடமெல்லாம் நீக்கமற நின்ற இறைவன் என்று பாரதி சொன்னது போன்ற நிலையை அடைந்தார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, April 11, 2006
12. திருச்செங்கோட்டின் சிறப்பு
எளிதில் விளக்கம் சொல்லக் கூடிய பாடலிது.
கூகாவென என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே
சிகாமணி என்றால் என்ன? சிகை என்றால் முடி. அந்த முடியில் சூடக்கூடிய மணிதான் சிகாமணி. ஒருவர் எத்தனைதான் அணிமணி புனைந்தாலும் முடியில் சூடக்கூடிய மணிதான் உயர்ந்து தோன்றும். ஆகையால்தான் மணிமுடி என்பது சிறந்தது. மன்னர்களுக்கு பட்டம் கட்டுகையில் கையணி பூட்டுவதில்லை. காலணி பூட்டுவதில்லை. மாறாக மணிமுடி பூட்டுகிறார்கள். அந்த நிகழ்ச்சியையும் முடிசூட்டு விழா என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்தே மணிமுடியின் பெருமையை அறிந்து கொள்ளலாம். சுரலோகம் என்றால் தேவலோகம். அந்த தேவலோகங்களுக்கு எல்லாம் மணிமுடி புணைந்து கொண்டவரே முருகா! தேவசேனாபதியல்லவா!
தமிழ்க்கவிதைகளில் நான்கு விதமுண்டு. அவை ஆசு, மதுரம், சித்திரம் மற்றும் வித்தாரம். இந்த நான்கிலும் சிறப்புடையவரே சங்கப் புலவராகத் தகுதி பெற்றவர். இந்த நான்கு கவிதைகளிலும் ஒருவர் சிறந்து விளங்க வேண்டுமானால் முருகப் பெருமானின் தனிக்கருணை வேண்டும். தமிழ்த் தெய்வமல்லவா!
"சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார். வேலையும் சேவலையும் போற்றிப் புகழ வேண்டும். அதுவும் தீந்தமிழில். அப்படிப் புகழ்ந்து பாட வேண்டுன்ற ஆவலைத் தருவீர் வேலவரே என்று வேண்டுகிறார். இறைவனைப் பாடுகின்ற ஆர்வம் கூட இறையருளால்தான் தோன்றும். அப்படியிருக்க தமிழறிவு வாய்ப்பது என்பது......இறைவனின் பரிபூரணக் கருணையைக் காட்டுகிறது. அதனால்தான் நாலுகவித் தியாகா என்று புகழ்கிறார்.
நாகாசல வேலவா! நாகாசலம் என்ற மலை மீதமர்ந்து வேலைப் பிடித்த பெருமானே! நாகசலம் என்பது திருச்செங்கோடு என்றும் திருப்பதியென்றும் இரண்டுவிதமாகக் கூறுவார்கள். கந்தபுராணத்தில் "பண்டு தான் தங்கியிருந்த வேங்கடமலை" என்ற வரிகளிலிருந்து திருவேங்கடமலையில் முருகன் இருந்ததாகக் கூறுவார்கள். திருப்பதியில் இருக்கும் ஏழுமலைகளில் நாகாச்சலமும் ஒன்று. திருப்பதி சைவப்பதியா வைணவப்பதியா என்ற சர்ச்சை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது. பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய சர்ச்சைகள் நிகழ்ந்தன. ஆனால் அந்தச் சர்ச்சைகளும் அவற்றின் முடிவுகளும் சரித்திரச் சான்றுகளின் படியில்லாமல் வெறும் வாதத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறுவார்கள். எது எப்படியோ! எல்லாத் தெய்வமும் ஒன்றே! ஆகையால் மதநல்லிணக்கத்திற்காக இங்கே நாம் திருச்செங்கோடு என்றே எடுத்துக் கொள்ளலாம். திருச்செங்கோடும் சிறப்பில் குறைந்ததல்ல. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே" என்ற சிலப்பதிகார வரிகளிலிருந்து திருச்செங்கோட்டின் சிறப்பு விளங்கும்.
கூகா எனக் கிளை கூடியழும். எப்பொழுது? உடலென்னும் கூட்டிலிருந்து உயிரென்னும் பறவை தப்பித்துப் பறந்த பிறகு, உற்றாரும் உறவினரும் கடன் கொடுத்தோரும் கேட்டோரும் கூடிக் கதறி அழும். அப்படிப்பட்ட வகையில் இறப்பு நேராமல் காக்க அருணகிரிக்கு மெய்ப்பொருள் பேசினான் முருகன். மெய்ப்பொருள் என்றால் என்ன? உண்மையான பொருள். பொய் அழிந்து போகும். ஆனால் உண்மை அழிவில்லாதது. அப்படிப்பட்ட அழிவில்லாத பொருளைப் பற்றி முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்திருக்கிறார். ஏற்கனவே "பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா" என்று கூறியிருக்கிறார். இங்கே போகா வகைக்கு அதே மெய்ப்பொருள் பயன்படுகிறது. அனைத்திற்கும் ஆகும் அந்த மெய்ப்பொருள். பரமசிவனுக்கும் அகத்தியருக்கும் அடுத்து முருகனிடம் உபதேசம் பெற்றது அருணகிரிதான். திருப்புகழில் சொல்கிறார்.
"சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரமிரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா!"
இரு செவி மீதிலும் பகர் செய்யும் குருநாதன் என்று முருகனைப் புகழ்கிறார். இரண்டு காதுகளிலும் சொல்ல வேண்டிய காரணம் என்ன? முருகனுடைய உபதேசம் கேட்கத் திகட்டாதது. மருந்தானாலும் விருந்து போனது. ஒரு முறை கேட்டதும் போதவில்லை சிவனுக்கு. மற்றொரு காதையும் காட்டுகிறார். என்ன கொடுப்பினை!
பக்தியுடன்,
கோ.இராகவன்
கூகாவென என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே
சிகாமணி என்றால் என்ன? சிகை என்றால் முடி. அந்த முடியில் சூடக்கூடிய மணிதான் சிகாமணி. ஒருவர் எத்தனைதான் அணிமணி புனைந்தாலும் முடியில் சூடக்கூடிய மணிதான் உயர்ந்து தோன்றும். ஆகையால்தான் மணிமுடி என்பது சிறந்தது. மன்னர்களுக்கு பட்டம் கட்டுகையில் கையணி பூட்டுவதில்லை. காலணி பூட்டுவதில்லை. மாறாக மணிமுடி பூட்டுகிறார்கள். அந்த நிகழ்ச்சியையும் முடிசூட்டு விழா என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்தே மணிமுடியின் பெருமையை அறிந்து கொள்ளலாம். சுரலோகம் என்றால் தேவலோகம். அந்த தேவலோகங்களுக்கு எல்லாம் மணிமுடி புணைந்து கொண்டவரே முருகா! தேவசேனாபதியல்லவா!
தமிழ்க்கவிதைகளில் நான்கு விதமுண்டு. அவை ஆசு, மதுரம், சித்திரம் மற்றும் வித்தாரம். இந்த நான்கிலும் சிறப்புடையவரே சங்கப் புலவராகத் தகுதி பெற்றவர். இந்த நான்கு கவிதைகளிலும் ஒருவர் சிறந்து விளங்க வேண்டுமானால் முருகப் பெருமானின் தனிக்கருணை வேண்டும். தமிழ்த் தெய்வமல்லவா!
"சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார். வேலையும் சேவலையும் போற்றிப் புகழ வேண்டும். அதுவும் தீந்தமிழில். அப்படிப் புகழ்ந்து பாட வேண்டுன்ற ஆவலைத் தருவீர் வேலவரே என்று வேண்டுகிறார். இறைவனைப் பாடுகின்ற ஆர்வம் கூட இறையருளால்தான் தோன்றும். அப்படியிருக்க தமிழறிவு வாய்ப்பது என்பது......இறைவனின் பரிபூரணக் கருணையைக் காட்டுகிறது. அதனால்தான் நாலுகவித் தியாகா என்று புகழ்கிறார்.
நாகாசல வேலவா! நாகாசலம் என்ற மலை மீதமர்ந்து வேலைப் பிடித்த பெருமானே! நாகசலம் என்பது திருச்செங்கோடு என்றும் திருப்பதியென்றும் இரண்டுவிதமாகக் கூறுவார்கள். கந்தபுராணத்தில் "பண்டு தான் தங்கியிருந்த வேங்கடமலை" என்ற வரிகளிலிருந்து திருவேங்கடமலையில் முருகன் இருந்ததாகக் கூறுவார்கள். திருப்பதியில் இருக்கும் ஏழுமலைகளில் நாகாச்சலமும் ஒன்று. திருப்பதி சைவப்பதியா வைணவப்பதியா என்ற சர்ச்சை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது. பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய சர்ச்சைகள் நிகழ்ந்தன. ஆனால் அந்தச் சர்ச்சைகளும் அவற்றின் முடிவுகளும் சரித்திரச் சான்றுகளின் படியில்லாமல் வெறும் வாதத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறுவார்கள். எது எப்படியோ! எல்லாத் தெய்வமும் ஒன்றே! ஆகையால் மதநல்லிணக்கத்திற்காக இங்கே நாம் திருச்செங்கோடு என்றே எடுத்துக் கொள்ளலாம். திருச்செங்கோடும் சிறப்பில் குறைந்ததல்ல. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே" என்ற சிலப்பதிகார வரிகளிலிருந்து திருச்செங்கோட்டின் சிறப்பு விளங்கும்.
கூகா எனக் கிளை கூடியழும். எப்பொழுது? உடலென்னும் கூட்டிலிருந்து உயிரென்னும் பறவை தப்பித்துப் பறந்த பிறகு, உற்றாரும் உறவினரும் கடன் கொடுத்தோரும் கேட்டோரும் கூடிக் கதறி அழும். அப்படிப்பட்ட வகையில் இறப்பு நேராமல் காக்க அருணகிரிக்கு மெய்ப்பொருள் பேசினான் முருகன். மெய்ப்பொருள் என்றால் என்ன? உண்மையான பொருள். பொய் அழிந்து போகும். ஆனால் உண்மை அழிவில்லாதது. அப்படிப்பட்ட அழிவில்லாத பொருளைப் பற்றி முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்திருக்கிறார். ஏற்கனவே "பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா" என்று கூறியிருக்கிறார். இங்கே போகா வகைக்கு அதே மெய்ப்பொருள் பயன்படுகிறது. அனைத்திற்கும் ஆகும் அந்த மெய்ப்பொருள். பரமசிவனுக்கும் அகத்தியருக்கும் அடுத்து முருகனிடம் உபதேசம் பெற்றது அருணகிரிதான். திருப்புகழில் சொல்கிறார்.
"சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரமிரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா!"
இரு செவி மீதிலும் பகர் செய்யும் குருநாதன் என்று முருகனைப் புகழ்கிறார். இரண்டு காதுகளிலும் சொல்ல வேண்டிய காரணம் என்ன? முருகனுடைய உபதேசம் கேட்கத் திகட்டாதது. மருந்தானாலும் விருந்து போனது. ஒரு முறை கேட்டதும் போதவில்லை சிவனுக்கு. மற்றொரு காதையும் காட்டுகிறார். என்ன கொடுப்பினை!
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, April 03, 2006
11. எருமையும் மயிலும்
அச்சம் போக்கும் பாடல் இது. உள்ளத்தில் அச்சம் தோன்றுகையில் உச்சரிக்க அச்சமும் போய் அச்சத்திற்கான காரணமும் போகும்.
கார்மாமிசை காலன் வரிற் கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே
தார் மார்பா! தார் என்றால் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். வட்டம் முழுமை பெற்றிருக்காது. தோளில் போடப்பட்டு இருபுறமும் தொங்கும். "கார்கடம்பத் தார் எம் கடவுள்" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனைக் குறிப்பிடுகிறார். குளிர்ந்த கடம்ப மலர்களால் ஆன மாலையை அணிந்த கடவுள் என்று பொருள். தோளின் இருபுறமும் பூக்களால் கட்டித் தொங்கினால் பூந்தார். வாழை மரத்தில் காய்த்துப் பூவோடு தொங்கினால் வாழைத்தார். இன்னமும் தமிழில் பழஞ்சொற்கள் நிறைய பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அருமை பெருமை தெரியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள். கண்ணனுக்கான மாலையை அணிந்து கொண்டதால் ஆண்டாளுக்கும் தாரே சாற்றப்படுகிறது. ஆனால் நாளாவட்டத்தில் எல்லாம் மாலைகள் என்றே அழைக்கப்பட்டன.
வலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். அதாவது இந்திரனுடைய அமராவதியைப் போரிட்டு அழித்தவன் சூரபதுமன். அந்தச் சூரன் முருகப் பெருமானுடன் போரிட்டான். ஆனால் முருகன் சூரனுடன் போரிட்டான் என்பது தவறு. சூரன் மீது முருகன் கருணை காட்டினார். ஆகையினால் அவனைத் தேடிச் சென்று ஆட்கொண்டார். இதையுணராத சூரன் ஆணவம் கொண்டு முருகனுடன் போரிட்டான். முடிவில் எல்லா போர்க்கருவிகளையும் இழந்து கடலடியில் ஒளிந்தான். கடலை வற்றச் செய்தார் வேலவர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெரிய மாமரமாய் எழுந்தான் சூரன். வேலானது மரத்தைப் பிளந்தது. சேவலும் மயிலுமாய் சூரன் முருகனடி பணிந்தான். சூர்+மா மடியத் தொடு வேலவனே! புரிகிறதல்லவா! இதைத்தான் இளங்கோவும் "சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே" என்று சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.
இப்படியெல்லாம் அருணகிரி எதற்கு அழைக்கிறார் முருகனை? காரணம் நமக்கிருக்கும் அச்சம்தான். இந்த உலகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அச்சமிருக்கும். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அச்சம் இறப்பு. அந்த இறப்பு என்ற பெயரில் உடலையும் உயிரையும் கூறிட்டுப் பிரிப்பவன் கூற்றுவன். அதாவது எமதர்மன். கூற்றுவனுக்கு காலன் என்று பெயரும் உண்டு. கால் என்றால் காற்று என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். காற்று விரைந்து வருவதைப் போல வேளை வரும்போது விரைந்து வருகிறவன் காலன். அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா!
"அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க" என்கிறார் தேவராய சுவாமிகள்.
"காலன் எனையணுகாமல் உனதிரு
தாளில் வழிபட அருள்வாயே" என்கிறது திருப்புகழ்.
கலாபம் என்றால் மயிற்றோகை. கலபத் தேர் என்பது உருவகம். மயிலாகிய தேரில் என்று பொருள் கொள்ள வேண்டும். காரெருமை மீதேறி காலன் வரும்பொழுது, கந்தவேளே, மயிலாகிய தேர் மீதேறி வந்து எதிர்கொள்க! மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது? சூரனே மயிலானன் என்பதைத்தான் அடுத்த இரண்டு வரிகளில் "சூர்மா மடியத் தொடு வேலவனே" என்று இணைத்திருக்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
கார்மாமிசை காலன் வரிற் கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே
தார் மார்பா! தார் என்றால் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். வட்டம் முழுமை பெற்றிருக்காது. தோளில் போடப்பட்டு இருபுறமும் தொங்கும். "கார்கடம்பத் தார் எம் கடவுள்" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனைக் குறிப்பிடுகிறார். குளிர்ந்த கடம்ப மலர்களால் ஆன மாலையை அணிந்த கடவுள் என்று பொருள். தோளின் இருபுறமும் பூக்களால் கட்டித் தொங்கினால் பூந்தார். வாழை மரத்தில் காய்த்துப் பூவோடு தொங்கினால் வாழைத்தார். இன்னமும் தமிழில் பழஞ்சொற்கள் நிறைய பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அருமை பெருமை தெரியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள். கண்ணனுக்கான மாலையை அணிந்து கொண்டதால் ஆண்டாளுக்கும் தாரே சாற்றப்படுகிறது. ஆனால் நாளாவட்டத்தில் எல்லாம் மாலைகள் என்றே அழைக்கப்பட்டன.
வலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். அதாவது இந்திரனுடைய அமராவதியைப் போரிட்டு அழித்தவன் சூரபதுமன். அந்தச் சூரன் முருகப் பெருமானுடன் போரிட்டான். ஆனால் முருகன் சூரனுடன் போரிட்டான் என்பது தவறு. சூரன் மீது முருகன் கருணை காட்டினார். ஆகையினால் அவனைத் தேடிச் சென்று ஆட்கொண்டார். இதையுணராத சூரன் ஆணவம் கொண்டு முருகனுடன் போரிட்டான். முடிவில் எல்லா போர்க்கருவிகளையும் இழந்து கடலடியில் ஒளிந்தான். கடலை வற்றச் செய்தார் வேலவர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெரிய மாமரமாய் எழுந்தான் சூரன். வேலானது மரத்தைப் பிளந்தது. சேவலும் மயிலுமாய் சூரன் முருகனடி பணிந்தான். சூர்+மா மடியத் தொடு வேலவனே! புரிகிறதல்லவா! இதைத்தான் இளங்கோவும் "சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே" என்று சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.
இப்படியெல்லாம் அருணகிரி எதற்கு அழைக்கிறார் முருகனை? காரணம் நமக்கிருக்கும் அச்சம்தான். இந்த உலகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அச்சமிருக்கும். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அச்சம் இறப்பு. அந்த இறப்பு என்ற பெயரில் உடலையும் உயிரையும் கூறிட்டுப் பிரிப்பவன் கூற்றுவன். அதாவது எமதர்மன். கூற்றுவனுக்கு காலன் என்று பெயரும் உண்டு. கால் என்றால் காற்று என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். காற்று விரைந்து வருவதைப் போல வேளை வரும்போது விரைந்து வருகிறவன் காலன். அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா!
"அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க" என்கிறார் தேவராய சுவாமிகள்.
"காலன் எனையணுகாமல் உனதிரு
தாளில் வழிபட அருள்வாயே" என்கிறது திருப்புகழ்.
கலாபம் என்றால் மயிற்றோகை. கலபத் தேர் என்பது உருவகம். மயிலாகிய தேரில் என்று பொருள் கொள்ள வேண்டும். காரெருமை மீதேறி காலன் வரும்பொழுது, கந்தவேளே, மயிலாகிய தேர் மீதேறி வந்து எதிர்கொள்க! மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது? சூரனே மயிலானன் என்பதைத்தான் அடுத்த இரண்டு வரிகளில் "சூர்மா மடியத் தொடு வேலவனே" என்று இணைத்திருக்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, March 27, 2006
10. மையல் வலையா தையல் வலை?
தமிழ் மொழி இல்லறத்தைச் சிறப்பித்து வழங்குகிறது. அதே நேரத்தில் "இல்லறமல்லது நல்லறமன்று" என்று சொல்லவும் தவறவில்லை. அதே நேரத்தில் அனைவரும் இல்லறத்தை ஏற்கும்படி வற்புறுத்தவும் இல்லை. "தவமும் அவமுடையார்க்கு ஆகும்" என்று வள்ளுவம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் பரத்தையர் ஒழுக்கத்தை எந்தத் தமிழ் நூலும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பரத்தையிடம் போன கோவலன் கேவலன் ஆனதைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. பொருந்தாக் காமம் இலக்கியங்களில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட கட்டிய மனைவி இருக்க பரத்தையரை நாடுவதைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றுக் கொள்ளவதில்லை.. முருகப் பெருமானால் ஆட்கொளப் படும் முன்னால் அருணகிரி ஆசைகளின் கிரியாக இருந்தார். நாளும் ஒரு நாயகி என்று வாழ்ந்தார். பட்டுத் தெளிந்த பின் முன் செய்த குற்றங்களைப் பாடுகிறார். அவற்றிலிருந்தெல்லாம் காக்க முருகனை வேண்டுகிறார்.
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென்று ஒழிவேன்
தட்டூற வேல் சயிலத் தெரியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே
மட்டு என்றால் தேன். மட்டூர் குழல் என்றால் தேனூறும் கூந்தல். கூந்தலிலே தேன் ஊறுமா? மலரில் தேனூறும். "மட்டவிழ் மலர் கொடு பணிவேனே" என்று திருப்புகழ் பிள்ளையாரைப் பணிகின்றது. அத்தகைய தேனூறும் மலர்களை அணிந்த மங்கையர் யார்? எல்லா மங்கையருமா? தெற்கில் மலர்களைச் சூடிக் கொள்வது பெண்களிடையில் பரவலான வழக்கமாயிற்றே! இங்கே யாரைச் சொல்கிறார்? அதைச் சொல்லத்தான் "மையல் வலை" என்று கூறுகிறார். குடும்பப் பெண்கள் மையல் வலை விரிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கடை விரிக்காமலே வேண்டியது கிடைக்கும். மையல் வலை விரிக்கும் கண்களோடு தேனூறும் மலர்களைச் சூடிய மங்கையர் யாரென்று இப்பொழுது தெரிகிறதா?
விலைமாதர்களைக் குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. விரும்பிக் கொள்ளப்படுவது கடையில் இருக்கிறது. ஆகையால் பரத்தையரை குற்றம் கூறவில்லை அருணகிரி. அந்த பரத்தையரின் மீது தனக்கு உண்டாகும் மயக்கத்தைத் தீர்க்கும் படி இறைவனடி பணிகிறார். பரத்தையர் இருப்பதால் போகிறோம் என்று சொல்லும் கருத்தில் அருணகிரிக்கு உடன்பாடு இல்லை. தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு. அதை மற்றவர் மேல் ஏற்றல் தகாது என்பது அப்பெருமகனார் கருத்து. இந்தக் கருத்து எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது.
ஊசல் ஓரிடத்தில் நிலையாக இராது. அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். பரத்தையர் மையல் வலையில் வீழ்ந்தாலும் அதே நிலைதான். ஊசலில் ஆற்றல் இருக்கும் வரை ஆடும். பிறகு நின்று விடும். அதுபோல செல்வம் இருக்கும் வரை பரத்தையர் வாசல் வரவேற்கும். பிறகு மூடிவிடும். பொய்யாமொழிப் புலவருக்கும் அந்த நிலை ஏற்பட்டது. பரத்தையர் ஆசையில் உண்டாகும் நிலையற்ற வாழ்க்கையெனும் மயக்கத்திலிருந்து காப்பாற்று கந்தா!
தட்டு என்றால் தடை அல்லது தடங்கல். தட்டுத் தடுமாறி என்ற பதத்தை நினைவிற் கொள்க. சூரனுடைய வீரமகேந்திரபுரியை நோக்கி வீரநடை போட்ட தேவர் படைகளைத் தடுக்கும் வகையில் தடையாக நின்றது கிரவுஞ்ச மலை. அது சூரனின் தம்பி தாரகாசுரனின் மாய மலை. தடங்கலாக நின்ற மலை (சைலம்) ஊடுருவ வேலை எறிந்தார் முருகப் பெருமான். கிரவுஞ்ச மலையும் தாரகாசுரனும் வீழ்ந்தனர். மாயை விலக வேலெறிந்தார் முருகன். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். ஆகையால் அதைப் படித்துப் புகழ தத்துவ அறிவு தேவைப்படுகிறது.
நிட்டூரம் என்றால் வடமொழியில் துயர் செய்கிறவர். ஆகுலம் என்றால் துன்பம். நிர் என்பது எதிர்ப்பதச் சொல். இல்லாதது என்ற பொருளைக் கொடுக்கும். நிராகுலம் என்றால் துன்பமில்லாதது. பயம் என்றால் அச்சம். அச்சமில்லாதது நிர்ப்பயம். நிட்டூர நிராகுல நிர்ப்பயமே என்றால் "துன்பம் தருகிறவைகளைப் பற்றியும் துன்பமில்லாதவைகளைப் பற்றியும் எந்த அச்சமும் இல்லை". முருகனை வழிபடுகிறவர்களுக்கு எந்த பயமும் தேவையில்லை. முருகனுடைய திருவடி எல்லா அச்சங்களையும் நீக்கும். அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். அஞ்சேல் என வேல் தோன்றும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென்று ஒழிவேன்
தட்டூற வேல் சயிலத் தெரியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே
மட்டு என்றால் தேன். மட்டூர் குழல் என்றால் தேனூறும் கூந்தல். கூந்தலிலே தேன் ஊறுமா? மலரில் தேனூறும். "மட்டவிழ் மலர் கொடு பணிவேனே" என்று திருப்புகழ் பிள்ளையாரைப் பணிகின்றது. அத்தகைய தேனூறும் மலர்களை அணிந்த மங்கையர் யார்? எல்லா மங்கையருமா? தெற்கில் மலர்களைச் சூடிக் கொள்வது பெண்களிடையில் பரவலான வழக்கமாயிற்றே! இங்கே யாரைச் சொல்கிறார்? அதைச் சொல்லத்தான் "மையல் வலை" என்று கூறுகிறார். குடும்பப் பெண்கள் மையல் வலை விரிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கடை விரிக்காமலே வேண்டியது கிடைக்கும். மையல் வலை விரிக்கும் கண்களோடு தேனூறும் மலர்களைச் சூடிய மங்கையர் யாரென்று இப்பொழுது தெரிகிறதா?
விலைமாதர்களைக் குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. விரும்பிக் கொள்ளப்படுவது கடையில் இருக்கிறது. ஆகையால் பரத்தையரை குற்றம் கூறவில்லை அருணகிரி. அந்த பரத்தையரின் மீது தனக்கு உண்டாகும் மயக்கத்தைத் தீர்க்கும் படி இறைவனடி பணிகிறார். பரத்தையர் இருப்பதால் போகிறோம் என்று சொல்லும் கருத்தில் அருணகிரிக்கு உடன்பாடு இல்லை. தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு. அதை மற்றவர் மேல் ஏற்றல் தகாது என்பது அப்பெருமகனார் கருத்து. இந்தக் கருத்து எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது.
ஊசல் ஓரிடத்தில் நிலையாக இராது. அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். பரத்தையர் மையல் வலையில் வீழ்ந்தாலும் அதே நிலைதான். ஊசலில் ஆற்றல் இருக்கும் வரை ஆடும். பிறகு நின்று விடும். அதுபோல செல்வம் இருக்கும் வரை பரத்தையர் வாசல் வரவேற்கும். பிறகு மூடிவிடும். பொய்யாமொழிப் புலவருக்கும் அந்த நிலை ஏற்பட்டது. பரத்தையர் ஆசையில் உண்டாகும் நிலையற்ற வாழ்க்கையெனும் மயக்கத்திலிருந்து காப்பாற்று கந்தா!
தட்டு என்றால் தடை அல்லது தடங்கல். தட்டுத் தடுமாறி என்ற பதத்தை நினைவிற் கொள்க. சூரனுடைய வீரமகேந்திரபுரியை நோக்கி வீரநடை போட்ட தேவர் படைகளைத் தடுக்கும் வகையில் தடையாக நின்றது கிரவுஞ்ச மலை. அது சூரனின் தம்பி தாரகாசுரனின் மாய மலை. தடங்கலாக நின்ற மலை (சைலம்) ஊடுருவ வேலை எறிந்தார் முருகப் பெருமான். கிரவுஞ்ச மலையும் தாரகாசுரனும் வீழ்ந்தனர். மாயை விலக வேலெறிந்தார் முருகன். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். ஆகையால் அதைப் படித்துப் புகழ தத்துவ அறிவு தேவைப்படுகிறது.
நிட்டூரம் என்றால் வடமொழியில் துயர் செய்கிறவர். ஆகுலம் என்றால் துன்பம். நிர் என்பது எதிர்ப்பதச் சொல். இல்லாதது என்ற பொருளைக் கொடுக்கும். நிராகுலம் என்றால் துன்பமில்லாதது. பயம் என்றால் அச்சம். அச்சமில்லாதது நிர்ப்பயம். நிட்டூர நிராகுல நிர்ப்பயமே என்றால் "துன்பம் தருகிறவைகளைப் பற்றியும் துன்பமில்லாதவைகளைப் பற்றியும் எந்த அச்சமும் இல்லை". முருகனை வழிபடுகிறவர்களுக்கு எந்த பயமும் தேவையில்லை. முருகனுடைய திருவடி எல்லா அச்சங்களையும் நீக்கும். அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். அஞ்சேல் என வேல் தோன்றும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, March 20, 2006
9. குமரி பெற்ற குமரன்
அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே
குமரன் யார்? கிரி ராஜகுமாரியின் மகன். எந்த கிரி? மேரு கிரி. இமயமலையரசன் இமவான் பெற்ற மகள் பார்வதி. பர்வத ராஜகுமாரி பார்வதி என்றும் கூறுவார்கள். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி அவள். "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னியென மறை பேசும்!" உலகமனைத்தையும் பெற்றவளைக் கன்னியென மறைகள் கொண்டாடுகின்றன. அப்படிப்பட்ட கன்னியின் மகன் குமரனே! என்ன வியப்பு! கன்னி பெற்ற மகனா? கிருத்துவ வேதாகமங்களும் அப்படித்தான் சொல்கின்றன. மரியன்னையின் மைந்தன் ஏசுவைத்தானே உலக கிருத்துவர் தொழுகின்றனர். ஆயினும் கன்னி மேரி என்ற வழக்கும் உண்டே. அதுபோலத்தான் அருணகிரி இங்கே "குமாரி பெற்ற குமரன்" என்று குறிப்பிடுகிறார்.
சமர் என்றால் போர். போர்க்களத்தில் தன்னோடு பொருதும் தானவர்களை நாசம் செய்கின்றவனே! தானவர்கள் என்றால் அரக்கர்கள். கஸ்யபரின் மனைவிகளில் ஒருவளான தானை என்பவள் பெற்ற பிள்ளைகள் தானவர்கள் என்றும் கூறுவார்கள். போரிடுவதற்கு இறைவனுக்கு எதிரிகள் உண்டா? இல்லை. இறைவனுக்கு எதிரிகள் இருக்க முடியுமா? முடியாது. ஆனால் இறைவன் அடியார்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். தேவர்களைச் சிறையிட்ட சூரனால் முருகனைச் சிறையிட முடியுமா? இல்லை அப்படி நினைத்துப் பார்க்க முடியுமா? இறைவன் போர்க்கோலம் பூண்டிருப்பது அடியார்களின் பகையைத் தீர்க்க. திருஞான சம்பந்தர் தங்கியிருந்த சத்திரத்திற்கு நெருப்பு வைத்தார்கள். இறைவன் கருணை மழை பொழிந்தான். திருநாவுக்கரசை சுண்ணாம்புக் காளவாயிலில் இட்டார்கள். நீறு நீர்த்துப் போனது. அவரையே கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அலை தாலாட்டியது.
பட்டினத்தடிகளுக்கு அப்பத்தில் நஞ்சு வைத்தார்கள். அது வைத்தவர் வீட்டைப் பற்றியது. ஆக அடியவர்களுக்குத் துன்பம் வருகையில் போரிட்டு அழிப்பவன் இறைவன். இது எந்த மதத்திற்கும் பொருந்தும்.
இதே வரிக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். நம்மோடு போருக்கு வரும் காமம், வஞ்சகம், தீய எண்ணங்கள், மதம், மாச்சர்யங்கள் ஆகியவைகளை எதிர்த்துப் போரிட்டு அழித்து நம்மைக் காக்கும் வேலன் என்றும் கொள்ளலாம். நமக்குள் எழும் தீய எண்ணங்களை அழிப்பது எப்படி? மருந்து சாப்பிட வேண்டும். எந்த மருந்து? அருள் தரும் தமிழ்க் கந்த மருந்து. உள்ளேயிருக்கும் அழுக்குகளைப் போக்க வெளியே இருக்கும் மருந்து உள்ளே போக வேண்டும் அல்லவா. அதுபோல உள்ளத்தில் இருக்கும் தீயவை போக இறைவனை அந்த உள்ளத்தில் குடியேற்ற வேண்டும். தீயவை அகலும். தூயவை பெருகும்.
இப்பொழுது பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பார்க்கலாம். சற்று முதிர்ந்த வரிகள். "அமரும் பதிகேள் அகமாம்" என்பதை "அமரும் பதி, கேள், அகம்" என்று பிரிக்க வேண்டும். பதி என்றால் வாழும் ஊர். திருவிளையாடற் புராணம் மதுரையை மதுரையம்பதி என்று சிறப்பிக்கிறது. சிலப்பதிகாரத்திலும் இந்த சொல் கையாளப்பட்டுள்ளது. "நீ யார்?" என்று வினவிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விடையளிக்கையில் சொல்கிறார் கண்ணகி, "பெரும் பெயர்ப் புகார் என் பதியே." அமர்தல் என்றால் உட்கார்தல் அல்லது உறைதல். அமரும் பதி என்றால்? உட்காரும் கணவன் அல்ல. உறையும் ஊர். கேள் என்றால் வினவுவது எனலாம். ஆனால் இங்கே உறவுமுறைகளைக் குறிக்கும். "யாதும் ஊரே யாவும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனார் வாக்கை நினைவில் கொள்க.
அகம் என்றால் வீடு. எனது ஊர், எனது உறவுகள், எனது வீடு என்று கிறங்கும் மயக்கம். அதைத்தான் பிமரம் என்கிறார். பிரமை என்ற சொல் மருவிச் சிதைந்து இங்கே பிமரமானது. மனப் பிரமை என்றால் மன மயக்கம். அத்தகைய மயக்கம் கெட பேசியவா என்கிறார் முருகனை. முருகன் என்ன பேசினார்? மெய்ப் பொருள் பேசினார். உலகப் பற்றுகளோடு வாழ்ந்த அருணகிரி நாதருக்கு உபதேசம் பேசினார் முருகன். அந்த உபதேசத்தால் உலகப் பற்று போய் இறைப் பற்று வந்தது.
அன்புடன்,
கோ.இராகவன்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே
குமரன் யார்? கிரி ராஜகுமாரியின் மகன். எந்த கிரி? மேரு கிரி. இமயமலையரசன் இமவான் பெற்ற மகள் பார்வதி. பர்வத ராஜகுமாரி பார்வதி என்றும் கூறுவார்கள். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி அவள். "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னியென மறை பேசும்!" உலகமனைத்தையும் பெற்றவளைக் கன்னியென மறைகள் கொண்டாடுகின்றன. அப்படிப்பட்ட கன்னியின் மகன் குமரனே! என்ன வியப்பு! கன்னி பெற்ற மகனா? கிருத்துவ வேதாகமங்களும் அப்படித்தான் சொல்கின்றன. மரியன்னையின் மைந்தன் ஏசுவைத்தானே உலக கிருத்துவர் தொழுகின்றனர். ஆயினும் கன்னி மேரி என்ற வழக்கும் உண்டே. அதுபோலத்தான் அருணகிரி இங்கே "குமாரி பெற்ற குமரன்" என்று குறிப்பிடுகிறார்.
சமர் என்றால் போர். போர்க்களத்தில் தன்னோடு பொருதும் தானவர்களை நாசம் செய்கின்றவனே! தானவர்கள் என்றால் அரக்கர்கள். கஸ்யபரின் மனைவிகளில் ஒருவளான தானை என்பவள் பெற்ற பிள்ளைகள் தானவர்கள் என்றும் கூறுவார்கள். போரிடுவதற்கு இறைவனுக்கு எதிரிகள் உண்டா? இல்லை. இறைவனுக்கு எதிரிகள் இருக்க முடியுமா? முடியாது. ஆனால் இறைவன் அடியார்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். தேவர்களைச் சிறையிட்ட சூரனால் முருகனைச் சிறையிட முடியுமா? இல்லை அப்படி நினைத்துப் பார்க்க முடியுமா? இறைவன் போர்க்கோலம் பூண்டிருப்பது அடியார்களின் பகையைத் தீர்க்க. திருஞான சம்பந்தர் தங்கியிருந்த சத்திரத்திற்கு நெருப்பு வைத்தார்கள். இறைவன் கருணை மழை பொழிந்தான். திருநாவுக்கரசை சுண்ணாம்புக் காளவாயிலில் இட்டார்கள். நீறு நீர்த்துப் போனது. அவரையே கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அலை தாலாட்டியது.
பட்டினத்தடிகளுக்கு அப்பத்தில் நஞ்சு வைத்தார்கள். அது வைத்தவர் வீட்டைப் பற்றியது. ஆக அடியவர்களுக்குத் துன்பம் வருகையில் போரிட்டு அழிப்பவன் இறைவன். இது எந்த மதத்திற்கும் பொருந்தும்.
இதே வரிக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். நம்மோடு போருக்கு வரும் காமம், வஞ்சகம், தீய எண்ணங்கள், மதம், மாச்சர்யங்கள் ஆகியவைகளை எதிர்த்துப் போரிட்டு அழித்து நம்மைக் காக்கும் வேலன் என்றும் கொள்ளலாம். நமக்குள் எழும் தீய எண்ணங்களை அழிப்பது எப்படி? மருந்து சாப்பிட வேண்டும். எந்த மருந்து? அருள் தரும் தமிழ்க் கந்த மருந்து. உள்ளேயிருக்கும் அழுக்குகளைப் போக்க வெளியே இருக்கும் மருந்து உள்ளே போக வேண்டும் அல்லவா. அதுபோல உள்ளத்தில் இருக்கும் தீயவை போக இறைவனை அந்த உள்ளத்தில் குடியேற்ற வேண்டும். தீயவை அகலும். தூயவை பெருகும்.
இப்பொழுது பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பார்க்கலாம். சற்று முதிர்ந்த வரிகள். "அமரும் பதிகேள் அகமாம்" என்பதை "அமரும் பதி, கேள், அகம்" என்று பிரிக்க வேண்டும். பதி என்றால் வாழும் ஊர். திருவிளையாடற் புராணம் மதுரையை மதுரையம்பதி என்று சிறப்பிக்கிறது. சிலப்பதிகாரத்திலும் இந்த சொல் கையாளப்பட்டுள்ளது. "நீ யார்?" என்று வினவிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விடையளிக்கையில் சொல்கிறார் கண்ணகி, "பெரும் பெயர்ப் புகார் என் பதியே." அமர்தல் என்றால் உட்கார்தல் அல்லது உறைதல். அமரும் பதி என்றால்? உட்காரும் கணவன் அல்ல. உறையும் ஊர். கேள் என்றால் வினவுவது எனலாம். ஆனால் இங்கே உறவுமுறைகளைக் குறிக்கும். "யாதும் ஊரே யாவும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனார் வாக்கை நினைவில் கொள்க.
அகம் என்றால் வீடு. எனது ஊர், எனது உறவுகள், எனது வீடு என்று கிறங்கும் மயக்கம். அதைத்தான் பிமரம் என்கிறார். பிரமை என்ற சொல் மருவிச் சிதைந்து இங்கே பிமரமானது. மனப் பிரமை என்றால் மன மயக்கம். அத்தகைய மயக்கம் கெட பேசியவா என்கிறார் முருகனை. முருகன் என்ன பேசினார்? மெய்ப் பொருள் பேசினார். உலகப் பற்றுகளோடு வாழ்ந்த அருணகிரி நாதருக்கு உபதேசம் பேசினார் முருகன். அந்த உபதேசத்தால் உலகப் பற்று போய் இறைப் பற்று வந்தது.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, March 13, 2006
8. வருகையிலும் போகையிலும்
முருகனிடத்தில் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். வேத நாயகனான ஈசன். பிறகு அருந்தமிழ் முனி அகத்தியர். கலியுகத்தில் அருணகிரிநாதர். இந்த மூவரில் முதலிருவரும் முருகனிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக நமக்கு எதுவும் உபதேசிக்கவில்லை. ஆனால் அருணகிரி இந்தப் பாடலில் வழியாக நமக்கு உபதேசிக்கிறார். உள்ளம் சஞ்சலப்படும் பொழுதெல்லாம் நினைக்கப்பட வேண்டிய பாடலிது.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே
மனமே முதலில் கெடுவது. எண்ணம் கெட்டபின் வண்ணம் கெடுகிறது. பிறகு தீய செயல்களைச் செய்யக் கூடாதென்ற திண்ணம் கெடுகிறது. வள்ளுவர் என்ன சொல்கிறார்?
ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பெற்ற தாயே பட்டினி கிடந்தாலும், அறிவில் சிறந்தவர்களால் தடுக்கப்பட்ட விலக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டுவது மனம். அதுதான் முதலில் திருந்த வேண்டும். நோயுண்டவர்களுக்கு பல உபாதைகள் இருக்கும். ஒவ்வொரு உபாதைக்கும் மருந்து கொடுப்பது முழுமையான பலனளிக்காது. நோயின் மூலகாரணத்திற்கு மருந்தளிப்பதே சாலச் சிறந்தது. ஆகையால்தான் தானும் கெட்டு தன்னையும் கெடுக்கும் மனத்தை அழைத்து உபதேசிக்கிறார் அருணகிரி. முருகனிடம் உபதேசம் கேட்டபிறகு அருணகிரியின் மனத்தில் அழுக்கிருந்திருக்குமா? இருந்திருக்காது. அவர் நமக்காகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தாய் உணவு உண்பது போல. அருணகிரிக்குத் தாயுள்ளம்.
மனத்திற்குச் சொல்கிறார். கெடும் மனமே, கதி கேள். உய்வுற்று வாழ்வதற்கான கதியைச் சொல்கிறேன் கேள். முதலில் கரவாது இடுவாய். இதைதான் ஔவை "அறம் செய விரும்பு" என்கிறார். வறியர்கள் வந்து கேட்டால் ஆனதைச் செய் என்கிறார். உலகிற்கு வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும். பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும். ஆகையால்தான் வள்ளுவரும் "வரியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என்கிறார்.
அப்படி ஏழைகளுக்கு ஈகையில் தோன்றும் செருக்கை அழிக்க வேண்டும். எப்படி? கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய். கொடுக்கும் பொழுது கந்தனைத் தொழுது கொடுக்க வேண்டும். நாமா கொடுக்கிறோம்? எல்லாம் அவனருள். ஆகையால் நமது கையால் கொடுத்தாலும் முருகன் திருவடியால் கொடுத்ததாக நினைக்க வேண்டும். இங்கே வடிவேல் இறைதாள் நினைவால் என்கிறார். அந்த கந்தனுடைய திருவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதற்கே காலமும் நேரமும் பத்தாது.
நெடுவேதனை தூள்படவே சுடுவாய். உலகில் உயிர்களுக்கான உண்மையாதென்றால் பிறப்பும் இறப்பும். இரண்டும் உயிர்களால் தீர்மானிக்கப் படுகிறவை அல்ல. இந்த இரண்டும் இறைவனின் தீர்மானங்கள். இப்படிப்பட்ட பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாமாக தீர்மானிப்பதாக நினைத்துக்கொண்டு எடுக்கும் சில பல முடிவுகளால் உண்டாகும் வேதனைகளைச் சுடுவேண்டும். சுட்டால்தான் திருநீறு. வேதனையைச் சுட்டால் நிம்மதி என்ற நீறு கிடைக்கும். விடுவாய் வினையாவையுமே. வினைகள் இரண்டு. நல்வினை மற்றும் தீவினை. நன்மை பயப்பது நல்வினை. தீமை பயப்பது தீவினை. நல்வினைகள் இறைவனின் கருணை. அதில் விட ஒன்றுமில்லை.
ஆனால் தீவினைகள்? இன்னா செய்யாமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். இன்னா செய்வதால் அடுத்தவர்க்கு மட்டுமே தீமை என்றில்லை. அது செய்கிறவர் மேலேயே திரும்பும். எப்படி தெரியுமா? "கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்" என்று பழமொழி நானூறு சொல்வதைப் போல. அடைத்து வைத்து அடித்தால், சொந்த நாயும் கூட ஒரு கட்டத்தில் கடித்துக் குதறிவிடுமாம். ஆக வினை விதைத்தவன் வினையறுப்பான். அந்த வினைகளை விட்டொழிக்க வேண்டும். அதன் தீவிரத்தை உணர்ந்தே "விடுவாய் விடுவாய்" என்று இரண்டு முறை கூறுகிறார் அருணகிரி.
அன்புடன்,
கோ.இராகவன்
கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே
மனமே முதலில் கெடுவது. எண்ணம் கெட்டபின் வண்ணம் கெடுகிறது. பிறகு தீய செயல்களைச் செய்யக் கூடாதென்ற திண்ணம் கெடுகிறது. வள்ளுவர் என்ன சொல்கிறார்?
ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பெற்ற தாயே பட்டினி கிடந்தாலும், அறிவில் சிறந்தவர்களால் தடுக்கப்பட்ட விலக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டுவது மனம். அதுதான் முதலில் திருந்த வேண்டும். நோயுண்டவர்களுக்கு பல உபாதைகள் இருக்கும். ஒவ்வொரு உபாதைக்கும் மருந்து கொடுப்பது முழுமையான பலனளிக்காது. நோயின் மூலகாரணத்திற்கு மருந்தளிப்பதே சாலச் சிறந்தது. ஆகையால்தான் தானும் கெட்டு தன்னையும் கெடுக்கும் மனத்தை அழைத்து உபதேசிக்கிறார் அருணகிரி. முருகனிடம் உபதேசம் கேட்டபிறகு அருணகிரியின் மனத்தில் அழுக்கிருந்திருக்குமா? இருந்திருக்காது. அவர் நமக்காகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தாய் உணவு உண்பது போல. அருணகிரிக்குத் தாயுள்ளம்.
மனத்திற்குச் சொல்கிறார். கெடும் மனமே, கதி கேள். உய்வுற்று வாழ்வதற்கான கதியைச் சொல்கிறேன் கேள். முதலில் கரவாது இடுவாய். இதைதான் ஔவை "அறம் செய விரும்பு" என்கிறார். வறியர்கள் வந்து கேட்டால் ஆனதைச் செய் என்கிறார். உலகிற்கு வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும். பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும். ஆகையால்தான் வள்ளுவரும் "வரியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என்கிறார்.
அப்படி ஏழைகளுக்கு ஈகையில் தோன்றும் செருக்கை அழிக்க வேண்டும். எப்படி? கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய். கொடுக்கும் பொழுது கந்தனைத் தொழுது கொடுக்க வேண்டும். நாமா கொடுக்கிறோம்? எல்லாம் அவனருள். ஆகையால் நமது கையால் கொடுத்தாலும் முருகன் திருவடியால் கொடுத்ததாக நினைக்க வேண்டும். இங்கே வடிவேல் இறைதாள் நினைவால் என்கிறார். அந்த கந்தனுடைய திருவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதற்கே காலமும் நேரமும் பத்தாது.
நெடுவேதனை தூள்படவே சுடுவாய். உலகில் உயிர்களுக்கான உண்மையாதென்றால் பிறப்பும் இறப்பும். இரண்டும் உயிர்களால் தீர்மானிக்கப் படுகிறவை அல்ல. இந்த இரண்டும் இறைவனின் தீர்மானங்கள். இப்படிப்பட்ட பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாமாக தீர்மானிப்பதாக நினைத்துக்கொண்டு எடுக்கும் சில பல முடிவுகளால் உண்டாகும் வேதனைகளைச் சுடுவேண்டும். சுட்டால்தான் திருநீறு. வேதனையைச் சுட்டால் நிம்மதி என்ற நீறு கிடைக்கும். விடுவாய் வினையாவையுமே. வினைகள் இரண்டு. நல்வினை மற்றும் தீவினை. நன்மை பயப்பது நல்வினை. தீமை பயப்பது தீவினை. நல்வினைகள் இறைவனின் கருணை. அதில் விட ஒன்றுமில்லை.
ஆனால் தீவினைகள்? இன்னா செய்யாமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். இன்னா செய்வதால் அடுத்தவர்க்கு மட்டுமே தீமை என்றில்லை. அது செய்கிறவர் மேலேயே திரும்பும். எப்படி தெரியுமா? "கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்" என்று பழமொழி நானூறு சொல்வதைப் போல. அடைத்து வைத்து அடித்தால், சொந்த நாயும் கூட ஒரு கட்டத்தில் கடித்துக் குதறிவிடுமாம். ஆக வினை விதைத்தவன் வினையறுப்பான். அந்த வினைகளை விட்டொழிக்க வேண்டும். அதன் தீவிரத்தை உணர்ந்தே "விடுவாய் விடுவாய்" என்று இரண்டு முறை கூறுகிறார் அருணகிரி.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, March 06, 2006
7. கல்லில் பதியுமா பாதம்
மிகவும் எளிமையான பாடல். ஆனால் மறைவான பொருள் கொண்டது. கல் போன்ற எனது மனதில் உனது தாமரைப் பாதங்கள் அரும்ப வேண்டுமே முருகா! பணி என்னவென்று வள்ளியின் பதம் பணியும் முருகனே! மோகம் குறையாத தயாபரனே!
திணியான மனோசிலை மீதுனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தனியா அதி மோக தயாபரனே
திணியான மனோசிலை என்றால் கடினமான கல் போன்ற மனம். சிலை என்பது கல்லைக் குறிக்கிறது இங்கே. மனோசிலை என்றால் மனமாகிய கல். எப்பேற்பட்ட சொல் நயம். அப்படிப்பட்ட கடினமான மனமாகிய கல்லின் மீது உனது தாமரைப் பாதங்கள் பதிவது என்று என்று கேட்கிறார் அருணகிரி. இந்த இடத்தில்தான் நன்றாகக் கவனிக்க வேண்டும். கல்லில் பூச்செடி முளைக்குமா? மண்ணில் முளைக்கும். சேற்றில் முளைக்கும். கல்லில் முளைக்குமா? கல்லில் செடி முளைத்தால் என்ன ஆகும்? கல் உடைந்து போகும். மனம் உடைந்து போகலாமா? அப்புறம் ஏன் அருணகிரி இப்படிக் கேட்கிறார்?
இளகிய கல்லில் செடி முளைக்கலாம்தானே! தங்கமும் வெள்ளியும் இருக்கிறது. அது அவ்வாறே இருந்தால் மணிகளைப் பொருத்துவது எங்ஙனம்? உலோகம் இளகினால் மணிகளையும் கற்களையும் பதிக்கலாம். அது போல தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்கள் பதிய வேண்டுமென்றால் மனம் இளக வேண்டும். இளகிய மனமே பாசத்தின் பாசறை. அந்தப் பாசறையே இறைவனின் கோயில். விளங்கியதா! தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று குறுந்தொகையும் கூறுகிறது. செந்திலாண்டர் செம்மையானவர். ஆகையால் அவரைச் சார்ந்ததெல்லாமே செம்மையானவை. பாரதம் பாடிய பெருந்தேவனார் குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதும் பொழுது குறிப்பிடுகிறார் "தாமரை புரையும் காமர் சேவடி" என்று.
இந்தப் பாடலில் மற்றொரு அழகும் உள்ளது. கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே பாதம் பதிய வேண்டும் என்று கேட்கிறார். கல் இளகவும் இறைவன் மனம் வைக்க வேண்டுமே! அதை எப்போது கேட்பது? அருணகிரி அறிவுகிரி அல்லவா! ஆகையால்தால் கந்தர் அநுபூதி தொடங்கும் பொழுதே நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்று பாடுகிறார். அங்கேயே கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. ஆகையால் இங்கே பதிந்தால் போதும். என்ன அற்புதமான வரிகள் இவை. நினைத்தாலே கண்ணீர் பெருகும் அருள் வரிகள்.
பாதம் பதிய வேண்டுமென்று யாரைக் கேட்கிறார் அருணகிரி? தயாபரனிடம். தயாபரன் என்றால் உதவும் உள்ளமுடையன் என்று பொருள். அதுவும் தணியா அதி மோக தயாபரனிடம் கேட்கிறார். தணியாத அதி மோகம். அடேங்கப்பா! எவ்வளவு உயர்வு நவிற்சி. மோகம் என்பது அளப்பறிய நாட்டம். அது எதன் மீதிலும் இருக்கலாம். மோகன், மோகினி என்றெல்லாம் பெயரிடுகிறார்களே குழந்தைகளுக்கு. அது காமம் மட்டும் என்ற பொருளைத் தருமானால் வைப்பார்களா? இந்த இடத்தில் அது கருணை அல்லது நாட்டம் என்று பொருள் படுகிறது.
பணியா என வள்ளி பதம் பணியும் தணியாத அதி மோக தயாபரனிடம் வேண்டுகிறார் அருணகிரி. வள்ளியம்மையிடம் பணி என்ன என்று தணியாத நாட்டத்தோடு முருகன் பணிந்தாரா? அனைவரும் பணியும் இறைவன் பணிவாரா? பணியா என்று வள்ளியம்மையானவள் பதம் பணியும் முருகனே என்று பொருள். கொல்லி மலை வாழும் முருகா என்றால் கொல்லி மலை முருகனோடு வாழ்கிறது என்றா பொருள்? முருகன் வாழும் கொல்லி மலை என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். தணியாத நாட்டத்தோடு உதவும் உள்ளத்தோடு இருக்கும் இறைவனை அனைவரும் பணிவார்கள். அவ்விதத்தில் வள்ளியம்மையும் பணியும் அந்தப் பதமானது இளகிய கல் மனதில் பதிய வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
திணியான மனோசிலை மீதுனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தனியா அதி மோக தயாபரனே
திணியான மனோசிலை என்றால் கடினமான கல் போன்ற மனம். சிலை என்பது கல்லைக் குறிக்கிறது இங்கே. மனோசிலை என்றால் மனமாகிய கல். எப்பேற்பட்ட சொல் நயம். அப்படிப்பட்ட கடினமான மனமாகிய கல்லின் மீது உனது தாமரைப் பாதங்கள் பதிவது என்று என்று கேட்கிறார் அருணகிரி. இந்த இடத்தில்தான் நன்றாகக் கவனிக்க வேண்டும். கல்லில் பூச்செடி முளைக்குமா? மண்ணில் முளைக்கும். சேற்றில் முளைக்கும். கல்லில் முளைக்குமா? கல்லில் செடி முளைத்தால் என்ன ஆகும்? கல் உடைந்து போகும். மனம் உடைந்து போகலாமா? அப்புறம் ஏன் அருணகிரி இப்படிக் கேட்கிறார்?
இளகிய கல்லில் செடி முளைக்கலாம்தானே! தங்கமும் வெள்ளியும் இருக்கிறது. அது அவ்வாறே இருந்தால் மணிகளைப் பொருத்துவது எங்ஙனம்? உலோகம் இளகினால் மணிகளையும் கற்களையும் பதிக்கலாம். அது போல தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்கள் பதிய வேண்டுமென்றால் மனம் இளக வேண்டும். இளகிய மனமே பாசத்தின் பாசறை. அந்தப் பாசறையே இறைவனின் கோயில். விளங்கியதா! தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று குறுந்தொகையும் கூறுகிறது. செந்திலாண்டர் செம்மையானவர். ஆகையால் அவரைச் சார்ந்ததெல்லாமே செம்மையானவை. பாரதம் பாடிய பெருந்தேவனார் குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதும் பொழுது குறிப்பிடுகிறார் "தாமரை புரையும் காமர் சேவடி" என்று.
இந்தப் பாடலில் மற்றொரு அழகும் உள்ளது. கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே பாதம் பதிய வேண்டும் என்று கேட்கிறார். கல் இளகவும் இறைவன் மனம் வைக்க வேண்டுமே! அதை எப்போது கேட்பது? அருணகிரி அறிவுகிரி அல்லவா! ஆகையால்தால் கந்தர் அநுபூதி தொடங்கும் பொழுதே நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்று பாடுகிறார். அங்கேயே கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. ஆகையால் இங்கே பதிந்தால் போதும். என்ன அற்புதமான வரிகள் இவை. நினைத்தாலே கண்ணீர் பெருகும் அருள் வரிகள்.
பாதம் பதிய வேண்டுமென்று யாரைக் கேட்கிறார் அருணகிரி? தயாபரனிடம். தயாபரன் என்றால் உதவும் உள்ளமுடையன் என்று பொருள். அதுவும் தணியா அதி மோக தயாபரனிடம் கேட்கிறார். தணியாத அதி மோகம். அடேங்கப்பா! எவ்வளவு உயர்வு நவிற்சி. மோகம் என்பது அளப்பறிய நாட்டம். அது எதன் மீதிலும் இருக்கலாம். மோகன், மோகினி என்றெல்லாம் பெயரிடுகிறார்களே குழந்தைகளுக்கு. அது காமம் மட்டும் என்ற பொருளைத் தருமானால் வைப்பார்களா? இந்த இடத்தில் அது கருணை அல்லது நாட்டம் என்று பொருள் படுகிறது.
பணியா என வள்ளி பதம் பணியும் தணியாத அதி மோக தயாபரனிடம் வேண்டுகிறார் அருணகிரி. வள்ளியம்மையிடம் பணி என்ன என்று தணியாத நாட்டத்தோடு முருகன் பணிந்தாரா? அனைவரும் பணியும் இறைவன் பணிவாரா? பணியா என்று வள்ளியம்மையானவள் பதம் பணியும் முருகனே என்று பொருள். கொல்லி மலை வாழும் முருகா என்றால் கொல்லி மலை முருகனோடு வாழ்கிறது என்றா பொருள்? முருகன் வாழும் கொல்லி மலை என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். தணியாத நாட்டத்தோடு உதவும் உள்ளத்தோடு இருக்கும் இறைவனை அனைவரும் பணிவார்கள். அவ்விதத்தில் வள்ளியம்மையும் பணியும் அந்தப் பதமானது இளகிய கல் மனதில் பதிய வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, February 27, 2006
6. எது வந்தால் எது போகும்
உலகத்தில் எத்தனை நல்லவர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களாலன்றோ இன்றும் மழை பெய்கிறது. கடலானது கரைக்குக் கட்டுப்படுகிறது. பூமியும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்தவர் குற்றங்களையும் தம்மேல் ஏற்றிக் கொண்டு அதற்கு வழி தேடுகின்ற அந்த நல்லவர்களால்தான் நாம் இன்னமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றோம். அருணகிரிநாதரும் அப்படிப்பட்ட நல்லவரே. உலகத்தில் மக்கள் எந்தத் தவறுகளைச் செய்கிறார்களோ அவைகளைத் தன் மேல் ஏற்றி, அவைகளிலிருந்து காக்கும்படி முருகனை வேண்டுகிறார். எப்படி வேண்டுகிறார்? அதுதான் இந்தப் பாடல்.
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்து மொழிந்திலனே
அகமாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே
கடைசி இரண்டு அடிகளைப் பாருங்கள். அகம் மாடு மடந்தையர் என்று அயரச் செய்யும் ஜெக(உலக) மாயையில் நின்று தயங்குவதோ! அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் மனைவி மக்கள். வீடு மனைவி மக்கள் போன்றவைகள் அயர்ச்சியைக் கொடுக்கும் மாயைகள். அம்மாயைகளில் உழன்று அவைகளிலேயே வீழ்ந்து போகவேண்டுமோ என்று வேதனைப் படுகிறார். பாரதியாரும் கூட சிவசக்தியைப் பாடுகையில் "நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ" என்று கதறுகிறார்.
மாயை அறிவை மயக்கக் கூடியது. சைவ சித்தாந்தம் சொல்லும் மும்மலங்கள் கருமம், ஆணவம் மற்றும் மாயை. இவற்றில் மாயைதான் மற்ற மலங்கள் தோன்ற ஆதாரம். மாயை விலகினால் அறிவு பெருகும். அறிவு பெருகினால் வீடு மனைவி மக்கள் எல்லாம் அயர்ச்சியைத் தரா! அதற்குத்தான் ஆண்டவனை வேண்டுகிறார் அருணகிரி. அவருக்காக அல்ல. என்றும் அநுபூதியைப் படிக்கும் அன்பர்களுக்காக. அருணகிரிக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். அவர் இங்கு பாடுவது இல்லறத்தை நல்லறமாக்காமல் துன்பத்தில் உழல்கின்றவர்களுக்கு.
மாயை களைய வல்லவர் யார்? ஒளி வந்தால் இருள் போகும். வளி (காற்று) வந்தால் வெக்கை போகும். தளி (உணவு) வந்தால் பசி போகும். அறிவு வந்தால் மாயை போகும். அறிவு மயமான கடவுள் யார்? வேல் ஞானத்தில் வடிவம். வேலவன் ஞான மயமானவன். மகமாயை களைந்திட வல்ல பிரான் என்று முருகனை அழைக்கிறார் அருணகிரி. அப்படி அன்போடு ஆறுமுகத்தை அழைத்ததும் மாயை விலகுமாம். வெளிச்சம் வருகையிலேயே இருள் விலகுவது போல இறைவனின் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் மாயை விலகுமாம்.
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்தது மாயை. இங்கே ஆறுமுகம் என்ற பெயரை பயன்படுத்துவதில்தான் சிறப்பு. ஆறுபக்கங்கள் கொண்ட கனசதுரம்(cuboid) எல்லாத் திசைகளையும் பார்க்க முடியுமல்லவா. அதுபோல ஆறு திசைகளிலும் மாயை சூழாமல் காக்க ஆறுமுகனே என்று அழைக்கின்றார். எத்தனை நுண்ணிய கருத்து பாருங்கள். முகம் ஆறும் நம்மைப் பார்க்க நமது துயர்களெல்லாம் ஆறும். ஆகவே எல்லோரும் ஆறுமுகனைத் தொழுது மாயை நீங்கப் பெற்று அறிவுமயமான வாழ்வு பெற்று உய்க.
பக்தியுடன்,
கோ.இராகவன்
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்து மொழிந்திலனே
அகமாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே
கடைசி இரண்டு அடிகளைப் பாருங்கள். அகம் மாடு மடந்தையர் என்று அயரச் செய்யும் ஜெக(உலக) மாயையில் நின்று தயங்குவதோ! அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் மனைவி மக்கள். வீடு மனைவி மக்கள் போன்றவைகள் அயர்ச்சியைக் கொடுக்கும் மாயைகள். அம்மாயைகளில் உழன்று அவைகளிலேயே வீழ்ந்து போகவேண்டுமோ என்று வேதனைப் படுகிறார். பாரதியாரும் கூட சிவசக்தியைப் பாடுகையில் "நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ" என்று கதறுகிறார்.
மாயை அறிவை மயக்கக் கூடியது. சைவ சித்தாந்தம் சொல்லும் மும்மலங்கள் கருமம், ஆணவம் மற்றும் மாயை. இவற்றில் மாயைதான் மற்ற மலங்கள் தோன்ற ஆதாரம். மாயை விலகினால் அறிவு பெருகும். அறிவு பெருகினால் வீடு மனைவி மக்கள் எல்லாம் அயர்ச்சியைத் தரா! அதற்குத்தான் ஆண்டவனை வேண்டுகிறார் அருணகிரி. அவருக்காக அல்ல. என்றும் அநுபூதியைப் படிக்கும் அன்பர்களுக்காக. அருணகிரிக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். அவர் இங்கு பாடுவது இல்லறத்தை நல்லறமாக்காமல் துன்பத்தில் உழல்கின்றவர்களுக்கு.
மாயை களைய வல்லவர் யார்? ஒளி வந்தால் இருள் போகும். வளி (காற்று) வந்தால் வெக்கை போகும். தளி (உணவு) வந்தால் பசி போகும். அறிவு வந்தால் மாயை போகும். அறிவு மயமான கடவுள் யார்? வேல் ஞானத்தில் வடிவம். வேலவன் ஞான மயமானவன். மகமாயை களைந்திட வல்ல பிரான் என்று முருகனை அழைக்கிறார் அருணகிரி. அப்படி அன்போடு ஆறுமுகத்தை அழைத்ததும் மாயை விலகுமாம். வெளிச்சம் வருகையிலேயே இருள் விலகுவது போல இறைவனின் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் மாயை விலகுமாம்.
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்தது மாயை. இங்கே ஆறுமுகம் என்ற பெயரை பயன்படுத்துவதில்தான் சிறப்பு. ஆறுபக்கங்கள் கொண்ட கனசதுரம்(cuboid) எல்லாத் திசைகளையும் பார்க்க முடியுமல்லவா. அதுபோல ஆறு திசைகளிலும் மாயை சூழாமல் காக்க ஆறுமுகனே என்று அழைக்கின்றார். எத்தனை நுண்ணிய கருத்து பாருங்கள். முகம் ஆறும் நம்மைப் பார்க்க நமது துயர்களெல்லாம் ஆறும். ஆகவே எல்லோரும் ஆறுமுகனைத் தொழுது மாயை நீங்கப் பெற்று அறிவுமயமான வாழ்வு பெற்று உய்க.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, February 20, 2006
5. வீழ வைப்பதும் வாழ வைப்பதும்
என்றைக்குமே நல்ல வழியில் செல்லும் பொழுதுதான் இடைஞ்சல் வரும். நல்ல சாலையில்தால் வேகத்தடை இருக்கும். மோசமான சாலையே வேகத்தடைதானே! தானம் செய்கிற இடத்தில்தான் அடிதடி நடக்கும். குழப்பமான இடத்திற்கு ஒருவரும் போகார். ஆகக்கூடி தெரிவதென்னவென்றால் நல்லது செய்கையில் இடர் வரும். அந்த இடரும் தொலைய முயன்றால் சுடர் வரும்.
வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூட் உரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே
"தானோ பொருளாவது சண்முகனே" என்று சரணடைய எண்ணுகையில் எத்தனையோ இடர்கள் வரும். அந்த இடர்கள் எப்படிப் பட்டவை? அதைத்தான் இந்தப் பாடலில் அருணகிரி நாதர் விளக்குகிறார். விறகுக்குள் நெருப்பு ஒளிந்திருப்பது போல இந்தப் பாடலில் பெரும் பொருள் ஒளிந்திருக்கிறது. அழுத்தித் தேய்க்கப்படும் விறகில் நெருப்பு வருவது போல, மனதை அழுத்திப் படித்தால் பொருள் விளங்கும்.
முருகனின் திருவடிகளை அடையத் தடைக்கற்களாக எவையெவை இருக்கின்றன? வளைபட்ட கை மாது முதலில் வருகிறாள். மாது என்றால் பொதுவாக பெண். ஆனால் வளைபட்ட கை மாதென்றால்? வளையல் அணிந்த கையுள்ள பெண்ணா? அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அருணகிரியார் இங்கு குறிப்பிடுவது இல்லறத் துணைவியாம் மனைவியை. கணவனின் அன்புக் கைகளில் வளைபட்ட மாது மனைவிதானே!
பிறகு வருகின்ற தடை மக்களால். மனைவி வழி வந்த மக்கள். பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்பது எத்தனை உண்மையான பேச்சு! தளை பட்டழியத் தகுமோ! தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்ற சொற்றொடரை நினைவிற் கொள்க. சில சொற்களை நேரடியாக பயன்படுத்தினால் தமிழர்களுக்கு விளக்கம் தெரியாது. ஆனால் அடைமொழியோடு பயன்படுத்த புரிந்து விடும். வளி என்றால் விழிப்பார்கள். சூறாவளி என்றால் தெரிந்து கொள்வார்கள். வளி என்றால் காற்று. அதுபோலத்தான் இங்கும். தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்றால் அடிமை விலங்கு.
மனைவி மக்கள் என்னும் அடிமை விலங்குகளால், முருகா, உன்னுடைய திருவடிகளை அடைய முடியாமல் நான் அழியத் தகுமோ என்று கதறுகிறார். அதுவும் தகுமோ தகுமோ என்று இரண்டு முறை இறைஞ்சுகிறார். அதிலிருந்தே அந்தத் தளைகளின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளலாம். மனைவி மக்கள் தடைகளா? இல்லையே. அப்படியானால் உலக இயக்கம் தொடர்வது எங்ஙனம்? இல்லறமல்லது நல்லறமன்று என்பது ஔவை வாக்கும். வள்ளூவரும் இல்லறத்தைச் சிறப்பிக்கின்றார். அப்படியிருக்க அருணகிரி இல்லறத்தைக் குறைத்துச் சொல்வாரா? மாட்டார். மனைவி மக்கள் மட்டுமே உயிர் என்று எண்ணும் எண்ணம்தான் தடை. அந்தத் தடைதான் அகல வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் "துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொள் மற்றையவர்கள் தவம்" என்கிறார்.
அடியவர்கள் பலரும் மனைவி மக்களோடு வாழ்ந்தவர்கள்தானே! இறைவனின் அருளைப் பெற்றவர்கள்தானே! அப்பூதியடிகள் மனைவி மக்களோடு நல்லறம் செய்தார். அதுதான் இல்லறம். தசரதனோ மனைவி மக்களோடு இல்லறம் செய்தானே தவிர நல்லறம் செய்யவில்லையாகையால் ஆண்டவனே மகனாகப் பிறந்ததாகக் கருதப்பட்டாலும் வீழ்ந்தான். ஆக மனைவி மக்கள் தளையல்ல. அந்த உறவுகளின் மேல் கொண்ட அன்பை மீறிய ஆசைதான் தளை. அன்பு தடையல்ல. ஆசைதான் தடை. அன்பிற்கு அடைக்கும் தாழில்லை. ஆசை என்பது விலங்கு. புத்தரும் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார். அன்பு வாழ வைக்கும். ஆசை வீழ வைக்கும். முருகன் அருள் எதிலிருந்தும் மீள வைக்கும்.
இத்தகைய அழிவிலிருந்து காக்கும்படி முருகனை வேண்டுகிறார். அதுவும் "தொடு வேலவனே" என்று அழைத்து. எதனால் தொட்டார் என்று நேரடியாகக் கூறவில்லை. ஆனாலும் கூறியிருக்கிறார். வேலவன் என்று அழைத்து அதைச் சொல்கிறார். சரி வேலால் எப்படித் தொட்டார்? துளை பட்டு உருவத் தொட்டார். துளை விழுந்து ஊடுருவிச் செல்லும் வகையில் வேலால் தொட்டார். பாருங்கள் இதை! வேலை வீசி எறியவில்லை. வேலைக் கொண்டு குத்தவில்லை. மாறாக தொட்டே அழித்தாராம். ஒளி வந்ததும் இருள் தானாக விலகுவது போல ஒரு இலகுவான அழிப்பு. அப்படி எதை அழித்தார்? கிளைப்படு எழுசூர் உரமும் கிரியும் அழிந்தது. சூர் என்று குறிப்பிடுவது துன்பத்தை. சூரன் துன்பஞ் செய்ததால் துன்பத்தையே சூரம் என்கிறார். அந்தத் துன்பமும் கிளைகள் விட்டு படர்ந்து எழுந் துன்பமாம். அப்படி துன்பம் தரத்தக்க வகையில் உரமுடன் எழுந்த கிரி(மலை) கிரவுஞ்ச மலை. அந்த மலையை வேலால் தொட்டுத் துளைத்தழித்த வேலவனே, உன்னை அடைய விடாது தடுக்கும் தளைகளிலிருந்து காப்பாற்றுவாய்!
அன்புடன்,
கோ.இராகவன்
வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூட் உரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே
"தானோ பொருளாவது சண்முகனே" என்று சரணடைய எண்ணுகையில் எத்தனையோ இடர்கள் வரும். அந்த இடர்கள் எப்படிப் பட்டவை? அதைத்தான் இந்தப் பாடலில் அருணகிரி நாதர் விளக்குகிறார். விறகுக்குள் நெருப்பு ஒளிந்திருப்பது போல இந்தப் பாடலில் பெரும் பொருள் ஒளிந்திருக்கிறது. அழுத்தித் தேய்க்கப்படும் விறகில் நெருப்பு வருவது போல, மனதை அழுத்திப் படித்தால் பொருள் விளங்கும்.
முருகனின் திருவடிகளை அடையத் தடைக்கற்களாக எவையெவை இருக்கின்றன? வளைபட்ட கை மாது முதலில் வருகிறாள். மாது என்றால் பொதுவாக பெண். ஆனால் வளைபட்ட கை மாதென்றால்? வளையல் அணிந்த கையுள்ள பெண்ணா? அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அருணகிரியார் இங்கு குறிப்பிடுவது இல்லறத் துணைவியாம் மனைவியை. கணவனின் அன்புக் கைகளில் வளைபட்ட மாது மனைவிதானே!
பிறகு வருகின்ற தடை மக்களால். மனைவி வழி வந்த மக்கள். பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்பது எத்தனை உண்மையான பேச்சு! தளை பட்டழியத் தகுமோ! தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்ற சொற்றொடரை நினைவிற் கொள்க. சில சொற்களை நேரடியாக பயன்படுத்தினால் தமிழர்களுக்கு விளக்கம் தெரியாது. ஆனால் அடைமொழியோடு பயன்படுத்த புரிந்து விடும். வளி என்றால் விழிப்பார்கள். சூறாவளி என்றால் தெரிந்து கொள்வார்கள். வளி என்றால் காற்று. அதுபோலத்தான் இங்கும். தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்றால் அடிமை விலங்கு.
மனைவி மக்கள் என்னும் அடிமை விலங்குகளால், முருகா, உன்னுடைய திருவடிகளை அடைய முடியாமல் நான் அழியத் தகுமோ என்று கதறுகிறார். அதுவும் தகுமோ தகுமோ என்று இரண்டு முறை இறைஞ்சுகிறார். அதிலிருந்தே அந்தத் தளைகளின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளலாம். மனைவி மக்கள் தடைகளா? இல்லையே. அப்படியானால் உலக இயக்கம் தொடர்வது எங்ஙனம்? இல்லறமல்லது நல்லறமன்று என்பது ஔவை வாக்கும். வள்ளூவரும் இல்லறத்தைச் சிறப்பிக்கின்றார். அப்படியிருக்க அருணகிரி இல்லறத்தைக் குறைத்துச் சொல்வாரா? மாட்டார். மனைவி மக்கள் மட்டுமே உயிர் என்று எண்ணும் எண்ணம்தான் தடை. அந்தத் தடைதான் அகல வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் "துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொள் மற்றையவர்கள் தவம்" என்கிறார்.
அடியவர்கள் பலரும் மனைவி மக்களோடு வாழ்ந்தவர்கள்தானே! இறைவனின் அருளைப் பெற்றவர்கள்தானே! அப்பூதியடிகள் மனைவி மக்களோடு நல்லறம் செய்தார். அதுதான் இல்லறம். தசரதனோ மனைவி மக்களோடு இல்லறம் செய்தானே தவிர நல்லறம் செய்யவில்லையாகையால் ஆண்டவனே மகனாகப் பிறந்ததாகக் கருதப்பட்டாலும் வீழ்ந்தான். ஆக மனைவி மக்கள் தளையல்ல. அந்த உறவுகளின் மேல் கொண்ட அன்பை மீறிய ஆசைதான் தளை. அன்பு தடையல்ல. ஆசைதான் தடை. அன்பிற்கு அடைக்கும் தாழில்லை. ஆசை என்பது விலங்கு. புத்தரும் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார். அன்பு வாழ வைக்கும். ஆசை வீழ வைக்கும். முருகன் அருள் எதிலிருந்தும் மீள வைக்கும்.
இத்தகைய அழிவிலிருந்து காக்கும்படி முருகனை வேண்டுகிறார். அதுவும் "தொடு வேலவனே" என்று அழைத்து. எதனால் தொட்டார் என்று நேரடியாகக் கூறவில்லை. ஆனாலும் கூறியிருக்கிறார். வேலவன் என்று அழைத்து அதைச் சொல்கிறார். சரி வேலால் எப்படித் தொட்டார்? துளை பட்டு உருவத் தொட்டார். துளை விழுந்து ஊடுருவிச் செல்லும் வகையில் வேலால் தொட்டார். பாருங்கள் இதை! வேலை வீசி எறியவில்லை. வேலைக் கொண்டு குத்தவில்லை. மாறாக தொட்டே அழித்தாராம். ஒளி வந்ததும் இருள் தானாக விலகுவது போல ஒரு இலகுவான அழிப்பு. அப்படி எதை அழித்தார்? கிளைப்படு எழுசூர் உரமும் கிரியும் அழிந்தது. சூர் என்று குறிப்பிடுவது துன்பத்தை. சூரன் துன்பஞ் செய்ததால் துன்பத்தையே சூரம் என்கிறார். அந்தத் துன்பமும் கிளைகள் விட்டு படர்ந்து எழுந் துன்பமாம். அப்படி துன்பம் தரத்தக்க வகையில் உரமுடன் எழுந்த கிரி(மலை) கிரவுஞ்ச மலை. அந்த மலையை வேலால் தொட்டுத் துளைத்தழித்த வேலவனே, உன்னை அடைய விடாது தடுக்கும் தளைகளிலிருந்து காப்பாற்றுவாய்!
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, February 13, 2006
4. எங்கே எனச் சொல்வேன்
வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்டவிடம்
தானோ பொருளாவது சண்முகனே
இந்தப் பாடலும் சிறப்பான பாடலே! சென்ற பாடலின் தொடர்ச்சியும் கூட. சென்ற பாடலில் "நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே" என்று கேட்கிறார் அருணகிரி. அந்த நலம் எத்தகையது என்பதையும் பார்த்தோம். அப்படிச் சொன்ன நலத்தை எங்கே வைத்துச் சொன்னார் என்று இந்தப் பாடலில் பார்ப்போம்.
ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும். தொழுகையை புனிதத் தலங்களில் சொல்ல வேண்டும். ஆனால் இங்கே சொல்ல வேண்டியவர் முருகன். சொல்லப் பட வேண்டியதோ "என்னை இழந்த நலம்". எங்கே சொல்வது? முருகனுக்கான இடமெது? அதைத்தான் இந்தப் பாடலில் சொல்கிறார் அருணகிரி.
"வானோ? புனலோ (நீர்நிலை)? மண்ணோ? நெருப்போ? தென்றலோ (காற்று)? பஞ்ச பூதங்களாலும் ஆனது உலகம். பஞ்சபூதங்களையும் குறிப்பிட்டாயிற்று. அவற்றைப் படைத்தவன் இறைவன். ஆகையால் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டவன். சரி. வேறு எங்கு? ஞானம் என்று எல்லோராலும் கொண்டாடப் படும் அறிவு உதயமாகும் இடமா? மண்ணோரும் விண்ணோரும் மற்றும் எல்லோரும் போற்றும் நான்கு மறைகளிலுமா (வேதம்)? என்னிடமா? என் மனதிலா? இல்லை என்னை அட்கொண்ட இடத்திலா? (அருணகிரியை முருகப் பெருமான் அட்கொண்ட இடம் திருவண்ணாமலை.) இல்லை. இல்லை. இறைவா நீ அனைத்தையும் கடந்தவன்." ஆக அருணகிரியால் முடிவு செய்ய முடியவில்லை. ஆகையால் ஆறுமுகனிடமே அந்தப் பொறுப்பை விட்டு விடுகிறார்.
இதைத்தான் "விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர்" என்று சொல்வார்கள். காரணம். சொல்லைப் படைத்த இறைவன் சொல்லில் அடங்குவானா? சொல்லில் அடங்குவானாயின் சொல்லைப் படைத்திருப்பானா? இருந்தும் ஏன் அறிஞர் பெருமக்கள் செய்யுள்களிலும் உரைநடைகளிலும் அவனைப் பற்றி எழுதுகிறார்கள்? அது நமக்காக! பெரியாரைத் துணைக்கோடல் என்று வள்ளுவர் சொல்வது போல, அந்தப் பெரியவர்களின் எழுத்தைப் பற்றி நாமும் முன்னேற வேண்டும். அதற்காகத்தான்.
பெரியவர்கள் என்றும் அடுத்தவர்கள் நலனைத்தான் நினைப்பார்கள். திருமுருகாற்றுப்படையைத் தொடங்கும் பொழுது நக்கீரர் "உலகம் உவப்ப" என்றுதான் தொடங்குகிறார். கந்த புராணத்திலும் கச்சியப்பர் "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்று கூறுகிறார். கம்பரும் ராமயணத்தை "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்றே துவக்குகிறார். சேக்கிழாரும் "உலகெலாம் உணர்ந்து ஓத" என்றுதான் பெரிய புராணத்தைத் தொடங்கினார்.
அருணகிரியும் அப்படித்தான் அனைத்தையும் கடந்த இறைவனை நாம் அறியத்தக்க வகையில் சொல்லில் காண்பிக்கிறார். அதுவும் ஒரு கட்டத்தில் முடியாமல் போய் "பொருளாவது சண்முகமே" என்று முடிக்கிறார்.
இந்தப் பாடலைப் பற்றிச் சொல்கையில் ஒரு கந்தலரங்காரப் பாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். அதுவும் அருணகிரி எழுதியதே!
தேனென்று பாகென்று உவமிக் கொணாமொழித் தெய்வவள்ளிக்
கொனென்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே!
இந்தப் பாடலுக்கு விளக்கம் சொன்னால் அதுவும் பெரிதாகப் போகும். ஆகையால் வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வோம். வானன்று. காலன்று. அப்படியென்றால்? கால் என்றால் காற்று. காலதர் என்றால் ஜன்னல். இந்த காலதர் என்ற சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். பல தமிழ் நூல்களில் காற்றுக்கு மாற்றாக காலைப் பயன்படுத்தியுள்ளார்கள். தீயன்று. நீரன்று. மண்ணுமன்று. ஐந்து பூதங்களும் முடிந்து விட்டன. வேறென்ன இருக்கின்றன. தானும் நானும். இந்த இரண்டும் கிடையாது. வேறு எவையெவை?
இருப்பவைகளை எல்லாம் இரண்டு வகைகளில் அடக்கி விடலாம். ஒன்று சரீரி. மற்றொன்று அசரீரி. சரீரி என்றால் உருவம் உள்ளவை. அசரீரி என்றால் உருவமில்லாதவை. எதையும் இந்த இரண்டையும் அடக்கி விடலாம். ஆனால் இறைவனை? அவன் அனைத்தும் கடந்தவன் அல்லவா. இதே கருத்தைத்தான் கந்தர் அநுபூதியிலும் கூறியுள்ளார் அருணகிரி. என்னடா ஒரே விஷயத்தைத்தானெ பல பெயர்களில் தருகிறார் இந்த அருணகிரி என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவை. படிக்கப் படிக்க புரியும். எளிமையாச் சொல்கிறேன். எல்லாம் புளிக் குழம்புதான். ஆனால் வெண்டைக்காய், கத்தரிக்காய், சேனக்கிழங்கு, வெங்காயம் என்று சேர்க்கின்ற பொருளுக்குத் தக்க புளிக்குழம்பு மாறுவது போலத்தான் இங்கும். எல்லாம் முருகனின் புகழ்தான் பாடும். ஒன்று அலங்காரம் செய்யும். ஒன்று அநுபூதி கொடுக்கும். ஒன்று கவசமாகும். அவ்வளவே!
அன்புடன்,
கோ.இராகவன்
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்டவிடம்
தானோ பொருளாவது சண்முகனே
இந்தப் பாடலும் சிறப்பான பாடலே! சென்ற பாடலின் தொடர்ச்சியும் கூட. சென்ற பாடலில் "நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே" என்று கேட்கிறார் அருணகிரி. அந்த நலம் எத்தகையது என்பதையும் பார்த்தோம். அப்படிச் சொன்ன நலத்தை எங்கே வைத்துச் சொன்னார் என்று இந்தப் பாடலில் பார்ப்போம்.
ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும். தொழுகையை புனிதத் தலங்களில் சொல்ல வேண்டும். ஆனால் இங்கே சொல்ல வேண்டியவர் முருகன். சொல்லப் பட வேண்டியதோ "என்னை இழந்த நலம்". எங்கே சொல்வது? முருகனுக்கான இடமெது? அதைத்தான் இந்தப் பாடலில் சொல்கிறார் அருணகிரி.
"வானோ? புனலோ (நீர்நிலை)? மண்ணோ? நெருப்போ? தென்றலோ (காற்று)? பஞ்ச பூதங்களாலும் ஆனது உலகம். பஞ்சபூதங்களையும் குறிப்பிட்டாயிற்று. அவற்றைப் படைத்தவன் இறைவன். ஆகையால் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டவன். சரி. வேறு எங்கு? ஞானம் என்று எல்லோராலும் கொண்டாடப் படும் அறிவு உதயமாகும் இடமா? மண்ணோரும் விண்ணோரும் மற்றும் எல்லோரும் போற்றும் நான்கு மறைகளிலுமா (வேதம்)? என்னிடமா? என் மனதிலா? இல்லை என்னை அட்கொண்ட இடத்திலா? (அருணகிரியை முருகப் பெருமான் அட்கொண்ட இடம் திருவண்ணாமலை.) இல்லை. இல்லை. இறைவா நீ அனைத்தையும் கடந்தவன்." ஆக அருணகிரியால் முடிவு செய்ய முடியவில்லை. ஆகையால் ஆறுமுகனிடமே அந்தப் பொறுப்பை விட்டு விடுகிறார்.
இதைத்தான் "விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர்" என்று சொல்வார்கள். காரணம். சொல்லைப் படைத்த இறைவன் சொல்லில் அடங்குவானா? சொல்லில் அடங்குவானாயின் சொல்லைப் படைத்திருப்பானா? இருந்தும் ஏன் அறிஞர் பெருமக்கள் செய்யுள்களிலும் உரைநடைகளிலும் அவனைப் பற்றி எழுதுகிறார்கள்? அது நமக்காக! பெரியாரைத் துணைக்கோடல் என்று வள்ளுவர் சொல்வது போல, அந்தப் பெரியவர்களின் எழுத்தைப் பற்றி நாமும் முன்னேற வேண்டும். அதற்காகத்தான்.
பெரியவர்கள் என்றும் அடுத்தவர்கள் நலனைத்தான் நினைப்பார்கள். திருமுருகாற்றுப்படையைத் தொடங்கும் பொழுது நக்கீரர் "உலகம் உவப்ப" என்றுதான் தொடங்குகிறார். கந்த புராணத்திலும் கச்சியப்பர் "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்று கூறுகிறார். கம்பரும் ராமயணத்தை "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்றே துவக்குகிறார். சேக்கிழாரும் "உலகெலாம் உணர்ந்து ஓத" என்றுதான் பெரிய புராணத்தைத் தொடங்கினார்.
அருணகிரியும் அப்படித்தான் அனைத்தையும் கடந்த இறைவனை நாம் அறியத்தக்க வகையில் சொல்லில் காண்பிக்கிறார். அதுவும் ஒரு கட்டத்தில் முடியாமல் போய் "பொருளாவது சண்முகமே" என்று முடிக்கிறார்.
இந்தப் பாடலைப் பற்றிச் சொல்கையில் ஒரு கந்தலரங்காரப் பாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். அதுவும் அருணகிரி எழுதியதே!
தேனென்று பாகென்று உவமிக் கொணாமொழித் தெய்வவள்ளிக்
கொனென்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே!
இந்தப் பாடலுக்கு விளக்கம் சொன்னால் அதுவும் பெரிதாகப் போகும். ஆகையால் வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வோம். வானன்று. காலன்று. அப்படியென்றால்? கால் என்றால் காற்று. காலதர் என்றால் ஜன்னல். இந்த காலதர் என்ற சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். பல தமிழ் நூல்களில் காற்றுக்கு மாற்றாக காலைப் பயன்படுத்தியுள்ளார்கள். தீயன்று. நீரன்று. மண்ணுமன்று. ஐந்து பூதங்களும் முடிந்து விட்டன. வேறென்ன இருக்கின்றன. தானும் நானும். இந்த இரண்டும் கிடையாது. வேறு எவையெவை?
இருப்பவைகளை எல்லாம் இரண்டு வகைகளில் அடக்கி விடலாம். ஒன்று சரீரி. மற்றொன்று அசரீரி. சரீரி என்றால் உருவம் உள்ளவை. அசரீரி என்றால் உருவமில்லாதவை. எதையும் இந்த இரண்டையும் அடக்கி விடலாம். ஆனால் இறைவனை? அவன் அனைத்தும் கடந்தவன் அல்லவா. இதே கருத்தைத்தான் கந்தர் அநுபூதியிலும் கூறியுள்ளார் அருணகிரி. என்னடா ஒரே விஷயத்தைத்தானெ பல பெயர்களில் தருகிறார் இந்த அருணகிரி என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவை. படிக்கப் படிக்க புரியும். எளிமையாச் சொல்கிறேன். எல்லாம் புளிக் குழம்புதான். ஆனால் வெண்டைக்காய், கத்தரிக்காய், சேனக்கிழங்கு, வெங்காயம் என்று சேர்க்கின்ற பொருளுக்குத் தக்க புளிக்குழம்பு மாறுவது போலத்தான் இங்கும். எல்லாம் முருகனின் புகழ்தான் பாடும். ஒன்று அலங்காரம் செய்யும். ஒன்று அநுபூதி கொடுக்கும். ஒன்று கவசமாகும். அவ்வளவே!
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, February 06, 2006
3. பற்றை வைத்துப் பற்றைப் போக்க
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே
இந்தச் செய்யுள் மிகவும் சிறப்பான செய்யுள். உரிக்க உரிக்க தாள் தரும் வெங்காயம் போல, படிக்கப் படிக்க பல பொருள் தரும் அருமையான செய்யுள் இது. கற்றறிந்த பெரியவர்களிடம் கேட்டால் சுகமாகச் சொல்வார்கள். நான் படித்தவைகளை வைத்துப் பொருள் கூறுகிறேன். இந்தச் செய்யுளில் கீழிருந்து மேலாகச் செல்லலாம்.
சுர பூபதியே! வடமொழியில் எதிர்ப்பதச் சொல் வேண்டுமெனில் அகரத்தை முதலெழுத்தாகச் சேர்த்துவிடுவார்கள். ஞானம். அஞ்ஞானம். பாக்யம். அபாக்யம். சுரர். அசுரர். என்றெல்லாம் வரும். காலப் போக்கில் தமிழிலும் அதன் தாக்கம் வந்தது. நீதி. அநீதி. கிரமம். அக்கிரமம். என்றெல்லாம் சொல்லிக் கொள்ளத் தொடங்கினோம். இவைகளும் தமிழ்ச் சொற்கள் அன்று.
அசுரர்களுக்கு எதிர்ப்பதம் சுரர். அதாவது தேவர்கள். அவர்களுக்குத் தலைவனே என்று அழைக்கிறார். சுரபதியே என்று சொன்னாலே போதும். பதி என்றால் தலைவன். பூ(மி) என்றால் உலகம். பூபதியே என்றால் உலகத் தலைவன். அனைத்து உலகங்களும் தேவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவை. அப்படிப் பட்ட தேவர்களின் உலகங்களுக்கே தலைவனாக விளங்குகின்றவனே என்று அழைக்கிறார் அருணகிரி. அதாவது தேவர்களுக்கு மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த அனைத்திற்கும் தலைவன் அவனே என்பது கருத்து.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கின்றேன் கேளுங்கள். மேலதிகாரி இருக்கின்றார். அவருக்குக் கீழே பல கிளையதிகாரிகள். கிளையதிகாரியின் நிர்வாகத்தைப் பார்வையிடக் கிளையலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கே மேலதிகாரிக்குத் தனி நாற்காலி கிடையாது. ஆனால் கிளையதிகாரி தனது நாற்காலியைத் தருவார். கிளையதிகாரி பயன்படுத்திய மேசையை மேலதிகாரி பயன்படுத்துவார். கிளையதிகாரிக்குக் கீழே பணிபுரிகின்றவர்களும் இப்பொழுது மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டவர்கள். அது போலத்தான் தேவர்கள் மட்டுமல்ல அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துமே முருகப் பெருமானின் சொத்து.
சுர பூபதியே என்று அழைத்து என்ன கேட்கிறார்? நலம் சொல்லாய் முருகா என்று கேட்கிறார். அதாவது நலம் கொடுக்க வேண்டுகிறார். அதுவும் எப்படிப் பட்ட நலம்! எல்லாம் அற என்னை இழந்த நலம். மிகவும் செறிவுள்ள சொற்றொடர் இது. ஆழ்ந்து படித்தால் புரியும்.
பற்று நீங்கினால் பற்றற்றவனின் காலைப் பற்றலாம். புறப்பற்று அகப்பற்று என்று பற்றுகள் இரண்டு. எல்லாம் என்பது புறப்பற்று. என்னை என்பது அகப்பற்று. எல்லாம் அற என்றால் அனைத்துப் புறப்பற்றுகளும் அறுக்கப்பட வேண்டும் என்கிறார். என்னை என்பது அகங்காரம். நான் என்பது அது. அதை இழக்க வேண்டும். அப்படிப் பற்றுகளை நீக்க நல்வாக்கு தருவாய் முருகா என்கிறார்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" என்கிறார் வள்ளுவர்.
அதாவது, பற்றுகளை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பற்றுகளை ஒழித்துவிடாது. அதற்கு பற்றுகளே இல்லாத ஒருவரைப் பற்ற வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல. இதே கருத்தைத்தான் அருணகிரியும் அநுபூதியில் கையாண்டுள்ளார். "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்ற வரியை இப்போது சொல்லிப் பாருங்கள் பொருள் விளங்கும்.
இதில் மற்றொரு மறைபொருள் உள்ளது. புறம் என்றால் வெளியே. அகம் என்றால் உள்ளே. கடவுள் என்றால் என்ன? நம்மையெல்லாம் கடந்து எல்லாவற்றிலும் (எல்லாம்-புறம்) நிறைந்து, நமக்குள்ளும் (நான்,நமது-அகம்) உறைந்தவன். கட(ந்து) உள்(ளே உறைந்தவன்) கடவுள். உள்ளேயும் வெளியேயும் உள்ள பற்று போக வேண்டும். ஆற்றலை அளிக்க முடியாது. Newton's law. மாறாக மாற்றலாம். ஆக இந்தப் பற்றுகளை நீக்குவதற்கு பதிலாக உள்ளும் புறமும் நிறைந்த கடவுளின் மீதுள்ள பற்றாக மாற்ற வேண்டும்.
முதலிரண்டு அடிகளை இப்போது பார்க்கலாம். உல்லாச நிராகுல யோக இத சல்லாபனும் நீ அலையோ! இது பாராட்டு. முருகனின் பல பண்புகளைப் பாராட்டுகிறார். ஒன்றைக் கேட்கும் முன்னம், கொடுப்பவரைப் புகழ்ந்து கூறி, இதைக் கொடு என்று கேட்பதுதானே வழக்கம். பற்றுகளை ஒழிக்கும் படி கேட்குமுன்னர், முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி.
உல்லாசம் என்றால் நிலையில் மாறுபாடில்லாதவன் என்று பொருள். எந்நிலையிலும் எந்த மாற்றமும் இல்லாதவன் இறைவன். அவனால் எல்லாம் மாற்றப்படும். ஆனால் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை. நிராகுலன் என்றால் துன்பமில்லாதவன் என்று பொருள். நல்ல அருமையான வடமொழிப் பெயர். குழந்தைகளுக்கும் வைக்கலாம். யோகம். யோக வடிவானவன் என்று பொருள். இதமானவன். சல்லாபம் என்றால் பேசுதல். விநோதமென்றால் செய்தல். யோகமாகிய இதத்தைப் பற்றிப் பேசவும் செய்யவும் கூடியவன் முருகன் அல்லவா! இந்த இரண்டு அடிகளுக்கு இன்னும் பல பொருட்கள் உள்ளன. சொல்லக் குறைவிலாதவை. இப்போது நான்கு அடிகளையும் சேர்த்துப் படியுங்கள். எல்லாம் புரியும்.
அன்புடன்,
கோ.இராகவன்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே
இந்தச் செய்யுள் மிகவும் சிறப்பான செய்யுள். உரிக்க உரிக்க தாள் தரும் வெங்காயம் போல, படிக்கப் படிக்க பல பொருள் தரும் அருமையான செய்யுள் இது. கற்றறிந்த பெரியவர்களிடம் கேட்டால் சுகமாகச் சொல்வார்கள். நான் படித்தவைகளை வைத்துப் பொருள் கூறுகிறேன். இந்தச் செய்யுளில் கீழிருந்து மேலாகச் செல்லலாம்.
சுர பூபதியே! வடமொழியில் எதிர்ப்பதச் சொல் வேண்டுமெனில் அகரத்தை முதலெழுத்தாகச் சேர்த்துவிடுவார்கள். ஞானம். அஞ்ஞானம். பாக்யம். அபாக்யம். சுரர். அசுரர். என்றெல்லாம் வரும். காலப் போக்கில் தமிழிலும் அதன் தாக்கம் வந்தது. நீதி. அநீதி. கிரமம். அக்கிரமம். என்றெல்லாம் சொல்லிக் கொள்ளத் தொடங்கினோம். இவைகளும் தமிழ்ச் சொற்கள் அன்று.
அசுரர்களுக்கு எதிர்ப்பதம் சுரர். அதாவது தேவர்கள். அவர்களுக்குத் தலைவனே என்று அழைக்கிறார். சுரபதியே என்று சொன்னாலே போதும். பதி என்றால் தலைவன். பூ(மி) என்றால் உலகம். பூபதியே என்றால் உலகத் தலைவன். அனைத்து உலகங்களும் தேவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவை. அப்படிப் பட்ட தேவர்களின் உலகங்களுக்கே தலைவனாக விளங்குகின்றவனே என்று அழைக்கிறார் அருணகிரி. அதாவது தேவர்களுக்கு மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த அனைத்திற்கும் தலைவன் அவனே என்பது கருத்து.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கின்றேன் கேளுங்கள். மேலதிகாரி இருக்கின்றார். அவருக்குக் கீழே பல கிளையதிகாரிகள். கிளையதிகாரியின் நிர்வாகத்தைப் பார்வையிடக் கிளையலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கே மேலதிகாரிக்குத் தனி நாற்காலி கிடையாது. ஆனால் கிளையதிகாரி தனது நாற்காலியைத் தருவார். கிளையதிகாரி பயன்படுத்திய மேசையை மேலதிகாரி பயன்படுத்துவார். கிளையதிகாரிக்குக் கீழே பணிபுரிகின்றவர்களும் இப்பொழுது மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டவர்கள். அது போலத்தான் தேவர்கள் மட்டுமல்ல அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துமே முருகப் பெருமானின் சொத்து.
சுர பூபதியே என்று அழைத்து என்ன கேட்கிறார்? நலம் சொல்லாய் முருகா என்று கேட்கிறார். அதாவது நலம் கொடுக்க வேண்டுகிறார். அதுவும் எப்படிப் பட்ட நலம்! எல்லாம் அற என்னை இழந்த நலம். மிகவும் செறிவுள்ள சொற்றொடர் இது. ஆழ்ந்து படித்தால் புரியும்.
பற்று நீங்கினால் பற்றற்றவனின் காலைப் பற்றலாம். புறப்பற்று அகப்பற்று என்று பற்றுகள் இரண்டு. எல்லாம் என்பது புறப்பற்று. என்னை என்பது அகப்பற்று. எல்லாம் அற என்றால் அனைத்துப் புறப்பற்றுகளும் அறுக்கப்பட வேண்டும் என்கிறார். என்னை என்பது அகங்காரம். நான் என்பது அது. அதை இழக்க வேண்டும். அப்படிப் பற்றுகளை நீக்க நல்வாக்கு தருவாய் முருகா என்கிறார்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" என்கிறார் வள்ளுவர்.
அதாவது, பற்றுகளை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பற்றுகளை ஒழித்துவிடாது. அதற்கு பற்றுகளே இல்லாத ஒருவரைப் பற்ற வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல. இதே கருத்தைத்தான் அருணகிரியும் அநுபூதியில் கையாண்டுள்ளார். "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்ற வரியை இப்போது சொல்லிப் பாருங்கள் பொருள் விளங்கும்.
இதில் மற்றொரு மறைபொருள் உள்ளது. புறம் என்றால் வெளியே. அகம் என்றால் உள்ளே. கடவுள் என்றால் என்ன? நம்மையெல்லாம் கடந்து எல்லாவற்றிலும் (எல்லாம்-புறம்) நிறைந்து, நமக்குள்ளும் (நான்,நமது-அகம்) உறைந்தவன். கட(ந்து) உள்(ளே உறைந்தவன்) கடவுள். உள்ளேயும் வெளியேயும் உள்ள பற்று போக வேண்டும். ஆற்றலை அளிக்க முடியாது. Newton's law. மாறாக மாற்றலாம். ஆக இந்தப் பற்றுகளை நீக்குவதற்கு பதிலாக உள்ளும் புறமும் நிறைந்த கடவுளின் மீதுள்ள பற்றாக மாற்ற வேண்டும்.
முதலிரண்டு அடிகளை இப்போது பார்க்கலாம். உல்லாச நிராகுல யோக இத சல்லாபனும் நீ அலையோ! இது பாராட்டு. முருகனின் பல பண்புகளைப் பாராட்டுகிறார். ஒன்றைக் கேட்கும் முன்னம், கொடுப்பவரைப் புகழ்ந்து கூறி, இதைக் கொடு என்று கேட்பதுதானே வழக்கம். பற்றுகளை ஒழிக்கும் படி கேட்குமுன்னர், முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி.
உல்லாசம் என்றால் நிலையில் மாறுபாடில்லாதவன் என்று பொருள். எந்நிலையிலும் எந்த மாற்றமும் இல்லாதவன் இறைவன். அவனால் எல்லாம் மாற்றப்படும். ஆனால் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை. நிராகுலன் என்றால் துன்பமில்லாதவன் என்று பொருள். நல்ல அருமையான வடமொழிப் பெயர். குழந்தைகளுக்கும் வைக்கலாம். யோகம். யோக வடிவானவன் என்று பொருள். இதமானவன். சல்லாபம் என்றால் பேசுதல். விநோதமென்றால் செய்தல். யோகமாகிய இதத்தைப் பற்றிப் பேசவும் செய்யவும் கூடியவன் முருகன் அல்லவா! இந்த இரண்டு அடிகளுக்கு இன்னும் பல பொருட்கள் உள்ளன. சொல்லக் குறைவிலாதவை. இப்போது நான்கு அடிகளையும் சேர்த்துப் படியுங்கள். எல்லாம் புரியும்.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, January 30, 2006
2. பிள்ளையாரும் பிள்ளை ஆறும்
ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே
முருகா! தேடி வந்து போர் புரிந்த கஜமுகாசுரனை வீழ்த்திய விநாயகப் பெருமானின் சகோதரனே! ஆடும் மயிலும், வேலும், மற்றும் அழகு சேவலுஞ் சேரத் தோன்றும் இறைவனே என்று உன்னைப் பாடுகின்ற பணி ஒன்றையே எனக்குப் பணியாகத் தருவாய்!
ஆடும் பரி என்றால் என்ன? பரி என்றால் குதிரை. குதிரை ஆடுமா? திருவிழாக்களில் மேளத்திற்கு ஏற்ப குதிரை காலைத் தூக்கித் தூக்கி வைப்பதைப் பார்த்திருக்கலாம். அதையும் ஆட்டம் என்றே எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு?
இங்கே பரி என்று அருணகிரியார் குறிப்பிடுவது மயிலை. பொதுவாக அந்தக் காலங்களில் குதிரைகளைத்தான் வாகனமாக பயன்படுத்தினார்கள். அதனால் வாகனம் என்ற சொல்லுக்கு மாற்றாக பரி என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கணத்தில் இதை வினையாகுபெயர் என்பார்கள்.
கந்தரலங்காரத்தில் "கலாபத் திருமயிலேறும் ராவுத்தனே" என்கின்றார். அந்தக் காலத்தில் ராவுத்தர்கள் குதிரை வளர்ப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். ஆகையால் மயிலைக் குதிரை என்று அழைத்த பிறகு முருகனை ராவுத்தன் என்று அழைக்கின்றார்.
முருகக் கடவுளோ மயிலை வாகனமாகக் கொண்டவர். ஆகையால் ஆடும் பரி என்கிறார். ஆடும் மயிலும் வேலும் அணி செய்யும் சேவலும் என்றெல்லாம் உனைப் பாடிப் புகழ்ந்து மகிழும் வேலை தருவாய் வேலைப் பிடித்தவனே.
"உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை"
என்ற புகழ் பெற்ற பக்திப் பாடலையும் நினைவிற் கொள்க.
இந்த அடிகளில் மற்றொரு சிறப்பும் உள்ளது. ஆம். மயிலை ஆடும் பரி என்றார். சேவலை அணி சேவல் என்றார். ஆனால் வேலுக்கு எந்த அடைமொழியும் கொடுக்கவில்லை. ஏனென்றால் தேவையில்லை. வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி.
தேடும் கஜமாமுகன். எதைத் தேடினான்? எங்கே தேடினான்? தவம் பல செய்து வரம் பல பெற்ற வல்லரக்கன் கஜமுகாசுரன். ஆனை முகம் கொண்டவன். அந்த வல்லரக்கனோ நல்லரக்கனாக இல்லாமல், அடுத்தவரை கொல்லரக்கனாக இருந்தான். தன்னை வெல்லரக்கர் யாருமில்லை என்ற உண்மையை உணர்ந்து, தன்னோடு போரிட இணையானவர் யாரென்று தேடித் தேடி அலைந்தான்.
ஆனை முகம் கொண்டதால், விநாயகரே தனக்குத் தக்கவர் என்று பிழையாக நினைத்து போர் புரிந்தான். அவனது தலையெழுத்தை அறிந்த கனநாதனோ கஜமுகனின் தலையையும் அரிந்தான். மக்களைக் காத்து கருணையைச் சொரிந்தான். அப்படிப் பட்ட விநாயகப் பெருமானைத் தமையனாராகக் கருதக் கொண்டவரே! ஆறுமுகனே!
முருகனுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள இந்த சகோதர உணர்வு பல பிற்காலத்தைய தமிழ்ப் பாடல்களில் பாடப் படுகிறது. விநாயகரின் பதினாறு திருநாமங்களில் ஸ்கந்த பூர்வஜன் என்ற திருநாமமும் வழங்கப் படுகிறது. கந்தனுக்கு முந்தியர் இந்த உந்தியர். உந்தி என்றால் தொந்தி.
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே, என்று திருப்புகழும் பிள்ளையாருக்கும் பிள்ளை ஆறுக்கும் உள்ள தொடர்பைச் சொல்கிறது. பிள்ளை ஆறு என்றால்? ஆறு பிள்ளைகள் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, அகிலாண்ட நாயகியின் அணைப்பில் அறுவர் ஒருவரானதால், அப்படியும் கூறலாம்தானே!
இறுதியடியில் தனியானை சகோதரனே என்று வந்துள்ளது. அதென்ன தனியானை? யாருக்கும் நிகரில்லாத என்று பொருள். அரசவையில் அமைச்சர்கள் எல்லாம் வரிசையாக கொலுவீற்றிருக்க அரசன் எல்லோருக்கும் முன்னால் மேடையில் தனியாக இருப்பான். அங்கே தனியாக இருப்பது இழுக்கா? இல்லை. அது பதவி. பெருமை. அரசனுக்கு இணையாக அரசி அமர்வாள். அப்போது அவன் தனிமை போகிறது அங்கு. ஆனால் அப்படி யாரும் இல்லாததால் தனியாக இருப்பவன் விநாயகன். அவனை வணங்கி அருள் பெறலாம்.
அன்புடன்,
கோ.இராகவன்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே
முருகா! தேடி வந்து போர் புரிந்த கஜமுகாசுரனை வீழ்த்திய விநாயகப் பெருமானின் சகோதரனே! ஆடும் மயிலும், வேலும், மற்றும் அழகு சேவலுஞ் சேரத் தோன்றும் இறைவனே என்று உன்னைப் பாடுகின்ற பணி ஒன்றையே எனக்குப் பணியாகத் தருவாய்!
ஆடும் பரி என்றால் என்ன? பரி என்றால் குதிரை. குதிரை ஆடுமா? திருவிழாக்களில் மேளத்திற்கு ஏற்ப குதிரை காலைத் தூக்கித் தூக்கி வைப்பதைப் பார்த்திருக்கலாம். அதையும் ஆட்டம் என்றே எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு?
இங்கே பரி என்று அருணகிரியார் குறிப்பிடுவது மயிலை. பொதுவாக அந்தக் காலங்களில் குதிரைகளைத்தான் வாகனமாக பயன்படுத்தினார்கள். அதனால் வாகனம் என்ற சொல்லுக்கு மாற்றாக பரி என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கணத்தில் இதை வினையாகுபெயர் என்பார்கள்.
கந்தரலங்காரத்தில் "கலாபத் திருமயிலேறும் ராவுத்தனே" என்கின்றார். அந்தக் காலத்தில் ராவுத்தர்கள் குதிரை வளர்ப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். ஆகையால் மயிலைக் குதிரை என்று அழைத்த பிறகு முருகனை ராவுத்தன் என்று அழைக்கின்றார்.
முருகக் கடவுளோ மயிலை வாகனமாகக் கொண்டவர். ஆகையால் ஆடும் பரி என்கிறார். ஆடும் மயிலும் வேலும் அணி செய்யும் சேவலும் என்றெல்லாம் உனைப் பாடிப் புகழ்ந்து மகிழும் வேலை தருவாய் வேலைப் பிடித்தவனே.
"உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை"
என்ற புகழ் பெற்ற பக்திப் பாடலையும் நினைவிற் கொள்க.
இந்த அடிகளில் மற்றொரு சிறப்பும் உள்ளது. ஆம். மயிலை ஆடும் பரி என்றார். சேவலை அணி சேவல் என்றார். ஆனால் வேலுக்கு எந்த அடைமொழியும் கொடுக்கவில்லை. ஏனென்றால் தேவையில்லை. வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி.
தேடும் கஜமாமுகன். எதைத் தேடினான்? எங்கே தேடினான்? தவம் பல செய்து வரம் பல பெற்ற வல்லரக்கன் கஜமுகாசுரன். ஆனை முகம் கொண்டவன். அந்த வல்லரக்கனோ நல்லரக்கனாக இல்லாமல், அடுத்தவரை கொல்லரக்கனாக இருந்தான். தன்னை வெல்லரக்கர் யாருமில்லை என்ற உண்மையை உணர்ந்து, தன்னோடு போரிட இணையானவர் யாரென்று தேடித் தேடி அலைந்தான்.
ஆனை முகம் கொண்டதால், விநாயகரே தனக்குத் தக்கவர் என்று பிழையாக நினைத்து போர் புரிந்தான். அவனது தலையெழுத்தை அறிந்த கனநாதனோ கஜமுகனின் தலையையும் அரிந்தான். மக்களைக் காத்து கருணையைச் சொரிந்தான். அப்படிப் பட்ட விநாயகப் பெருமானைத் தமையனாராகக் கருதக் கொண்டவரே! ஆறுமுகனே!
முருகனுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள இந்த சகோதர உணர்வு பல பிற்காலத்தைய தமிழ்ப் பாடல்களில் பாடப் படுகிறது. விநாயகரின் பதினாறு திருநாமங்களில் ஸ்கந்த பூர்வஜன் என்ற திருநாமமும் வழங்கப் படுகிறது. கந்தனுக்கு முந்தியர் இந்த உந்தியர். உந்தி என்றால் தொந்தி.
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே, என்று திருப்புகழும் பிள்ளையாருக்கும் பிள்ளை ஆறுக்கும் உள்ள தொடர்பைச் சொல்கிறது. பிள்ளை ஆறு என்றால்? ஆறு பிள்ளைகள் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, அகிலாண்ட நாயகியின் அணைப்பில் அறுவர் ஒருவரானதால், அப்படியும் கூறலாம்தானே!
இறுதியடியில் தனியானை சகோதரனே என்று வந்துள்ளது. அதென்ன தனியானை? யாருக்கும் நிகரில்லாத என்று பொருள். அரசவையில் அமைச்சர்கள் எல்லாம் வரிசையாக கொலுவீற்றிருக்க அரசன் எல்லோருக்கும் முன்னால் மேடையில் தனியாக இருப்பான். அங்கே தனியாக இருப்பது இழுக்கா? இல்லை. அது பதவி. பெருமை. அரசனுக்கு இணையாக அரசி அமர்வாள். அப்போது அவன் தனிமை போகிறது அங்கு. ஆனால் அப்படி யாரும் இல்லாததால் தனியாக இருப்பவன் விநாயகன். அவனை வணங்கி அருள் பெறலாம்.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, January 23, 2006
1. சொல்லச் சொல்ல இனிக்குதடா
அன்புடைய நண்பர்களே! உழக்கைக்கொண்டு உததியை(கடலை) அளந்தாற் போல, ஒரு மாபெரும் பொருள் மேல் ஒரு மீச்சிறு முயற்சி. ஆம். நாம் பக்தியோடு பாடி மகிழும் பைந்தமிழ் பாக்களுக்கு, இறைவனை பூசிக்கும் பூக்களுக்கு விளக்கம் கூறும் முயற்சி. மும்மலமும் நீங்கி தன்னலமும் நீக்கி நானிலம் வாழ் நம் நலன் காக்கப் புலவர்கள் பாடிய பாச்சரங்களுக்குப் பூச்சரம் சூட்டும் முயற்சி. பாற்கடலை நக்கிக் குடித்த பூசை(பூனை) என்று கம்பனே தன்னைப் பற்றி கூறிக்கொள்கையில் என்னை என்னவென்றும் கூறலாகாது. ஆவலால் தொடங்கும் இந்த முயற்சி வெற்றி பெற, அதாவது உங்கள் விருப்பத்தைப் பெற, தமிழ்க்கடவுளை வேண்டுகிறேன்.
முதலும் முடிவுமில்லாத முதல்வன், அவன் தன் புதல்வன் முருகனைப் போற்றி அருணகிரி எழுதிய கந்தர் அநுபூதியைத் தொடுகிறேன். எனக்குத் தெரிந்தவைகளை வார்த்தைகளில் விடுகிறேன். முருகன் அருள் சேர்ப்போம். நமது துயர்களைத் தீர்ப்போம். பகையை நீர்ப்போம். இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்யுளாகப் பார்ப்போம்.
அநுபூதி என்றால் ஒன்றுதல் என்று பொருள். கந்தனோடு நம்மை ஒன்றச் செய்யும் செய்யுள்களின் தொகுப்பே கந்தர் அநுபூதி. கந்தரநுபூதியை இயற்றியவர் அருணகிரிநாதர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். அருணையில் பிறந்து முருகன் அருளை உணர்ந்த இந்த மாமேதை வாய்ச் சொல் ஒவ்வொன்றும் தீந்தேன் துளிகள். அள்ளிப் பருக அலுக்காதவை. சொல்லி மகிழத் திகட்டாதவை.
கடவுள் வாழ்த்து
நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்
தஞ்சம் என்று கெஞ்சும் போதிலே அடைக்கலம் தந்து, கல் போன்ற நெஞ்சத்தை கனிய வைத்து உருக்கும் சண்முகக் கடவுளைப் புகழ்ந்து, செழுந்தமிழால் பாடல்களைச் சிறந்த முறையில் புனைந்து பாட, ஐந்து கரத்தானைப் பணிவோம். இதுதான் பாடலின் பொருள். அதற்கு விளக்கம் தொடர்கிறது.
போர் என்று வந்து விட்டது. வெற்றி வேண்டும். போராடிப் பார்ப்பதுதானே முறை! இங்கே ஒரு புனிதப் போரின் தொடக்கத்திலேயே அருணகிரிநாதர் சரணடைகிறார். வெற்றியும் கொள்கிறார்.
"திமிர உததி அனைய நரக ஜனனம்" என்று திருப்புகழ் கூறுகிறது. உததி என்றால் கடல். என்றுமே நிலைக்குந் தன்மையில்லாத கடலைப் போன்ற நரகமே இந்த பிறப்பு. நமது பிறப்பு சுகமாக இருக்கிறதா? தாய்க்குப் பெருந்துன்பம் கொடுத்துப் பிறக்கின்றோம். அதுவும் குறுகிய வழியில் நெருக்கிக் கொண்டு பிறக்கின்றோம். அப்படிப்பட்ட பிறப்பில், நம்மேல் தீயவைகள் தொடுக்கும் போரில் வெற்றி பெற என்ன வழி? முருகப் பெருமானைச் சரணடைவதே! ஆகக்கூடி போராடாமலே வெற்றி.
அத்தைகய மாபெரும் வெற்றி நம்மிடத்தில் என்ன செய்கிறது? கல் போன்ற நெஞ்சத்தைக் கனிய வைத்து உருகச் செய்கிறது. இரும்பு இளகும். செம்பு இளகும். தங்கம், வெள்ளி முதலான உலோகங்கள் இளகும். ஈரம் பட வைத்தால் வெல்லமும் கருப்பட்டியும் கூட இளகும். கல் இளகுமா?
என்ன இது? நடக்காத ஒன்றை அருணகிரி நாதர் கூறுகின்றாரே என்று நினைக்க வேண்டாம். அவர் அறிவிற் சிறந்தவர். ஒன்றை கூறும் முன்னம் பலமுறை சிந்தித்துப் பொருந்தும் விதமாக கூறும் அறிவையும் ஆற்றலையும் முருகப் பெருமான் அவருக்குக் கொடுத்திருந்தார்.
அப்படியானால் கல் இளகுவது! கல் உடைந்துதானே போகும்! அதிலும் நெஞ்சமாகிய கல் துயர் வரும் வேளைகளில் உடைந்து கண் வழியே கண்ணீராக அல்லவா பெருக்கெடுக்கிறது. அந்தக் கல் இளகுமா? உருகுமா?
இயல்பால் கல் உருகாது. அதுபோல துயரங்களும் தாமாக அகலாது. கல் உருகுவது என்பது நடவாத காரியம். நடவாத காரியத்தையும் நடத்திக் காட்டுவான் கந்தன் என்பதே இதன் உட்பொருள். உருகாத கல்லையும் பெரும் வெப்பத்திலும் அழுத்தத்திலும் உருகவைப்பது போல அகலாத அல்லல்களையும் அகற்றுவான் ஆறுமுகன். இப்பொழுது முதல் இரண்டு வரிகளையும் படியுங்கள் பொருள் நன்றாக விளங்கும்.
இப்படியெல்லாம் நமக்கு இன்பம் தந்த கடவுளைப் பாட தந்தக் கடவுளை வேண்டுகிறார் அருணகிரி. முருகனைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம். அதுவும் தமிழால் பாடுவது பேரின்பம். அந்த பேரின்பத்தை பெற ஆனையை வேண்டுகிறார். அதுவும் ஐந்து கரங்கள் கொண்ட ஆனையாம்!
ஆனை முகமும் மனித உடலும் கொண்ட ஆனை முகத்தானுக்கு வலக்கை இடக்கை மற்றும் துதிக்கை என்று மூன்று கைகள் தானே! ஐந்து எங்கிருந்து வந்தது? நமது வறுமை நீக்கும் நிதிக்கை. நமது பகைமையை வதைக்கை. இவையிரண்டும் சேர்ந்தால் ஐந்து கைகள்தானே! துதிக்கையானை துதித்து பைந்தமிழில் முருகனுக்கு பாமாலை சூட்டுகிறார் அருணகிரிநாதர்.
அன்புடன்,
கோ.இராகவன்முதலும் முடிவுமில்லாத முதல்வன், அவன் தன் புதல்வன் முருகனைப் போற்றி அருணகிரி எழுதிய கந்தர் அநுபூதியைத் தொடுகிறேன். எனக்குத் தெரிந்தவைகளை வார்த்தைகளில் விடுகிறேன். முருகன் அருள் சேர்ப்போம். நமது துயர்களைத் தீர்ப்போம். பகையை நீர்ப்போம். இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்யுளாகப் பார்ப்போம்.
அநுபூதி என்றால் ஒன்றுதல் என்று பொருள். கந்தனோடு நம்மை ஒன்றச் செய்யும் செய்யுள்களின் தொகுப்பே கந்தர் அநுபூதி. கந்தரநுபூதியை இயற்றியவர் அருணகிரிநாதர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். அருணையில் பிறந்து முருகன் அருளை உணர்ந்த இந்த மாமேதை வாய்ச் சொல் ஒவ்வொன்றும் தீந்தேன் துளிகள். அள்ளிப் பருக அலுக்காதவை. சொல்லி மகிழத் திகட்டாதவை.
கடவுள் வாழ்த்து
நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்
தஞ்சம் என்று கெஞ்சும் போதிலே அடைக்கலம் தந்து, கல் போன்ற நெஞ்சத்தை கனிய வைத்து உருக்கும் சண்முகக் கடவுளைப் புகழ்ந்து, செழுந்தமிழால் பாடல்களைச் சிறந்த முறையில் புனைந்து பாட, ஐந்து கரத்தானைப் பணிவோம். இதுதான் பாடலின் பொருள். அதற்கு விளக்கம் தொடர்கிறது.
போர் என்று வந்து விட்டது. வெற்றி வேண்டும். போராடிப் பார்ப்பதுதானே முறை! இங்கே ஒரு புனிதப் போரின் தொடக்கத்திலேயே அருணகிரிநாதர் சரணடைகிறார். வெற்றியும் கொள்கிறார்.
"திமிர உததி அனைய நரக ஜனனம்" என்று திருப்புகழ் கூறுகிறது. உததி என்றால் கடல். என்றுமே நிலைக்குந் தன்மையில்லாத கடலைப் போன்ற நரகமே இந்த பிறப்பு. நமது பிறப்பு சுகமாக இருக்கிறதா? தாய்க்குப் பெருந்துன்பம் கொடுத்துப் பிறக்கின்றோம். அதுவும் குறுகிய வழியில் நெருக்கிக் கொண்டு பிறக்கின்றோம். அப்படிப்பட்ட பிறப்பில், நம்மேல் தீயவைகள் தொடுக்கும் போரில் வெற்றி பெற என்ன வழி? முருகப் பெருமானைச் சரணடைவதே! ஆகக்கூடி போராடாமலே வெற்றி.
அத்தைகய மாபெரும் வெற்றி நம்மிடத்தில் என்ன செய்கிறது? கல் போன்ற நெஞ்சத்தைக் கனிய வைத்து உருகச் செய்கிறது. இரும்பு இளகும். செம்பு இளகும். தங்கம், வெள்ளி முதலான உலோகங்கள் இளகும். ஈரம் பட வைத்தால் வெல்லமும் கருப்பட்டியும் கூட இளகும். கல் இளகுமா?
என்ன இது? நடக்காத ஒன்றை அருணகிரி நாதர் கூறுகின்றாரே என்று நினைக்க வேண்டாம். அவர் அறிவிற் சிறந்தவர். ஒன்றை கூறும் முன்னம் பலமுறை சிந்தித்துப் பொருந்தும் விதமாக கூறும் அறிவையும் ஆற்றலையும் முருகப் பெருமான் அவருக்குக் கொடுத்திருந்தார்.
அப்படியானால் கல் இளகுவது! கல் உடைந்துதானே போகும்! அதிலும் நெஞ்சமாகிய கல் துயர் வரும் வேளைகளில் உடைந்து கண் வழியே கண்ணீராக அல்லவா பெருக்கெடுக்கிறது. அந்தக் கல் இளகுமா? உருகுமா?
இயல்பால் கல் உருகாது. அதுபோல துயரங்களும் தாமாக அகலாது. கல் உருகுவது என்பது நடவாத காரியம். நடவாத காரியத்தையும் நடத்திக் காட்டுவான் கந்தன் என்பதே இதன் உட்பொருள். உருகாத கல்லையும் பெரும் வெப்பத்திலும் அழுத்தத்திலும் உருகவைப்பது போல அகலாத அல்லல்களையும் அகற்றுவான் ஆறுமுகன். இப்பொழுது முதல் இரண்டு வரிகளையும் படியுங்கள் பொருள் நன்றாக விளங்கும்.
இப்படியெல்லாம் நமக்கு இன்பம் தந்த கடவுளைப் பாட தந்தக் கடவுளை வேண்டுகிறார் அருணகிரி. முருகனைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம். அதுவும் தமிழால் பாடுவது பேரின்பம். அந்த பேரின்பத்தை பெற ஆனையை வேண்டுகிறார். அதுவும் ஐந்து கரங்கள் கொண்ட ஆனையாம்!
ஆனை முகமும் மனித உடலும் கொண்ட ஆனை முகத்தானுக்கு வலக்கை இடக்கை மற்றும் துதிக்கை என்று மூன்று கைகள் தானே! ஐந்து எங்கிருந்து வந்தது? நமது வறுமை நீக்கும் நிதிக்கை. நமது பகைமையை வதைக்கை. இவையிரண்டும் சேர்ந்தால் ஐந்து கைகள்தானே! துதிக்கையானை துதித்து பைந்தமிழில் முருகனுக்கு பாமாலை சூட்டுகிறார் அருணகிரிநாதர்.
அன்புடன்,

நண்பர்களே இந்தப் படம் தஞ்சைப் பெரிய கோயிலின் சுற்று மண்டபத்தில் எடுத்தது. பழைய நாயக்கர் கால ஓவியங்கள் என்கிறார்கள். நம்முடைய மக்களே நிறைய பாழடித்து விட்டார்கள். தப்பிப் பிழைத்தவைகளில் இதுவும் ஒன்று.
Friday, January 13, 2006
வாழி திருநாமம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு ஞூற்று நாற்பத்து முன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியு கந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!
இதுவரையில் திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் இந்தச் சீரிய பணியில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.
அன்புடன்,
கோ.இராகவன்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு ஞூற்று நாற்பத்து முன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியு கந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!
இதுவரையில் திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் இந்தச் சீரிய பணியில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.
அன்புடன்,
கோ.இராகவன்
பாவை - முப்பது
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
பாற்கடலைக் கடையக் காரணமாகித் திருமகளை அடைந்த மாதவா! கேசவா! வைகுந்தா! வாசுதேவா! பரந்தாமா! முழுநிலவினைப் போன்ற ஒளி வீசும் திருமுகம் கொண்ட ஆயர் குலப் பெண்களாய் நாங்கள் கூடி உன்னைத் தேடிப் புகழ்ந்து வந்தோம்!
(வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே - என்கிறார் இளங்கோவடிகள். மேருமை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கிக் கடையும் பொழுது கடலில் ஆழ்ந்தது மலை. அப்பொழுது ஆமையாய் வந்து தாங்கினாராம் வைகுந்தவாசன்.)
இறையருட் பறை கொண்ட வகையான அழகுமிகும் திருவில்லிபுத்தூரின் பெரியாழ்வாரின் செல்வப் புதவியான கோதை நாச்சியார் உண்மையான உளத்தோடு இறைவனை நாடிப் பாடியது இந்தத் திருப்பாவை. எப்பொழுதும் மலர்ந்திருக்கும் குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர்களைக் கோர்த்துக் கட்டியது போன்ற அற்புதமானவை இந்தச் சங்கத் தமிழ் மாலையிலுள்ள முப்பது பாக்கள்.
(பை என்றால் எப்பொழுதும் மலர்ச்சியுடன் இருக்கும் என்று பொருள். பைங்கமலம் என்றால் விளங்கக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பைந்தமிழ் என்றதுமே பை என்ற சொல்லின் பொருள் விளங்கி விடுகின்றது அல்லவா.)
ஆண்டாளின் திருப்பாவையின் முப்பது பாக்களையும் உளமும் உருகிப் பாடுவார்களுக்கு கண்ணன் அருள் உறுதியாக உண்டு. மலையளவு உயர்ந்த இரண்டு தோள்களை உடையவரும் செம்மை பொருந்திய திருவிழிகள் திகழும் முகத்தை உடையவரும் அலைமகளை அணைமகளாகக் கொண்டவருமாகிய திருமாலின் திருவருளால் எங்கும் எப்பொழுதும் திருவருள் பெற்று இன்புறுவாய் எம்பாவாய்!
(திருப்பாவையின் முப்பது பாடல்களும் முடிந்தன. இந்தப் பாடல்களை உணர்வு கூடிப் பாடிப் பரவசமடைகின்றவர்களுக்கு மாலின் அருள் நிச்சயம் உண்டு என்று உறுதி செய்து, எல்லாரையும் பாவை நோன்பு என்னும் புனித வேள்வியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார் ஆண்டாள்.)
அன்புடன்,
கோ.இராகவன்
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
பாற்கடலைக் கடையக் காரணமாகித் திருமகளை அடைந்த மாதவா! கேசவா! வைகுந்தா! வாசுதேவா! பரந்தாமா! முழுநிலவினைப் போன்ற ஒளி வீசும் திருமுகம் கொண்ட ஆயர் குலப் பெண்களாய் நாங்கள் கூடி உன்னைத் தேடிப் புகழ்ந்து வந்தோம்!
(வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே - என்கிறார் இளங்கோவடிகள். மேருமை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கிக் கடையும் பொழுது கடலில் ஆழ்ந்தது மலை. அப்பொழுது ஆமையாய் வந்து தாங்கினாராம் வைகுந்தவாசன்.)
இறையருட் பறை கொண்ட வகையான அழகுமிகும் திருவில்லிபுத்தூரின் பெரியாழ்வாரின் செல்வப் புதவியான கோதை நாச்சியார் உண்மையான உளத்தோடு இறைவனை நாடிப் பாடியது இந்தத் திருப்பாவை. எப்பொழுதும் மலர்ந்திருக்கும் குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர்களைக் கோர்த்துக் கட்டியது போன்ற அற்புதமானவை இந்தச் சங்கத் தமிழ் மாலையிலுள்ள முப்பது பாக்கள்.
(பை என்றால் எப்பொழுதும் மலர்ச்சியுடன் இருக்கும் என்று பொருள். பைங்கமலம் என்றால் விளங்கக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பைந்தமிழ் என்றதுமே பை என்ற சொல்லின் பொருள் விளங்கி விடுகின்றது அல்லவா.)
ஆண்டாளின் திருப்பாவையின் முப்பது பாக்களையும் உளமும் உருகிப் பாடுவார்களுக்கு கண்ணன் அருள் உறுதியாக உண்டு. மலையளவு உயர்ந்த இரண்டு தோள்களை உடையவரும் செம்மை பொருந்திய திருவிழிகள் திகழும் முகத்தை உடையவரும் அலைமகளை அணைமகளாகக் கொண்டவருமாகிய திருமாலின் திருவருளால் எங்கும் எப்பொழுதும் திருவருள் பெற்று இன்புறுவாய் எம்பாவாய்!
(திருப்பாவையின் முப்பது பாடல்களும் முடிந்தன. இந்தப் பாடல்களை உணர்வு கூடிப் பாடிப் பரவசமடைகின்றவர்களுக்கு மாலின் அருள் நிச்சயம் உண்டு என்று உறுதி செய்து, எல்லாரையும் பாவை நோன்பு என்னும் புனித வேள்வியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார் ஆண்டாள்.)
அன்புடன்,
கோ.இராகவன்
பாவை - இருபத்தொன்பது
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
(பாவை நோன்பு மிகச் சிறப்பாக நடக்கின்றது. தோழியருடன் கூடிக் கிளம்பிக் கண்ணன் கோயிலுக்குச் சென்று அவனைத் துயிலெழுப்பியாகி விட்டது. கண்ணனும் தன்னோடும் நப்பின்னையோடும் பலதேவனோடும் பெற்றோருடனும் துயிலெழுந்து அருள் புரிகின்றான். ஆண்டாளும் கூட்டாளிகளும் கார்முகில் வண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றார்கள். வேண்டுவன கேட்கின்றார்கள்.)
முகில்வண்ணா! விடியற்காலையில் வெள்ளியோடு எழுந்து குளிரக் குளிரக் குளித்து விட்டு கூட்டத்தாரோடு கூடி வந்து உன்னைச் சேவித்து உனது பொற்றாமரை அடிகளைப் போற்றிப் பாடுகின்றோமே! அப்படிப் போற்றி நாங்கள் கேட்பது என்னவென்று செவி மடுப்பாய்.
ஆடு மாடுகளாகிய கால்நடைகளை மேய்த்து அந்த வருவாயில் உண்டு சிறக்கும் ஆயர் குலத்தில் எங்களை உய்விப்பதற்காகவே பிறந்தவன் நீ! அப்படியிருக்க எங்கள் வேண்டுகோள்களைக் கவனியாமல் செல்லலாகாது.
கோவிந்தா! ஏதோ இன்றைக்கு ஒருநாள் மட்டும் உன்னைத் தேடி வந்து உன்னருளை விரும்புகிறோம் என்று கொள்ளாதே! இந்த மார்கழி மாதத்தில் நோன்பு நூற்பதால் மார்கழியோடு போவதா நம் உறவு? என்றும் தொடர வேண்டியதே! என்றுமென்றால் இப்பிறவி மட்டுமல்ல. ஏழு பிறப்புகளிலும் உன்னோடு ஒன்றி அமைதி பெறவே விரும்புகிறோம். உனக்கே நாங்கள் ஆளாவோம். அதை விட எங்களுக்கு என்ன வேண்டும். அப்படி எதுவும் ஆசைகள் துளிர்த்தாலும் அவைகளையும் உன் மீதுள்ள அன்பாக மாற்றுவாய் எம்பாவாய்!
(இறையருள் என்றும் வேண்டும். இதே கருத்தைத்தான் காரைக்கால் அம்மையார் அதியற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். எல்லோரும் இறைவனையும் இறைவியையும் அப்பனே அம்மையே என்றால், இவரைத்தான் இறைவனே அம்மை என்றார். அப்படிப் பெருமை கொண்ட அம்மை வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கவனியுங்கள்.
பிறவாமை வேண்டும் - மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் (உம்மை என்று கூட இல்லை. உன்னை என்கிறார். அம்மா அல்லவா! அப்படி அழைக்க உரிமை உண்டுதானே.)இந்தக் கருத்துதான் நமது பாண்டி நாட்டாளது திருவுளத்திலிருந்தும் எழுகின்றது.)
அன்புடன்,
கோ.இராகவன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
(பாவை நோன்பு மிகச் சிறப்பாக நடக்கின்றது. தோழியருடன் கூடிக் கிளம்பிக் கண்ணன் கோயிலுக்குச் சென்று அவனைத் துயிலெழுப்பியாகி விட்டது. கண்ணனும் தன்னோடும் நப்பின்னையோடும் பலதேவனோடும் பெற்றோருடனும் துயிலெழுந்து அருள் புரிகின்றான். ஆண்டாளும் கூட்டாளிகளும் கார்முகில் வண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றார்கள். வேண்டுவன கேட்கின்றார்கள்.)
முகில்வண்ணா! விடியற்காலையில் வெள்ளியோடு எழுந்து குளிரக் குளிரக் குளித்து விட்டு கூட்டத்தாரோடு கூடி வந்து உன்னைச் சேவித்து உனது பொற்றாமரை அடிகளைப் போற்றிப் பாடுகின்றோமே! அப்படிப் போற்றி நாங்கள் கேட்பது என்னவென்று செவி மடுப்பாய்.
ஆடு மாடுகளாகிய கால்நடைகளை மேய்த்து அந்த வருவாயில் உண்டு சிறக்கும் ஆயர் குலத்தில் எங்களை உய்விப்பதற்காகவே பிறந்தவன் நீ! அப்படியிருக்க எங்கள் வேண்டுகோள்களைக் கவனியாமல் செல்லலாகாது.
கோவிந்தா! ஏதோ இன்றைக்கு ஒருநாள் மட்டும் உன்னைத் தேடி வந்து உன்னருளை விரும்புகிறோம் என்று கொள்ளாதே! இந்த மார்கழி மாதத்தில் நோன்பு நூற்பதால் மார்கழியோடு போவதா நம் உறவு? என்றும் தொடர வேண்டியதே! என்றுமென்றால் இப்பிறவி மட்டுமல்ல. ஏழு பிறப்புகளிலும் உன்னோடு ஒன்றி அமைதி பெறவே விரும்புகிறோம். உனக்கே நாங்கள் ஆளாவோம். அதை விட எங்களுக்கு என்ன வேண்டும். அப்படி எதுவும் ஆசைகள் துளிர்த்தாலும் அவைகளையும் உன் மீதுள்ள அன்பாக மாற்றுவாய் எம்பாவாய்!
(இறையருள் என்றும் வேண்டும். இதே கருத்தைத்தான் காரைக்கால் அம்மையார் அதியற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். எல்லோரும் இறைவனையும் இறைவியையும் அப்பனே அம்மையே என்றால், இவரைத்தான் இறைவனே அம்மை என்றார். அப்படிப் பெருமை கொண்ட அம்மை வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கவனியுங்கள்.
பிறவாமை வேண்டும் - மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் (உம்மை என்று கூட இல்லை. உன்னை என்கிறார். அம்மா அல்லவா! அப்படி அழைக்க உரிமை உண்டுதானே.)இந்தக் கருத்துதான் நமது பாண்டி நாட்டாளது திருவுளத்திலிருந்தும் எழுகின்றது.)
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, January 12, 2006
பாவை - இருபத்தெட்டு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
(இறைவனே உலகைக் கட்டி மேய்க்கின்றவன். நாமெல்லாம் பசுக்கள். அதனால்தான் அவனை ஆயன் என்கிறார்கள். தம்மையும் ஆயர் கூட்டத்தாராகக் கருதிக் கண்ணனை வேண்டும் பாடல் இது.)
எங்கள் தலைவனே! நாங்கள் ஆய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு என்ன தெரியும்? ஆடு மாடுகளை மேய்க்கத் தெரியும். அவைகளைப் புல்வெளிகளிலும் கானகங்களிலும் திரிய விட்டு வளர்க்கத் தெரியும். அப்படி மேய்க்கையில் அவைகளுக்கு வேண்டிய கொப்புகளையும் குழைகளையும் இழுத்துப் போடுவதற்கு அவைகள் பின்னாலேயே செல்வோம். அப்படிப் போகையில் எங்களுக்குப் பசிக்கையில் கூட வந்த ஆயர்களோடு கூடி உண்போம். (அவனுக்கு என்ன தெரியும்? திங்கத்தான தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா. அது போலத்தான் இதுவும்.)
இதைத் தவிர வேறு என்ன அறிவு எங்களுக்கு இருக்கின்றது? அப்படிப் பட்ட இடையர் குலத்தைக் கடையர் குலமாக்காமல் உடையர் எனக்கருதிப் பிறந்தாயே! வாசுதேவா! என்ன புண்ணியம் நாங்கள் செய்திருக்க வேண்டுமோ!
குறை என்ற ஒன்று இல்லாததே உன்னுடைய குறை! அப்படி அப்பழுக்கற்ற கோவிந்தா! உன்னுடைய உறவில்லாமல் நாங்கள் பிழைப்பது எப்படி? எப்பொழுதும் எங்களோடு இருந்து கலந்து நலம் தருவாய்!
அறியாத பிள்ளைகள் நாங்கள். எங்களோடு நீ கூடிக் குலவுகையில் பாடிப் பரவுகையில் மிதமிஞ்சிய அன்பினால் மாதவா, கேசவா, பரந்தாமா, வைகுந்தா, தேவதேவா என்று உன்னைப் பேர் சொல்லி அழைத்து விடுகின்றோம். ஆண்டவன் நீ! உன்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறோம் என்று சீற்றம் கொள்ளாதே!
இறைவா! இத்தனை நெருங்கியவனாக நீ எங்களுக்கு உன்னுடைய திருவருளைத் தருவாய் எம்பாவாய்!
(இறைவனுடைய கருணை நம்மேல் விழ நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த வியப்பில்தான் ஆண்டாள் இப்படிப் பாடுகின்றார். இந்த நிலை சைவத்திலும் உண்டு. அருணகிரிக்கும் இதே வியப்பு. அதைத்தான் "ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" என்கிறார். வீண்பேச்சு பேசிக் கொண்டு திரிந்த என்னையும் ஒன்றும் அறியாத என்னையும் நன்மைகளை அறியாத என்னையும் ஆட்கொண்ட உன்னுடைய அன்பைச் சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.)
அன்புடன்,
கோ.இராகவன்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
(இறைவனே உலகைக் கட்டி மேய்க்கின்றவன். நாமெல்லாம் பசுக்கள். அதனால்தான் அவனை ஆயன் என்கிறார்கள். தம்மையும் ஆயர் கூட்டத்தாராகக் கருதிக் கண்ணனை வேண்டும் பாடல் இது.)
எங்கள் தலைவனே! நாங்கள் ஆய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு என்ன தெரியும்? ஆடு மாடுகளை மேய்க்கத் தெரியும். அவைகளைப் புல்வெளிகளிலும் கானகங்களிலும் திரிய விட்டு வளர்க்கத் தெரியும். அப்படி மேய்க்கையில் அவைகளுக்கு வேண்டிய கொப்புகளையும் குழைகளையும் இழுத்துப் போடுவதற்கு அவைகள் பின்னாலேயே செல்வோம். அப்படிப் போகையில் எங்களுக்குப் பசிக்கையில் கூட வந்த ஆயர்களோடு கூடி உண்போம். (அவனுக்கு என்ன தெரியும்? திங்கத்தான தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா. அது போலத்தான் இதுவும்.)
இதைத் தவிர வேறு என்ன அறிவு எங்களுக்கு இருக்கின்றது? அப்படிப் பட்ட இடையர் குலத்தைக் கடையர் குலமாக்காமல் உடையர் எனக்கருதிப் பிறந்தாயே! வாசுதேவா! என்ன புண்ணியம் நாங்கள் செய்திருக்க வேண்டுமோ!
குறை என்ற ஒன்று இல்லாததே உன்னுடைய குறை! அப்படி அப்பழுக்கற்ற கோவிந்தா! உன்னுடைய உறவில்லாமல் நாங்கள் பிழைப்பது எப்படி? எப்பொழுதும் எங்களோடு இருந்து கலந்து நலம் தருவாய்!
அறியாத பிள்ளைகள் நாங்கள். எங்களோடு நீ கூடிக் குலவுகையில் பாடிப் பரவுகையில் மிதமிஞ்சிய அன்பினால் மாதவா, கேசவா, பரந்தாமா, வைகுந்தா, தேவதேவா என்று உன்னைப் பேர் சொல்லி அழைத்து விடுகின்றோம். ஆண்டவன் நீ! உன்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறோம் என்று சீற்றம் கொள்ளாதே!
இறைவா! இத்தனை நெருங்கியவனாக நீ எங்களுக்கு உன்னுடைய திருவருளைத் தருவாய் எம்பாவாய்!
(இறைவனுடைய கருணை நம்மேல் விழ நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த வியப்பில்தான் ஆண்டாள் இப்படிப் பாடுகின்றார். இந்த நிலை சைவத்திலும் உண்டு. அருணகிரிக்கும் இதே வியப்பு. அதைத்தான் "ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" என்கிறார். வீண்பேச்சு பேசிக் கொண்டு திரிந்த என்னையும் ஒன்றும் அறியாத என்னையும் நன்மைகளை அறியாத என்னையும் ஆட்கொண்ட உன்னுடைய அன்பைச் சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.)
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, January 11, 2006
பாவை - இருபத்தேழு
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
முட நெய் பெய்த் முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
கோவிந்தா! உன்னைக் கூடாரின் அன்பினையும் வெல்லும் முகுந்தா! நாங்கள் பெற விரும்பும் பரிசு எதென்று கேட்டால் என்ன சொல்வோம் தெரியுமா? ஊராரும் உலகோரும் அறிய உன்னுடைய பெயர்களைப் புகழ்ந்து பாடிப் பறை தட்டுவதே!
(கூடாரை வெல்லும் என்ற சொற்றொடருக்குச் சிலர் எதிரிகளைக் கொல்லும் என்றும் பொருள் கொள்வார்கள். அது சரியன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. இறைவனோடு கூடாரை, இறைவன் பெயரைச் சொல்லிப் பாடாரை, இறைவன் திருவடிகளை நாடாரை வேண்டிய பொழுதில் அன்பினால் வெல்லும் திறம் ஆண்டவனுக்கு உண்டு. அதைத்தான் இங்கே ஆண்டாள் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது.)
மாதவா! உன்னருளாலே செல்வம் பல பெற்று அதனால் நல்ல அணிமணிகளான கைவளை (சூடகம்), தோள்வளை, தோடு, செவிப்பூ (காது மாட்டல்), கால் கொலுசு (பாடகம்) மற்றும் பல அரிய நகை வகைகளை அணிந்து கொள்வோம்! நல்ல ஆடைகளை உடுப்போம்!
(சைவத்தில் இகம்பரம் என்பார்கள். திகம்பரம் என்பது தவத்தார்க்கே. மற்றவர்களுக்கெல்லாம் இகம்பரமே! இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் இகசுகம். அந்த உலகத்தில் கிடைப்பது பரசுகம். இகத்தை மறுத்து பரத்தை மட்டுமே (பரத்தையரை அல்ல) நினைப்பது துறந்தோர் உள்ளம். இறையருள் பரசுகம் மட்டுமல்ல இகசுகமும் வழங்கும். அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்றார். அந்த கருத்தை ஒட்டியே ஆண்டாளும் இறையருளால் இகசுகமும் பெறுவோம் என்கின்றார். நல்ல அணிமணிகளும் அணிந்து இன்புறுவதைக் குறிப்பிடுகின்றவர் அடுத்த வரியில் உணவையும் குறிப்பிடுகின்றார்.)
நன்றாக உடுத்திக் கொண்டு நகைகளை மேலில் அடுக்கிக் கொண்டு பாலோடு சோற்றை வேக வைத்துக் குழைத்து அதனோடு இனிப்பும் நெய்யும் சேர்த்து பாயாசமாக்கி கைவழி வழியும் வகைக்குக் குழந்தை போலச் சுவைத்து உண்போம். அதுவும் நாங்கள் தனியாக உண்ணாமல் கூடியிருந்து உண்டு வயிறு குளிரக் காண்பாய் எம்பாவாய்!
அன்புடன்,
கோ.இராகவன்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
முட நெய் பெய்த் முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
கோவிந்தா! உன்னைக் கூடாரின் அன்பினையும் வெல்லும் முகுந்தா! நாங்கள் பெற விரும்பும் பரிசு எதென்று கேட்டால் என்ன சொல்வோம் தெரியுமா? ஊராரும் உலகோரும் அறிய உன்னுடைய பெயர்களைப் புகழ்ந்து பாடிப் பறை தட்டுவதே!
(கூடாரை வெல்லும் என்ற சொற்றொடருக்குச் சிலர் எதிரிகளைக் கொல்லும் என்றும் பொருள் கொள்வார்கள். அது சரியன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. இறைவனோடு கூடாரை, இறைவன் பெயரைச் சொல்லிப் பாடாரை, இறைவன் திருவடிகளை நாடாரை வேண்டிய பொழுதில் அன்பினால் வெல்லும் திறம் ஆண்டவனுக்கு உண்டு. அதைத்தான் இங்கே ஆண்டாள் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது.)
மாதவா! உன்னருளாலே செல்வம் பல பெற்று அதனால் நல்ல அணிமணிகளான கைவளை (சூடகம்), தோள்வளை, தோடு, செவிப்பூ (காது மாட்டல்), கால் கொலுசு (பாடகம்) மற்றும் பல அரிய நகை வகைகளை அணிந்து கொள்வோம்! நல்ல ஆடைகளை உடுப்போம்!
(சைவத்தில் இகம்பரம் என்பார்கள். திகம்பரம் என்பது தவத்தார்க்கே. மற்றவர்களுக்கெல்லாம் இகம்பரமே! இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் இகசுகம். அந்த உலகத்தில் கிடைப்பது பரசுகம். இகத்தை மறுத்து பரத்தை மட்டுமே (பரத்தையரை அல்ல) நினைப்பது துறந்தோர் உள்ளம். இறையருள் பரசுகம் மட்டுமல்ல இகசுகமும் வழங்கும். அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்றார். அந்த கருத்தை ஒட்டியே ஆண்டாளும் இறையருளால் இகசுகமும் பெறுவோம் என்கின்றார். நல்ல அணிமணிகளும் அணிந்து இன்புறுவதைக் குறிப்பிடுகின்றவர் அடுத்த வரியில் உணவையும் குறிப்பிடுகின்றார்.)
நன்றாக உடுத்திக் கொண்டு நகைகளை மேலில் அடுக்கிக் கொண்டு பாலோடு சோற்றை வேக வைத்துக் குழைத்து அதனோடு இனிப்பும் நெய்யும் சேர்த்து பாயாசமாக்கி கைவழி வழியும் வகைக்குக் குழந்தை போலச் சுவைத்து உண்போம். அதுவும் நாங்கள் தனியாக உண்ணாமல் கூடியிருந்து உண்டு வயிறு குளிரக் காண்பாய் எம்பாவாய்!
அன்புடன்,
கோ.இராகவன்
Tuesday, January 10, 2006
பாவை - இருபத்தாறு
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
மாலே! மணிவண்ணா! நீ கருணை கொண்டு எங்களுக்கு வேண்டிவன யாவையென்று கேட்பாயானால் அரிய பெரியர்களுக்குத் தக்க இந்த மார்கழித் திங்களின் பாவை நோன்பைச் சிறப்பாகச் செய்ய அருள்வாய் என்றே கேட்போம்!
(பிறவாமை வேண்டுமென்று கேட்டுவிட்டு மீண்டும் பிறந்தால் இறைவனை மறவாமை வேண்டுமெனக் கேட்கும் சைவத்தைப் போலதான் இதுவும். இறைவன் வரம் தரப் போகின்றான் என்றால் காடு வேண்டும் மாடு வேண்டும் தங்க ஒரு கூடு வேண்டும் என்று கேளாமல் இறைவனை நினைத்துப் பாடும் நோன்பு சிறக்க வேண்டும் என்று ஆண்டாள் கேட்பது அன்பின் உச்சமே!)
அத்தோடு தூய வெண்ணிறத்துப் பாஞ்ச சன்னியம் இருக்கின்றதே! உரத்த ஒலியெழுப்பினால் உலகம் முழுவதும் அதிர்ந்து நடுங்கும் தன்மையுடைய அந்தப் பாஞ்ச சன்னியம் போன்ற அருமையான சங்குகள் எங்களுக்கு வேண்டும். அப்பொழுதுதான் அவைகளை ஊதிக் கொண்டு உன்னைப் பாட முடியும்.
(ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன என்ற வரியைப் பொருள் கொள்ளும் பொழுது சங்கொலி கேட்டு உலகம் நடுங்கும் என்று பொருள் கொள்ளக் கூடாதென்று தோன்றுகின்றது. ஒலியின் அதிர்வுகள் கூடினால் எந்தப் பொருளும் நடுங்குமல்லவா! உலகத்தையே பெருத்த ஒலியால் அதிர வைக்கும் பாஞ்ச சன்னியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.)
அத்தோடு வட்ட வடிவமான பெரிய பறைகளைத் தட்டிக் கொண்டு பெரியாழ்வார் பாடிய பல்லாண்டு பாடியும் மகிழ வேண்டும்!
(திருப்பாவை, சிலப்பதிகாரம், இன்னும் பிற நூல்களைப் படிக்கும் பொழுது திருக்கோயில்களில் பயன்பட்ட இசைக்கருவிகளில் பறையும், சங்கமும், கொம்பும், எக்காளமும், செண்டையும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வரும். பறை என்பதை இன்றைய மிருதங்கம் என்று கொள்ளவும் முடியாது. காரணம் பறைகளின் வகைகளும் அமைப்பும் நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்குத் தமிழகக் கோயில்களில் இவையனைத்துமே பயன்படுத்தப் படுவதில்லை என்றே தெரிகின்றது. இந்த இசைக்கருவிகளை மீண்டும் மீட்டெடுத்துப் பயன்படுத்தினால் கோதை மனம் குளிர்வார் என்பதில் ஐயமில்லை.)
கோல விளக்கே! உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் கொடியே! நெடிய கோபுரமே! ஆலின் இலை மேலே துயில் கொண்ட சிறுவனே! எங்களுக்கும் அருள்வாய் எம்பாவாய்!
அன்புடன்,
கோ.இராகவன்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
மாலே! மணிவண்ணா! நீ கருணை கொண்டு எங்களுக்கு வேண்டிவன யாவையென்று கேட்பாயானால் அரிய பெரியர்களுக்குத் தக்க இந்த மார்கழித் திங்களின் பாவை நோன்பைச் சிறப்பாகச் செய்ய அருள்வாய் என்றே கேட்போம்!
(பிறவாமை வேண்டுமென்று கேட்டுவிட்டு மீண்டும் பிறந்தால் இறைவனை மறவாமை வேண்டுமெனக் கேட்கும் சைவத்தைப் போலதான் இதுவும். இறைவன் வரம் தரப் போகின்றான் என்றால் காடு வேண்டும் மாடு வேண்டும் தங்க ஒரு கூடு வேண்டும் என்று கேளாமல் இறைவனை நினைத்துப் பாடும் நோன்பு சிறக்க வேண்டும் என்று ஆண்டாள் கேட்பது அன்பின் உச்சமே!)
அத்தோடு தூய வெண்ணிறத்துப் பாஞ்ச சன்னியம் இருக்கின்றதே! உரத்த ஒலியெழுப்பினால் உலகம் முழுவதும் அதிர்ந்து நடுங்கும் தன்மையுடைய அந்தப் பாஞ்ச சன்னியம் போன்ற அருமையான சங்குகள் எங்களுக்கு வேண்டும். அப்பொழுதுதான் அவைகளை ஊதிக் கொண்டு உன்னைப் பாட முடியும்.
(ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன என்ற வரியைப் பொருள் கொள்ளும் பொழுது சங்கொலி கேட்டு உலகம் நடுங்கும் என்று பொருள் கொள்ளக் கூடாதென்று தோன்றுகின்றது. ஒலியின் அதிர்வுகள் கூடினால் எந்தப் பொருளும் நடுங்குமல்லவா! உலகத்தையே பெருத்த ஒலியால் அதிர வைக்கும் பாஞ்ச சன்னியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.)
அத்தோடு வட்ட வடிவமான பெரிய பறைகளைத் தட்டிக் கொண்டு பெரியாழ்வார் பாடிய பல்லாண்டு பாடியும் மகிழ வேண்டும்!
(திருப்பாவை, சிலப்பதிகாரம், இன்னும் பிற நூல்களைப் படிக்கும் பொழுது திருக்கோயில்களில் பயன்பட்ட இசைக்கருவிகளில் பறையும், சங்கமும், கொம்பும், எக்காளமும், செண்டையும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிய வரும். பறை என்பதை இன்றைய மிருதங்கம் என்று கொள்ளவும் முடியாது. காரணம் பறைகளின் வகைகளும் அமைப்பும் நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்குத் தமிழகக் கோயில்களில் இவையனைத்துமே பயன்படுத்தப் படுவதில்லை என்றே தெரிகின்றது. இந்த இசைக்கருவிகளை மீண்டும் மீட்டெடுத்துப் பயன்படுத்தினால் கோதை மனம் குளிர்வார் என்பதில் ஐயமில்லை.)
கோல விளக்கே! உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் கொடியே! நெடிய கோபுரமே! ஆலின் இலை மேலே துயில் கொண்ட சிறுவனே! எங்களுக்கும் அருள்வாய் எம்பாவாய்!
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Posts (Atom)